Posts

Showing posts from February, 2016

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

Image
மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: வரி விவரங்கள்: * வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை. * புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு * 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். * 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு. * வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது. வரிச் சலுகைகள்: * ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட

VAO 2016 EXAM TENTATIVE ANSWER KEYS FROM trbtnpsc.com

VAO EXAM KEY ANSWERS FROM TOP MOST ACADEMY'S vidiyal maths key Sri Malar academy PV academy

VAO EXAM FEB 28,2016 TENTATIVE ANSWER KEY from NR IAS ACADEMY

VAO EXAM FEB 28,2016 TENTATIVE ANSWER KEY VAO EXAM KEY- CLICK HERE TO DOWNLOAD PDF FILE File courtesy padasalai.net

VAO EXAM 2016 ANSWER KEY FOR VILLAGE ADMIN FROM VIDIYAL ACDAMY

VAO EXAM FEB 28,2016- TENTATIVE  ANSWER KEY CLICK HERE TO PDF DOWNLOAD vao village admin ques key - click her

தமிழ் எங்கள் தமிழ் .... உலகின் முதன் மொழி

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம். 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம். 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இ

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY... 1-ii  2-i  3-i 4-iii 5-ii 6-iii 7-ii 8-i 9-iii 10-iv 11-iv 12-ii 13-i 14-iv 15-ii 16-i 17-iii 18-i 19-iv 20-iii 21-i 22-ii 23-iv 24-i 25-iii 26-iv 27-iv 28-iii 29-ii 30-i 31-ii 32-iii 33-i 34-iii 35-iv 36-i 37-iii 38-iv 39-i 40-ii 41-ii 42-iv 43-iii 44-i 45-ii 46-i 47-iii 48-ii 49-i 50-ii 51-i 52-iii 53-iv 54-ii 55-iii 56-i 57-ii 58-iv 59-iv 60-iii 61-iv 62-iii 63-i 64-iii 65-ii 66-i 67-ii 68-ii 69-i 70-iv 71-iii 72-ii 73-iii 74-iii 75-i 76-iii 77-iv 78-i 79-iii 80-iv 81-ii 82-ii 83-i 84-iv 85-iii 86-iii 87-iv 88-iii 89-ii 90-ii... Thank you All Answers are tentative

VAO தேர்வு 2016

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம் முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்

புண்ணியமே அசுத்தமானது...

மகாமகக் குளத்தில் மலக்கழிவு28சதவிகிதம்; சிறுநீர்க்கழிவு40சதவிகிதம்! - ⏩மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு ⏩⏩கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. ⏩கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ⏩கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ⏩இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீர

ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை * ரயில்வேயின் தொலைநோக்கை கனவாக்க முக்கியத்துவம் * ரயில்வேயின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது * சவாலான சூழ்நிலையில் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறோம். *  2016 - 17-ம் நிதியாண்டில் ரூ. 1.8 லட்சம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். * சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை * ரயில்வே கட்டணத்தை  உயர்த்தாமல் மற்ற வழிகளில் நிதி வருவாயை உயர்த்த முயற்சி *  இயக்க விகிதம் 92 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்ப்பு * பட்ஜெட்டின் முதல் இலக்கு பயணிகளின் சேவையை உயர்த்துவது * ரயில்வேயின் பணிச்சூழலை புணரமைக்கும் திட்டம் 2500 கீ.மீ நீளம் அகல ரயில்பாதை * கடந்த ஆண்டை விட ரயில்வேயில் முதலீட்டை இருமடங்காக்க திட்டம் * கடந்த பட்ஜெட்டிலெ் அறிவிக்கப்பட்டவைகளில் பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. * 139 திட்டங்கள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன. * 2500 கீ.மீ நீளமுள்ள ரயில்பாதைகள் அகல ரயில்பாதைகளாக்கப்படும். * ந

jobs at H.C2016

சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

வேலை நிறுத்தம் வாபஸ்

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு. இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது. முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவ

110 விதியின் கீழ் அரசு அறிவிப்பு

Image
அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்

CPS திரும்பப் பெற முடியாதா?

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல. அமைச்சர்களின் உறுதிமொழி தமிழ்நாடு அரசு ஊழியர்

தீவிரமடையும் போராட்டம்

Image
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் 8-வது நாளாக போராட்டம்: தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது. சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது, அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது. மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, ஓய்வூதியத்துறை, புள்ளியியல் துறை உட்பட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் அரசு ஊழியர்கள் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பினர். பின்ன