அயல் நாட்டுப் பேய் - பகுதி 5
அயல்நாட்டுப் பேய் பகுதி - 5 முன்கதை : பகுதி 4 பகுதி 3,2&1 குறுந்தொடர் ஆசிரியர் : மு.வெ.ரா (அயல்நாட்டு பேய் குறுந்தொடரை தொடர்ந்து வெளியிட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்... ஆசிரியர்) படம்: Newyorktimes பேய்க்கும் சாராவிற்கும் பல இவுகள் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது . வழக்கம் போல் இல்லாமல் பேய் கேட்கும் கேள்விகள் சற்று ஆழமாகவும் சமுதாய குறைகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் இருந்தன . சாரா உள்ளூர மகிழ்ந்தான். அப்படித்தான் ஒரு நாள் அயல் நாடுகளைப் பற்றி நீ என்ன நினைக்கிற என்ற துபேய் . நாங்கள் எல்லா நாடுகளையும் எங்கள் நாடாகத் தான் பார்ப்போம் , "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது எங்கள் முன்னோர் வாக்கு என்றான் . பேய் பேசத் தொடங்கியது . நீ உனது நாட்டை வரைபடமாக உன் கையால் வரைந்து பார்த்ததுண்டா? என்றது பேய் . ...