Posts

Showing posts from April, 2018

கணிணி அறிவோம் - பகுதி 4

Image
கணிணி அறிவோம் - பகுதி 4 CLICK HERE FOR PART 3,2&1 பரிமாற்றம்: நான்கு *தலைப்பு: Antivirus usage* வணக்கம். Image courtesy : quoara.com சென்ற பரிமாற்றத்தில் app management குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். என் மொபைலும், சிஸ்டமும் சிறந்த முறையில் app management செய்துவிட்ட பின்னரும் தொல்லைகள் தருகிறதே, அதற்கான காரணம் என்ன என யோசித்தால் நாம் இத்தனை நாட்களாக என்ன ஏதென்றே தெரியாமல் பயன்படுத்தி வரும் பிம்ப வார்த்தை 'Virus' தான் அது. பிம்பம்: கணினியாக இருந்தால் நாம் pen drive insert செய்தாலே கணினி பாழாகிவிடும், வைரஸ் வந்துவிடும் என்றும், மொபைலாக இருந்தால் Bluetooth on செய்தாலோ அல்லது பிறரிடமிருந்து Bluetooth வழியாக image/audio/video send or receive செய்தாலோ நம் மொபைலுக்கு வைரஸ் வந்துவிடும் என அதைச் செய்யாமலேயே முடிந்தவரை தவிர்த்துவிடுவோம். உண்மை நிலை: மேற்சொன்னவாறெல்லாம் கிடையாது. நீங்கள் கேள்விப்பட்டவை 1990களில் உண்மையாக இருந்தது. இன்னும் பல பேர் அதை உண்மையென்று நம்பிக்கொண்டிர

TNPTF கல்விச் செய்திகள் 30.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 17 ♝ 30•04•2018* 🔥 🛡பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆகாது. ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே23-இல் பத்தாம் வகுப்பு) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் 🔥 🛡தமிழகத்தில் 2018-2019 கல்வி ஆண்டு முதல் 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகள் "மிடுக்கு வகுப்பறை'களாக (Smart Class) மாற்றப்படும் -  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல். 🔥 🛡கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து - நாளிதழ் செய்தி. 🔥 🛡ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி . திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர். 🔥 🛡கணினி அறிவியல் பாடத்தை

HIGHER EDUCATION

Image
குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள் Image courtesy : foreighnstudies.com லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி , உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். அறிவியல் படிப்புகள் : B.Sc ( physics)  : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல்  M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.

இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு

இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்; அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியி

இடமாறுதல் கலந்தாய்வு 2018

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்* அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.  ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர். இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாகசேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது .இந்நிலையில், இந்தஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே

TNPTF - கல்விச் செய்திகள் 27.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 14 ♝ 27•04•2018* 🔥 🛡 இடைநிலை ஆசிரியர்கள்  உண்ணாவிரத போராட்டம் வாபஸ். அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின்  அடிப்படையில் சாதகமான முறையில்  பரிசீலனை செய்யப்படும்  என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது என போராட்டக்குழு அறிவிப்பு. 🔥 🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு. அரசு நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். 🔥 🛡பிளஸ் 1 பொதுத்தேர்வில் 40% மாணவர்கள் "ஜஸ்ட் பாஸ்" - ஆசிரியர்கள் அதிர்ச்சி 🔥 🛡NHIS திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள், பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth... 🔥 🛡DEE PROCEEDINGS- 01.08.2017 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்தல்-ஆ

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தக தயாரிப்பு பணிகள், நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையை, பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது. இதற்கான வழிமுறைகளை, புதிய பாடத்திட்டக்குழு தயாரித்துள்ளது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!!!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், ராபர்ட் பேட்டி ...

போராட்டம் வாபஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு !!!

Image
இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் , கம்யூனிஸ்ட் கட்சி , த.மா.க ஜி.கே வாசன் மற்றும் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வருகை தந்து ஆதரவளித்துள்ளனர்... தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலிவுற்றுள்ள ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது...

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தாள்?

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தாள்? பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1, தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர முதன்மை பாடங்களுக்காக 4 தேர்வுகள் உள்ளன. அவற்றையும் சேர்த்து 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மொழிப்பாடங்களின் தாள் 1, தாள் 2 தேர்வுகள் இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 4 முக்கிய பாடங்களிண் எண்ணிக்கையை மூன்றாக குறைக்

TNPTF - கல்விச் செய்திகள் 26.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 13 ♝ 26•04•2018* 🔥 🛡இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு  பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. 🔥 🛡பள்ளிக்கல்வித்துறை செயலரை தொடர்பு கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்!! 🔥 🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சுமூகத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! 🔥 🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியீடு 🔥 🛡ஊதிய முரண்பாடுகளை களைய "ONE MAN COMMITTEE" அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. G.O.Ms.No.138 (24.04.2018) 🔥 🛡பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - அரசுத்தேர்வு இயக்குநர் கடிதம் வெளியிட்டுள்ளார். 🔥 🛡பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 🔥 🛡ஆசிரியர்களுடன் தொடக்

இன்று மீண்டும் பேச்சுவார்த்தை - போராட்டம் முடிவுக்கு வருமா ?

Image
*ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை - மீண்டும் இன்று பேச்சுவார்த்தை* தொடக்க கல்வி இயக்குநருடன் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் நேற்று (25.04.2018) இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் இன்று  (26.04.2018) பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது

RRB STUDY MATERIAL - PART 2

RRB STUDY MATERIAL 1.)2014 QUESTION PAPER WITH KEY ANSWER ( FILE : SAKTHI ACADEMY) Click here to download PDF 2.) 101 speed tests RRB GROUP D Click here to Download PDF

உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி சாயும் ஆசிரியர்கள்!!!

Image
உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி சாயும் ஆசிரியர்கள் .. 108 ஆம்புலன்சில் மருத்துவமனைகளில் அனுமதி சென்னை: உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவராக மயங்கிவிழுந்து வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி அரசுபள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012-ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருப்பதாகவும், அதனை உடனடியாக களைய வலியுறுத்தியும் சென்னை டிபிஐ வளாகத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் போராடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போ

TNPTF கல்வி செய்திகள் 24.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 11 ♝ 24•04•2018* 🔥 🛡அரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை - ஊழியர்கள் & ஆசிரியர்கள் அதிர்ச்சி! 🔥 🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக 4 வகையில் சீருடைகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. 🔥 🛡நாமக்கல், சேலம் மாவட்டத்தில் விடுமுறையில் அறிவிக்கப்பட்ட பயிற்சி ஜுன் மாதம் ஒத்தி வைப்பு. 🔥 🛡தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. 🔥 🛡ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை

விடிய விடிய போராட்டம் - EXCLUSIVE REPORT

Image
விடிய விடிய போராட்டம் ... 2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண் களையக் கோரி நேற்று சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்... இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் குடும்பத்துடன் , குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டனர், மாலை விடுவித்தும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாது தொடர்ந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ... 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் வலுக்கிறது, விடிய விடிய கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது மனதை உருக வைத்தது...சுமார் 7000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... காலையில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தர இயலாது ,  கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்... இன்று போராட்ட குழுவின் பிரதிநிதிகள் போராட்

TAMILNADU ENGINEERING ADMISSIONS 2018- இன்ஜீனியரிங் அட்மிஷன்

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம். மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமான

நள்ளிரவிலும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்...

Image
நள்ளிரவிலும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்... கைது செய்யப்பட்ட *பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்* காவல்துறை கலைந்து சொல்ல நிர்பந்தித்தும்.... *இரவிலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது...*" ஏழாயிரம் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் கலைந்து செல்லாமல் உண்ணாவிரதத்தை  அப்படியே   தொடர்கின்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்!!!

Image
ஆசிரியர்கள் போராட்டம்                    சென்னை டிபிஐ வளாகத்தில் 2009 & TET ஊதிய மீட்புக் குழு  என்ற பதாகையின் கீழ் சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்... குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நெஞ்சை உருக வைத்தது... பாதிக்கப்பட்ட 7000 பேர் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சென்னை எக்மோரில்(Egmore) Raja Rathnam stadium பட்டினிப் போராட்டம்.       

கணிணி அறிவோம் - பகுதி 3- APP MANAGEMENT

Image
கணிணி அறிவோம் -  PART 3 * பரிமாற்றம்: மூன்று* Click here for PART 2& PART 1 *தலைப்பு: App management* Image courtesy : the best apps.org வணக்கம். சென்ற பரிமாற்றத்தில் memory management குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். சிறந்த முறையில் memory management செய்தும் என் மொபைலும், கணினியும் hang ஆகிறதே? ஏன்? என சந்தேகம் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். பொதுவாக appகள் குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காகவே நாம் install செய்து பயன்படுத்துகிறோம். App என்பது codingகளின் தொகுப்பே. நாம் நினைப்பதைப் போல நம் screenல் ஒரு appஐ திறந்தால் தான் அந்த app வேலை செய்கிறது என்பதில்லை. நாம் திறக்காமலேயும், பல appகள் தன்னிச்சையாக திறந்துகொண்டு screenற்கு பின்னால் இயங்கிக்கொண்டிருக்கும். அவற்றை background apps என அழைக்கிறார்கள். Computer: Ctrl+alt+del click செய்து processes click செய்தால் அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து appகளும் தெரியும், running programs எனும் tabல் மிகக் குறைவ

WORLD BOOK DAY - APRIL 23

ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம்... புத்தக தினம் உருவான வரலாறு இப்படித்தான்!.. #WorldBookDay#... 📕📗📘📕📗📘 புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள். ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன. அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகி

TNPTF கல்விச் செய்திகள் 23.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 10 ♝ 23•04•2018* 🔥 🛡தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தத்கல் முறையில்  இன்றும், நாளையும்  அந்தந்த DIET-ல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 🔥 🛡மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 🔥 🛡தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றிய துலுக்கவிடுதி நடுநிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம், பெற்றோருக்கு ரூ 1000 புதிய திட்டம் - நாளிதழ் செய்தி 🔥 🛡பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பகுதிநேர ஆசிரியர்கள் கவலை! மாற்றுப்பணி வழங்கி முழு ஊதியம் வழங்க கோரிக்கை.- நாளிதழ் செய்தி 🔥 🛡"புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன"  என  அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளார். 🔥 🛡தமிழக அரசின் இணை

IPL TODAY CSK vs SRH 22.4.18

Image
IPL TODAY  CSK vs SRH  மேட்ச் விமர்சனம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின... முதலில் பேட் செய்த CSK 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது...இந்த முறை வாட்சன் அவுட்டாக ராயுடு 37 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்... சுரெஷ் ரெய்னா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்... 183 ரன்கள் என்ற கொஞ்சம் எளிய ஸ்கோரை சேஸ் SRH முதல் ஓவரிலே விக்கெட் விழுந்து அதிர்ச்சி அளித்தது... அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் வில்லியம்ஸ் நிதானமாக ஆடி 84 ரன்கள் எடுத்தார்... இறுதியில் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டி இருக்க விறுவிறுப்பு உச்சகட்டமானது...கடைசி ஓவரை பிராவோ வீசினார்.. 3 பந்துகளில் 16 ரன்கள் , 19.3 - 6 ரன்கள் , 19.4 - 4 ரன்கள் , கடைசி 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க ரசிகர்கள் உச்சகட்ட பதட்டத்தை அடைந்தனர்... ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த SRH... சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்... 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் .. ரசிகர்களுக்கு சன்டே நல்ல பொழுதுபோக்காக அமைந்த

இன்ஜினியரிங் அட்மிஷன் 2018

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரும் படிப்பு இன்ஜினியரிங். 500க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஒன்றரை மாதத்துக்கும் மேலாக இரண்டு லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படும் நாட்களில் அண்ணா பல்கலைகழக வளாகமே மனித தலைகளால் நிரம்பி இருக்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்னரே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்படுவதால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றுவிடுவதால், குறிப்பிட்ட மாணவர்களின் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. இந்த பிரச்னையை தவிர்க்க 2018-19 கல்வியாண்டு முதல் இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இன்ஜினியரிங் கலந்தாய்வு விண்ணப்பித்தல் அறிவிப்பு வெளியானதும் இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் 44  அரசுக் கல்லூரிகளில் இணைய சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வு முடிவு வந்ததும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்யலாம். மாணவர்

புதிய தேர்தல் தேதி அறிவிப்பு!!! Society new election dates !!!

கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தேர்தல் தேதி அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டு ஆணை வழங்கியதை தொடர்ந்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது Click here to download PDF

TNPTF கல்விச் செய்திகள் 22.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 9 ♝ 22•04•2018* 🔥 🛡ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡தொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய "Mobile App" - பள்ளி கல்வி  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡M.phil / Ph.D, பயில - தடையின்மைச் சான்று பெறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 🔥 🛡போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் து

TAMILNADU ENGINEERING ADMISSIONS 2018

TNEA Admission 2018 Here, we are providing a tentative schedule of TNEA 2018 admission: EventsDates (Tentative) Notification Release DateIn the month of April 2018 Application form Availability Date3rd week of April 2018 Form Filling Last DateLast week of May 2018 Merit/Rank List Publication Date4th week of June 2018 Counselling Started4th week of June 2018 TNEA Application Form 2018 Candidates will get the application form through online mode or offline mode.The TNEA 2018 application form will be issued from the 3rd week of April 2018 till Last week of May 2018.TNEA Online Registration link will be provided in our website.Candidates will get the offline application from the TNEA designated center or by post.Before filling the application form, candidates must read the instruction carefully & fill form correctly.After filling the TNEA online application form 2018, candidates have to submit the form along with the relevant documents in the given add

SBI P.O RECRUITMENT-JOBS-2018- POSTS2000

Image
SBI PO Recruitment 2018 - 2000 Posts.. Recruitment of Probationary Officers in State Bank of India(Apply Online from 21-04-2018 to 13-05-2018) Advertisement No. CRPD/PO/2018-19/01 SBI Recruitment 2018 2019 Apply Online Application Form for 2000 Probationary Officer (PO) Posts through Official website www.sbi.co.in/careers/. SBI Probationary Officer (PO) Jobs Notification 2018 Released... Eligibility : Any degree  Vacant : 2000 posts  Click here for NOTIFICATION Click here for APPLY ONLINE

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் !!!

Image
பாரதிதாசன் : சில நினைவுகள்.. புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் இன்று பாரதிதாசன் நினைவு இல்லமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறி நிற்கிறது அந்த வீடு. ஐம்பதுகளில் ஒருநாள் முதல் முறையாக பாரதிதாசனைச் சந்திக்கும் ஆர்வத்தோடு வேலூரிலிருந்து புதுவைக்குப் புறப்பட்டுப் போனேன். மட்ட மத்தியான நேரம். தெருவை அடைந்தபோது ஆள் நடமாட்டம் அதிகமில்லை. ஒரு வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியை நெருங்கி, “இங்கே பாரதிதாசன் ஐயா வீடு எதுனு தெரியுமா?” என்றேன்.“தம்பி… யாருப்பா நீ?”என்று எதிர் வீட்டிலிருந்து கேட்டது ஒரு கம்பீரமான குரல். கையில் ஒரு புத்தகத்தை ஏந்தியபடி நின்றிருந்தவர், அவரேதான்! “நான்தான் பாரதிதாசன்… இப்ப என்ன வேணும் உனக்கு?” என்றார் குறும்பாக. அதுதான் அவருடன் முதல் சந்திப்பு. “ஐயா… வேலூரிலிருந்து வர்றேங்க… என் ஆசான் கோவேந்தன் சொல்லி வந்திருக்கேன்” என்றதுமே பாரதிதாசன் முகம் அகன்று மகிழ்ச்சியில் விரிந்தது. “அடடே… அப்ப நீ ரொம்ப வேண்டப்பட்ட பையன். உள்ளே வா” என்று அழைத்துப் போனவர், என்னைப் பேசக்கூட விடாமல், வீட்டில் இருந்தவர்களை அழைத்து எனக்கு விருந்தோம்பல் வைத்துத் திணறடித்தார். இத்தனைக்கும் அப

IPL2018- CSK vs RR

Image
IPL 2018  CSK vs RR  நேற்று நடந்த IPL லீக் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் விளையாடியது... டாஸ் வென்ற ராஜஸ்தான் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது... அதிரடி மன்னன் :  முதலில் களமிறங்கிய SHANE WATSON , RAYUDU துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர் , SURESH RAINA கம்பெனி கொடுக்க அதிரடி வேங்கையன் SHANE WATSON 57பந்துகளில் 106 ரன்கள் (4s-9&6s-6) விளாசினார்... SHANE WATSON அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது... சென்னை அணி வெற்றி : 205 ரன்கள் என்ற இமாலய ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிவால் தடுமாறியது... இறுதியில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது...  சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , ஆட்ட நாயகன் - அதிரடி மன்னன் #SHANE WATSON ... ©tnsocialpedia 

TNPTF கல்விச் செய்திகள் 21.4.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 சித்திரை 8 ♝ 21•04•2018* 🔥 🛡கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். தேர்தல் நடத்தலாம்;  முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவு. 🔥 🛡ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப (80 வயதிற்கு மேல்) ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும்  பணிக்கொடை பலன் விதிகளிலும் பணிக்கால அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 🔥 🛡தொடக்க கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென  தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 🔥 🛡நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பு. 🔥 🛡பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் சேர்க்க RTEஇன் படி  25% இடஒதுக்கீடு வழங்ப்படும். தங்களது இருப்பிடத்துக்கு அருகில்

கடல் சீற்றம் : எச்சரிக்கை

கடல் சீற்றம் : எச்சரிக்கை தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதி களில், இரண்டு நாட்களுக்கு, 8.25 அடி முதல், 11.50 அடி உயரத்திற்கு, கடல் அலைகள் எழும்பும். எனவே, கடலுக்கு அருகில், யாரும் செல்ல வேண்டாம்' என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் அளித்த பேட்டி: தமிழகத்தில், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், குறிப்பாக, கன்னியா குமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில், கடல் சீற்றம் காணப்படும். இன்று காலை, 8:30 மணியில் இருந்து, நாளை இரவு, 11:30 மணி வரை, 18 முதல், 22 வினாடிகள் இடைவெளியில், 8.25 அடி முதல், 11.50 அடி உயரத் திற்கு, கடல் அலைகள் எழும். மிக கடுமையான அளவுக்கு, கடல் சீற்றத்துடன் காணப்படும் என, இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள், அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுரை களை பின்பற்ற வேண்டும். கடல் சீற்றத் தின் காரணமாக, கடற்கரை பகுதிகளில், இதன் தாக்கம் பெரிதும் காணப்படும். எனவே, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், ப

POSITIVE ENERGY -PART3

Image
POSITIVE ENERGY -PART3- SURVIVA  * ஒரு குட்டி கதை* பொறுமையா வாசியுங்க வாழ்க்கை என்னவென்று புரியும் Image courtesy : dreams time.com அடர்ந்த காடு ஒன்று இருந்தது.  அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார். நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மன

RRB STUDY MATERIALS 2018- PART 1

RRB STUDY MATERIALS 2018- PART1 2013 QUESTION PAPER WITH ANSWER- Click here to download PDF FILE COURTESY: SAKTHI ACADEMY

கூட்டுறவு தேர்தல் நடத்த அனுமதி

Image
FLASH NEWS: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி  வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது* என்றும் தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

உலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள்

* உலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள் !* *- இரா.தமிழ்க்கனல்* என்னதான் தகவல்தொடர்புத் துறை வளர்ச்சியானது வேகமாக இருந்தாலும், புத்தகம் வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்து விடவில்லை. தமிழகம் முழுவதும் புத்தகக்காட்சிகள் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சி. எல்லா நகரங்களிலும் புத்தகக்காட்சிகள் நடந்தாலும், சென்னையில் நடக்கும் புத்தகக்காட்சிகளுக்கு தனி மவுசு உண்டு. ஏப்ரல் 23-ம் தேதி வரும் உலகப் புத்தக தினத்தையொட்டி, *வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை சென்னைப் புத்தகச் சங்கமம் நடத்தப்படுகிறது.* வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ஆறாவது ஆண்டாக நடக்கவுள்ள *இந்தப் புத்தகக்காட்சியை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைக்கிறார்.*  உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23) *கவிஞர் வைரமுத்து உரையாற்றுகிறார்.*  24-ம் தேதி ‘நான் ஏன் (சு)வாசிக்கிறேன்’ என்ற தலைப்பில் கவிஞர் ஜோ மல்லூரியும் இயக்குநர் கவிதாபாரதியும் பேசுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிப் புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறும். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் *அனைத்துப் ப

கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply

Image
கணினி அறிவியல் பாடம்  3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட   கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு.. *புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு  அறிவியல் பாடத்தில் தனி அலகாக      கணினி அறிவியல் பாடத்தை  சேர்க்கப்பட்டுள்ளது. **அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும்  சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***கணினி அறிவியல்   பாடத்தை   ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.

நீட் தேர்வு - விதிமுறைகள்

    நீட் தேர்வு - விதிமுறைகள்  *புதுடில்லி : இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது.*        *இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.*  ◾◾      *தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.* ◾◾           *கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது*