MENU

Show more

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?

வெறும் உணவு கட்டுப்பாடுடன் எடையைக்குறைத்த அன்பரின் அனுபவம் !!!

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?

தங்கவேல்

இது எனது அனுபவத்தில் நான் கண்ட பலன். உடல் எடை அதிகமிருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும், அதன் தொடர்ச்சியாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுக்காமல் டயட் உணவினை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். 86 கிலோ இருந்தேன். தற்போது 56 கிலோ இருக்கின்றேன். உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனாலும் உடல் பருமனைக் குறைத்தேன். எப்படி?

நான் தவிர்த்த உணவுகள்
========================
1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்த்தேன்
2) புளியைத் தவிர்த்தேன்
3) உப்பைக் குறைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை பயன்படுத்தினேன்.
4) எண்ணெய் முற்றிலுமாக இல்லாமல் சாப்பிட்டேன்
5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச் சாப்பிட்டேன்
6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட்டேன்
7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடித்தேன்
8) இனிப்பை தொடுவதே இல்லை(எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சுவை இது)
9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி ஒரு கப் எடுத்தேன்
10) தேங்காயைத் தவிர்த்தேன்
11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் தவிர்த்தேன்.
12) மட்டன், சிக்கன் தவிர்த்தேன்

சாப்பிட்ட பொருட்கள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================
கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்
தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு
இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி
சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)
ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்
மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்வேன்.

பத்து மணிவாக்கில் சில மேரி பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்காது. புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்துவேன். கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே மாட்டேன். நாட்டுக்காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டேன்.

மாலை (4.00க்கு)
================

ஒரு கப் கிரீன் டீயுடன்,சில மேரி பிஸ்கட்டுகள்

இரவு(7.30க்கு)
===========

தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு
சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)
அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி

இடையிடையே இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவேன்

முக்கியமாக கவனிக்க வேண்டியது நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பத்துக்கு தூங்கச் சென்று விட வேண்டும்.

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வந்தேன். உடல் எடை 56 கிலோ வந்து விட்டது. தற்போது ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவேன். அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுவேன். மட்டன், மீன், சிக்கன் மாதமொருமுறைச் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகி விட்டது.

டாக்டர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். உடலுக்குத் தேவையான உணவினை மட்டுமே சாப்பிட்டால் நோய் எதற்கு வருகிறது?
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26956.html

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28