தலையங்கம்- நாங்கள் தமிழர்கள்... 👍🏼உலகில் முதலில் தோன்றிய இனம் எங்கள் தமிழகம் தான்... 👍🏼திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும் உலகம் எழுத கற்கும் முன்பே படைத்துவிட்டோம்.. கலாச்சரம் எங்கள் வாழ்வுரிமை, நீதி எங்கள் சாதி , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி , மயிலுக்கு போர்வை தந்த பேகன், நீதி காத்த மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி... 👍🏼பாரதி வீறு நடை போட்ட தாய்மண்ணடா எங்கள் தமிழகம்.. 👍🏼அத்தகு பெருமைமிகு தமிழ் பாரம்பரியத்தை அழிக்க பார்த்தால் விடுவோமா ? வெகுண்ட எழுந்த இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கிறது... 👍🏼நல்ல ஆட்சியாளர்கள் அமைத்திருந்தால் இன்று பச்சை குழந்தையும் போராட்ட களம் காணாமல் தாய் மடியில் உறக்கம் கொண்டிருக்கும்... 👍🏼சரி போனது போகட்டும் , இனி விரைவில் ஜல்லிகட்டு நடந்தேற அரசாணை பிறப்பிக்கப்படும்... தமிழர்கள் யார் என்று உலகம் பார்த்து விட்டது... பெருமை கண்டு தரணி வியக்கிறது... 👍🏼வாடிவாசல் திறக்கும் வேளையில் தமிழன் உரிமைக் கொடி பறக்கும் , இப்போது தான் கவனம் தேவை ஜல்லிகட்டு உலகமே பார்க்கும் வீர விளையாட்டாகி விட்டது, இதில் எந்த அசம்பாவிதமும் நடந்தேறிவிடக் கூடாது...