MENU

Show more

இன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்...

👉🏼என்ன நடந்தது ஜாக்டோ ஜியோவில்...

👉🏼கடந்த 6மாதமாக ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அரசு ஊழியர் ஆசிரியர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளுக்காக 1.Cps ரத்து , 2.ஊதியக்குழு நிர்ணயம்
3.20%இடைக்கால நிவாரணம் கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்..

👉🏼மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் ,  பேரணி ,  ஆர்ப்பாட்டம் என தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் சென்னை சேப்பாக்கத்தில் ஒன்று கூடினர்...

👉🏼ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டது..

👉🏼செப்டம்பர் 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ள நிலையில் சில சுயநல சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்திருப்பது வெட்க்கேடு...

👉🏼யாரை ஏமாற்றுகிறீர்கள்... நீங்கள் இழுத்த இழுப்புகெல்லாம் வந்த எளியவனையா ? என்ன கிடைத்துவிட்டது என போராட்டம் வாபஸ் பெற்றது தொடக்கபள்ளி அமைப்பு... நாளை எந்த முகத்தை கொண்டு உறுப்பினர்களை சந்திப்பீர்.. நீங்கள் பெட்டி வாங்க உங்கள் போதைக்கு நாங்கள் ஊறுகாயா ?

👉🏼இன்னும் களத்தில் உள்ள TNPTF எங்கே , 1985 லிருந்து ஏமாற்றும் நீ எங்கே... உனது சுயநல முகம் கிழிந்து தொங்குகிறது... வார்த்தைகள் தடித்து தான் வரும் உனது துரோக முகம் அப்படி... போராட்டத்தை உன்னால் ஒன்றும் செய்துவிடமுடியாது.... திட்டமிட்டபடி இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறும்.. தன்னெழுச்சியாக ஆசிரியர்கள் போராட்ட களம் காண்பர் .. எவனது தலைமையும் தேவையில்லை... CPS ரத்து & ஊதியக்குழு ஒன்றே எங்கள் தலைமை...

👉🏼போரில் புற முதுகிட்டு ஓடிய கயவர்களை தூக்கி எறியுங்கள்.. *இன்றும் , நாளையும் வேலைநிறுத்த களம் காண்போம் நமக்காக நாம் போராடுவோம்...*

நட்புடன்
R.R
*http://tnsocialpedia.blogspot.com*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026