Posts

Showing posts from November, 2017

மழை விடுமுறை 1.12.17

👉🏼தமிழகத்தில் கனமழை  காரணமாக *இன்று (1.12.17)* கீழ்காணும் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது... 1.சென்னை 2.காஞ்சிபுரம் 3.விழுப்புரம் 4.திண்டுக்கல் 5.தேனி 6.சேலம் 7.திருவண்ணாமலை 8.திருவள்ளூர் *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼4மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 1.கன்னியாகுமரி 2.மதுரை 3.நெல்லை 4.தூத்துக்குடி  *http://tnsocialpedia.blogspot.com* 👉🏼நீலகிரி 4தாலுக்காக்கள் விடுமுறை பதிவு செய்த நேரம் 07.23AM *http://tnsocialpedia.blogspot.com*

புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

குமரி அருகே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு  கன்னியாக்குமரி அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில், 210 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்திய வானிலை மையமும் அதனை உறுதி செய்துள்ளது.

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராம

திருவண்ணாமலை அதிசயம்......!

திருவண்ணாமலையாரை பற்றி படித்து பலன் பெறுங்கள்....,!! திருவண்ணாமலை அதிசயம்......! திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! ! திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.  ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.  நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் ! அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.  ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.  இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 2

அயல் நாட்டுப் பேய் பகுதி-4

அயல் நாட்டுப் பேய் பகுதி-4   குறுந்தொடர்- ஆசிரியர் மு.வெ.ரா                                  விடியல் வெளியே வரத்தொடங்கியது .   நேற்றிரவு சற்று தூங்குவதற்கு நேரம் ஆனதால் வழக்கம் போல் இல்லாமல் தாமதமாகவே எழுந்தான் சாரா . அன்று ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்  . இரவில் பசியோடு படுத்ததால் வயிறு வறண்டு இருந்தது . சோறு கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று மாடியிலேயே இருந்த செங்கல்லையும் கொஞ்சம் விறகுகளையும் வைத்து அடுப்பு மூட்டினான் . அரிசி வேகும் முன்னாடியே குளித்து  முடித்துவிட்டான் . பெரிய தட்டு ஒன்றை எடுத்து அதுல கொஞ்சம் நெருப்பு அள்ளிப் போட்டு சுருங்கியிருந்த தன் சட்டையை அயன் பண்ணிக்கொண்டான் .இந்த காலத்திலயும் இப்படிச் செய்வதற்கு காரணம் அந்த அவுஸ் ஓனர் தான். கரன்ட் பில் பிரச்சனை. 5 ரூ      பான்ட்ஸ்  எடுத்து முகத்திலும் சட்டையிலும் பூசிக்கொண்டான் . ஆக்கி வைத்த கஞ்சியை உப்பு போட்டு குடிச்சிட்டு வேக வேகமா புறப்பட்டான் .  மார்க்சிம் கார்கி எழுதிய 'தாய் ' நாவலை கையில் பிடித்துக் கொண்டே போராட்டக் களத்திற்குச் சென்றான் சாரா   .    பேயும் அவனுடன் புறப்பட்டது . பேய் அவன் கண்ண

தலையங்கம் - யார் பொறுப்பு...

*தலையங்கம்* *யார் பொறுப்பு...* இந்த நாட்டில்.... 👉🏼நோயாளி இறந்தாலோ- தற்கொலை செய்து கொண்டாலோ மருத்துவர் தண்டிக்கப் படுவதில்லை... 👉🏼விபத்தை ஏற்படுத்திய டிரைவர் உயிரோடு தப்பினாலும் அவருடைய லைசென்ஸ் கேன்சல் செய்யபடுவதில்லை... 👉🏼குற்றவாளி தற்கொலை செய்து கொண்டால் போலீஸோ வக்கீலோ நீதிபதியோ பணிநீக்கம் செய்யபடுவதில்லை... 👉🏼கடன் வாங்கிய வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டால் வங்கி ஊழியரோ , மேனேஜரோ பணிநீக்கம், கைது செய்யபடுவதில்லை.... 👉🏼உதாரணம் ஏராளம்...சினிமா படம் ஒன்றில்  ஊருக்கு இளைச்சவன் மூன்று பேர்.. என கீழே உள்ளவர்களை சொல்வார்கள்... 1.பிள்ளையார் கோவில் பூசாரி 2.பழைய துணிக்கு பக்கெட் விக்கறவ 3.ஸ்கூல் வாத்தியாரு... 👉🏼அதற்காக இறந்த குழந்தைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என சொல்லுமளவுக்கு நாங்கள் பொறுப்பற்றவர்கள் கிடையாது... புள்ளிவிவர கல்விமுறையில் ஆசிரியர்களுக்கு தரப்படும் நெருக்கடி , ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமை காட்ட வேண்டிய  சூழலை உருவாக்குகிறது... 👉🏼இந்த காரணத்தையாவது இந்த சமூகம் உணர்ந்து கொண்டால் அதுவே ..... ? அதுமட்டும் போதாது... வருத்தங்களுட

கம்ப்யூட்டரே இல்ல; இணையதள சேவையாம்! தலைமை ஆசிரியர்கள் ஆதங்கம்

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கடந்த மாதத்தில் இணையதள சேவை வழங்குவதாக, தெரிவித்த அமைச்சரின் அறிவிப்பு, தண்ணீரில் எழுதிய வார்த்தைகள் போல் ஆனதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தலா மூன்று கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு முன், இவை வழங்கப்பட்டதோடு, பராமரிப்பு நிதி ஒதுக்காததால், பழுதடைந்த நிலையில், ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளன.இதை, இ-வேஸ்ட்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இருந்தால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, ஐந்து முதல், ஏழு கம்ப்யூட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவலக பணிகளுக்கு கூட, பல பள்ளிகளில், போதுமான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், கடந்த அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தருவதாக அறிவித்தார். ’கம்ப்யூட்டரே இல்லாத நிலையில், இணையதள வசதியை அமைத்து தருவத

BRTE பணிகள் - RTI பதில்

Image
ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிகள் RTI விளக்கம்...

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்...

டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை திருத்தம் செய்யக் கோரி அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. இரு சங்கங்களின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ஐடிபிஐ வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து, கடந்த 1.11.2012 இல் இருந்து ஐடிபிஐ நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் வங்கியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்து 25 சதவீதமாக இருக்கிறது. அதேபோல வா

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

TET பணி - அமைச்சர் அறிவிப்பு

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

SABL LESSON PLAN - RTI விளக்கம்..

Image
தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத வேண்டுமா RTI விளக்கம் - DATE : 06/07/2015 நன்றி : பாடசாலை.நெட்

TNPTF கல்விச் செய்திகள் 20.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 கார்த்திகை 4~20.11.17🗓* ☀அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா? RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஈடுப்படுத்த கூடாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. ☀பாடத்திட்ட மாற்றம் - இன்று முதல் துவக்கம்!: TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது: மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  அறிவிப்பு ☀அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு கல்விக்(சிறப்பு/தேர்வு/இதர) கட்டணங்கள் செலுத்த வேண்டும்: வகுப்பு மற்றும் பாடம் வாரியான முழு விவரங்கள்: RTI மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ☀ SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள் ☀நிகர்நிலை பல்கலைகழகங்கள் 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பண்படுத்தக்கூடாது என்ற UGCன் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்க

SABL WORKDONE - RTI விளக்கம்

Image
1 முதல் 4 ம் வகுப்பும் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் WORK DONE REGISTER பராமரிக்க வேண்டுமா RTI விளக்கம்...

ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு

Image
கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு - அ.க.இ மாநிலத் திட்ட இயக்குநர். ☀ஆரம்ப மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, ☀நவம்பர் 20 முதல் 30 வரை நடக்க இருந்த, *☀கற்றல் விளைவுகள் பயிற்சிகள்* அனைத்தும், ☀பயிற்சிக் கட்டகங்கள் அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் *ஒத்திவைக்கப்படுவதாக,* அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.

மொபைல் - ஆதார் இணைப்பு

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் த

TNPSC CCSE JOBS 2017-18

*தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அறிவிக்கை எண் : 23/2017 நாள்:14.11.2017* ☀ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 (தொகுதி-IV), 2015-2016. 2016-2017 மற்றும் 2017-2018 ஆம்.ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி. தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், ☀நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 13.12.2017 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ☀விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ☀இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும், அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். *☀தமிழ்நாடு அமைச்சுப் பணி (குறியீட்டு எண் 050) :* ⚡494 - கிராம நிர்வாக அலுவலர்கள் (பதவிக் குறியீட்டு எண் 2025) *☀தமிழ்

TNPTF கல்விச் செய்திகள் 15.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி29~15.11.17🗓* ☀அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்! -"அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது" என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ☀அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பிற்கு சுவரோவியம்! வண்ணமயமாகிறது 70 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் - நாளிதழ் செய்தி ☀சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ☀ தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். ☀புதுச்சேரி அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டவர் குறித்து தணிக்கை செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். பணி நியமனத்துக்கு தனி

இன்றைய செய்தி துளிகள் 14.11.17

இன்றைய செய்தி துளிகள்... சென்னையில் கன மழை பெய்யுமா? மழை படிபடியாக குறைய வாய்ப்பு , வானிலை மைய இயக்குனர்    பாலச்சந்திரன் விளக்கம் 👉🏼உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-இல் தீர்ப்பு! 👉🏼முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'! 👉🏼மேம்பட்ட வசதிகளுடன் சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை திறப்பு 👉🏼நூலிழையில் உயிர் தப்பிய சிறுமிகள்: இதனை அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது 👉🏼சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அறிவிப்பு! 👉🏼அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை 👉🏼பாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்! 👉🏼ஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு: 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி 👉🏼அன்னபூர்ணா ஸ்டூயோவில் தீ விபத்து! 👉🏼கோயில் தரிசனத்திற்கு பாகுபாடு காட்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ‘👉🏼சங்க தலைவன்’ படத்தில் ந

பாரத் நெட் சேவை

மத்­திய அரசு, ‘பாரத் நெட்’ திட்­டத்­தில், 2019 மார்ச்­சுக்­குள், அனைத்து கிரா­மங்­க­ளி­லும், அதி­வேக அகண்ட அலை­வ­ரிசை சேவையை வழங்க திட்­ட­மிட்டு உள்­ளது. இத்­திட்­டத்­தின், இரண்­டாம் கட்ட பணிக்­கான அறி­விப்பை, மத்­திய அரசு நேற்று வெளி­யிட்­டது. இதை­ய­டுத்து, 30 ஆயி­ரம் கிராம பஞ்­சா­யத்­து­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை­களை வழங்க, ஆர்­ஜியோ நிறு­வ­னம், 13 கோடி ரூபாய் முன்­ப­ணம் அளித்­துள்­ளது. ஏர்­டெல் நிறு­வ­னம், 30,500 கிராம பஞ்­சா­யத்­து­க­ளுக்கு, அகண்ட அலை­வ­ரிசை சேவை வழங்க, முன்­ப­ண­மாக, 5 கோடி ரூபாய் வழங்கி உள்­ளது. இது குறித்து, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர், ஜெயந்த் சின்கா கூறி­ய­தா­வது: பாரத் நெட் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டப் பணி, 31 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில் மேற்­கொள்­ளப்­பட உள்­ளது. அகண்ட அலை­வ­ரிசை சேவைக்­காக, 1.50 லட்­சம் கிராம பஞ்­சா­யத்­து­களில், கண்­ணாடி நாரிழை கேபிள்­கள் பதிக்­கப்­பட உள்ளன. ஏற்­க­னவே, 48 ஆயி­ரம் கிரா­மங்­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை துவங்கி விட்­டது. மேலும், 75 ஆயி­ரம் கிரா­மங்­கள், சேவையை துவக்க தயா­ராக உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்

TNPTF கல்வி செய்திகள் 14.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி28~14.11.17🗓* ☀பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் முறைகேடு சர்ச்சை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பிள்ளார். ☀G.O Ms.No. 333 Dt: November 09, 2017  PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders Published. ☀TNPSC-CCSE-IV (Group 4 & VAO Combined) Notification will be released today.(14.11.2017) Date of Examination: 11.02.2018 Last Date for Apply: 13.12.2017 ☀பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிடவேண்டும் என பல்கலைக்

அறம்’ அடையாளம்

*என் கருவி 8 குழந்தைகளை போர்வெல்லிலிருந்து மீட்டிருக்கிறது..!” - ‘அறம்’ அடையாளம் காட்டிய மணிகண்டன்*  *#VikatanExclusive* மூடப்படாத போர்வெல் குழிகளில் ஏதும் அறியாக் குழந்தைகள் விழுந்து, அதை மீட்க முடியாமல் பலியான சம்பவங்கள், நம் நாட்டில் தொடர்ந்து நடந்துவந்தன. 2015-க்கு பிறகு அந்தக் கொடுமையான சம்பவங்கள் குறைந்துள்ளன. அதற்குக் காரணம், மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் கண்டுபிடிப்பு. ஐ.டி.ஐ ஆசிரியரான மணிகண்டனின் இந்தக் கருவியை தேசப் பாதுகாப்பு அமைப்புகளும் பல்வேறு மாநில நிர்வாகங்களும் பயன்படுத்திவரும் நிலையில், தமிழக அரசோ அவருடைய கண்டுபிடிப்பைப் பயன்படுத்த சுணக்கம்காட்டிவருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'அறம்' திரைப்படத்தில் அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பையும் அவருடைய பங்களிப்பையும் அங்கீகரித்து வெளிப்படுத்தியுள்ளதன்மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார், ஐ.டி.ஐ. ஆசிரியர் மணிகண்டன். மதுரை முத்துப்பட்டியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டனை அவருடைய ஆய்வுக்கூடத்தில் சந்தித்தோம். “என்னுடைய சொந்த ஊர் கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புதூர். திருநெல்வேலி அரசு ஐ.டி.ஐ-யில் ஃ

குருப் 4 தேர்வு அறிவிப்பு 2017

Image
2018-பிப்.11 ல் குரூப்-4,வி.ஏ.ஓ., தேர்வு :டி.என்.பி.எஸ்.சி சென்னை: அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர்-13 ம்தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளையும் தனித்தனியே நடத்த ரூ.15 கோடி செலவாகும். காலதாமதம், பணவிரயத்தை தவிர்க்கவே ஒன்றிணைத்து நடத்துவதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(நவ.14) வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : தினமலர்

அயல் நாட்டு பேய் - பகுதி 3

                அயல் நாட்டுப் பேய்                         பகுதி .3 முன்கதை சுருக்கம் பகுதி 1 Click here பகுதி 2  Click here                        அவன் அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்தது. "யார் நீ? " என்றான் சாரா. 'நானா ? என்றது பேய் .ஆமாம் என்றான் .பேய் என்றது. சாரா சிறிதும் பயப்படவில்லை ஏன் என்றால் அவன் ஒரு தைரியமான இளைஞன் .          பேயா?             ஆம் ,அயல்நாட்டுப்பேய். அயல் நாட்டுப் பேயா? இங்கு என்ன பண்ணுற ?   எனக் கேட்டான் .        நான் கடந்த சில நாட்களாக இந்த பகுதியிலதான் இருக்கேன் . அவ்வப்போது இந்த பூமியை சுற்றி வருவேன். எதேச்சையாக இந்த பக்கம் வரும் போது உன்னை பார்த்தேன். கொஞ்ச காலமா தொடர்ந்து பார்க்கிறேன் நீ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்ச .அதனால  உன்னைப் பார்க்க வந்திருக்கேன் . என்றது பேய்     .            அப்படியா ?             அப்படி என்ன வித்தியாசத்தை நீ என்னிடம் கண்டே? எனக் கேட்டான் சாரா .          "இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் இரவில கையில் ஒரு ஒளி - ஒலி  டப்பியை (phone)வைத்துக் கொண்டு தலைக்கவிழ்ந்த படி அதைத் தடவி தடவி பார்த்துக் கொள்கிறார்கள்.

R.L - 2018 மத விடுப்பு

*♏🌐🌐RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்* 🌟  *ஜனவரி:* 1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம். 2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை. 3. 31.01.2018 - புதன் - தைப்பூசம். 🌟  *பிப்ரவரி:* 1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை. 2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன். 🌟  *மார்ச்:* 1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம். 2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா. 3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன். 🌟  *ஏப்ரல்:* 1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே. 2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ். 3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி. 🌟  *மே:* 1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத். 2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு. 🌟  *ஜூன்:* 1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர். 🌟  *ஜூலை:* 1. RH இல்லை. 🌟  *ஆகஸ்ட்:* 1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு. 2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா. 3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம். 4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.

ஆன் - லைன் பத்திரப்பதிவு

ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம் தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம். தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற மு

அடுத்த 5 நாள் பலத்த மழைக்கு வாய்ப்பு! நவம்பர் 12,2017

அடுத்த 5 நாள் பலத்த மழைக்கு வாய்ப்பு! M குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் 3 நாள்கள் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் அறிவித்துள்ளார். இதில் சென்னை கடல்பகுதியில் மிக கனமழை பெய்யும். மேலும் வட கடலோர மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TNPTF கல்வி செய்திகள் 11.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி25~11.11.17🗓* ☀03.02.17 இயக்குநரக முற்றுகையின் தொடர் நடவடிக்கை குறித்த பொதுச்செயலாளர் அறிக்கையினை நேற்று  வெளியிட்டுள்ளார். ☀கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ☀திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை ☀செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் இயங்கும் *தமிழ்க் கலைக்கழகம் புதிய 100 கலைச்சொற்களை வெளியிட்டுள்ளது*. இதில் கருத்தோ திருத்தமோ / புதிய அயல்மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்த விருப்பினால், dtedpt1974@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ☀நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஎஸ்இ நடத்தும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை இனி புதிய அமைப்பு நடத்தும், சிபிஎஸ்இ நடத்தாது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் தேசிய தேர்வு முகமை  மாவட்ட வாரியாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ☀ 23.08.2010 த

கமலின் புதிய கட்சி உதயம் ..

தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின் கட்சி பெயர் அறிவிப்பு: கமல் சென்னை, ''கட்சி ஆரம்பிப்பதற்கு முன், மக்கள் மனநிலையை அறிவதற்காக, தமிழகம் முழுவதும், ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதன்பின், கட்சியின் பெயர், கொடி குறித்து முடிவெடுப்பேன்,'' என, நடிகர் கமல் தெரிவித்தார்.நடிகர் கமல், தன், 63வது பிறந்த நாளை,நேற்று கொண்டாடினார். பின், அவர் அளித்த பேட்டி: விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோரை, நாட்டை சுற்றிப் பார்த்து, மக்களை புரிந்து கொள்ள, அவர்களது முன்னோடிகள் அறிவுறுத்தினர்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுவோர், மக்களையும்,மண்ணையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், நாட்டை சுற்றிப் பார்க்க செல்கின்றனர். அதேபோல், அனைத்து தரப்பு மக்கள் குறித்து அறிவதற்காக, நானும் ஜனவரி முதல், மாநிலத்தை சுற்றி வர திட்டமிட்டிருக்கிறேன். பின், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கட்சி பெயர் குறித்தும் அறிவிப்பேன். அதற்கான ஆயத்தங்களை, இப்போதே துவங்கி விட்டேன். கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன், சில முன்னேற் பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அஸ்திவாரம் பலமாக இருக்க

TNPTF கல்வி செய்திகள் 8.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 22~8.11.17🗓* ☀ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தின்படி பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு. ☀பள்ளிக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள்- பாரத சாரணர் சாரணியர் இயக்கம் | அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த மாவட்ட முதன்மை / மாவட்ட கல்வி / மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்/ மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு. ☀DEE PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய சான்றுகள் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து ☀நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தியுள்ளார். ☀தமிழகத்தில் 12637 பகுதி நேர ஆசிரியர்கள் பணி

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு... அதிகாரம்!

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு... அதிகாரம்! மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை. பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது. தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்., 30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடி

கானலாகும் கணினி கல்வி - குறும்படம்

*மடிக்கணினி கொ'டுத்து என்ன பயன்.....?* *40000இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக அரசு அதனை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவது குறித்து கற்றக்கொடுக்காதது யார் தவறு ? Click here to view குறும்படம் இயக்கம்: திரு மணிவண்ணன்..

புதிய புயல் சின்னம் -

வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ந

தினத்தந்தி பவள விழா..

Image
தினத்தந்தி’யின் பவள விழா நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘தினத்தந்தி’க்கு புகழாரம் சூட்டினார். சென்னை,  உலக தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட ‘தினத்தந்தி’, ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்புடன் விளங்கும் ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. ‘தினத்தந்தி’ தனது பவள விழா ஆண்டை பூர்த்தி செய்து இருக்கிறது. இதையொட்டி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று ‘தினத்தந்தி’யின் பவள விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்காக காலை 10.30 மணி அளவில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடியை ‘தினத்த

வாட்சப் பார்வேட் - செய்திதுளிகள் 7.11.17

*🗞📰 TODAY'S TOP NEWS 📰🗞* 1 கலா உற்சவ் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது சில புதிய நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்க 68 நாட்கள் வரை ஆகும். 3 அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பேரை பிடிக்க முயன்ற போது திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் வருகிறார். 5 வடகிழக்கு மழை வெளுத்து வாங்க வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் மொத்த கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு