Posts

Showing posts from January, 2017

உள்ளாட்சி தேர்தல் 2017

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாடாஆஆஆஆஆ

👉👉👉👉 ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. 'கரண்ட் அக்கவுண்ட்'டுக்கு மட்டும்! டெல்லி: கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அவர்கள் எந்த உச்ச வரம்பும் இன்றி அவர்கள் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்யவும் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒருநாளைக்கு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பின் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து

SHALA SIDDDHI

SHALA SIDDHI ONLINE DEMO PDF click here

IT CALS2016-17within 5Mins

INCOME TAX CALCULATION WITHIN 5 MINS THANKS TO "TNPPGTA" & FILE MAKERS ... Click here to download EXCEL File

இந்தியா எனது உயிர் ...

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பெருமைமிகு குடியரசு தின வாழ்த்துக்கள்... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼தியாகத்தில் விளைந்த சுதந்திரம்.. 👉🏼அகிம்சையில் மலர்ந்த இந்தியா... 👉🏼அன்பில் பண்பட்ட தாய் மண்ணே வணக்கம்.... 👉🏼வீழ்வது நாமாக இருப்பினும், விதைப்பது ஒற்றுமையாக , வெல்வது இந்திய தேசமாக இருக்கட்டும்... நட்புடன் R.R for more http://tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு - காவல்துறை 2017

தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு! இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117 காவல்துறை: 1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46 2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941 சிறைத்துறை: இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்போர் - 1512 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம

போராட்டம் திசை திரும்ப வாய்ப்பு

போதும்... 👉🏼ஜல்லிகட்டு மூலமாக நம் காளைகளை காப்பாற்ற முடியும்,இதனால் நம் தலைமுறை பசுவின் பாலை மட்டுமே பருகும்... 👉🏼இதோடு ஜல்லிகட்டுக்கான போராட்டத்தை கைவிட்டு கலைவதே நம் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... அதைவிடுத்து நிரந்தர சட்டம் என எதையோ கேட்டு குழந்தைகள் போல அடம் பிடிப்பது வேடிக்கை... 👉🏼இதனால் சூழல் மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது... அசாதாரண சூழல் ஏற்படுத்தி மீடீயா பசிக்கு நாம் இரையாக கூடாது... 👉🏼இந்த போராட்டமே மத்திய,மாநில அரசு,  உச்சநீதிமன்றம் என எல்லா தளங்களிலும்  பெரிய எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்துள்ளது... இனி ஜல்லிகட்டிற்கு தடை என்ற பேச்சுக்கே இடம் பெறாது... 👉🏼போதும் நம் வெற்றியை கொண்டாட தயாராவோம்... ஜல்லிகட்டுக்கு அனுமதி... போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதே மேல்... 👉🏼ஹிப் ஆப் தமிழா போராட்டம் திசை திரும்பும்அச்சத்தால் போராட்டத்திலிருந்து விலகல்... 👉🏼இதுவே நிரந்தர சட்டம் , இனி 1000ஆண்டுகளுக்கு ஜல்லிகட்டு நடக்கும்.. 👉🏼மக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தக கைவிட்டு தமிழக மாண்பினை காப்பற்ற வேண்டும்... 👉🏼திசை திரும்பும் போரா

ஜல்லிகட்டு நிரந்தர தீர்வு - இதுவே வெற்றி

Image
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும்: மார்க்கண்டேய கட்ஜு ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டம் பிறக்கப்பிட்ட பிறகும் கூட இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் போதாது. அதை நிரந்தர சட்டமாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ''அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்'' என்று முதல்வர் ஓபிஎஸ் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில், ''ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம்'' என

தலையங்கம் - நாங்கள் தமிழர்கள்

தலையங்கம்- நாங்கள் தமிழர்கள்... 👍🏼உலகில் முதலில் தோன்றிய இனம் எங்கள் தமிழகம் தான்... 👍🏼திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும் உலகம் எழுத கற்கும் முன்பே படைத்துவிட்டோம்.. கலாச்சரம் எங்கள் வாழ்வுரிமை, நீதி எங்கள் சாதி , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி , மயிலுக்கு போர்வை தந்த பேகன், நீதி காத்த மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி... 👍🏼பாரதி வீறு நடை போட்ட தாய்மண்ணடா எங்கள் தமிழகம்.. 👍🏼அத்தகு பெருமைமிகு தமிழ் பாரம்பரியத்தை அழிக்க பார்த்தால் விடுவோமா ? வெகுண்ட எழுந்த இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கிறது... 👍🏼நல்ல ஆட்சியாளர்கள் அமைத்திருந்தால் இன்று பச்சை குழந்தையும் போராட்ட களம் காணாமல் தாய் மடியில் உறக்கம் கொண்டிருக்கும்... 👍🏼சரி போனது போகட்டும் , இனி விரைவில் ஜல்லிகட்டு நடந்தேற அரசாணை பிறப்பிக்கப்படும்... தமிழர்கள் யார் என்று உலகம் பார்த்து விட்டது... பெருமை கண்டு தரணி வியக்கிறது... 👍🏼வாடிவாசல் திறக்கும் வேளையில் தமிழன் உரிமைக் கொடி பறக்கும் , இப்போது தான் கவனம் தேவை ஜல்லிகட்டு உலகமே பார்க்கும் வீர விளையாட்டாகி விட்டது, இதில் எந்த அசம்பாவிதமும் நடந்தேறிவிடக் கூடாது

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

தமிழன்டா 💪🏼தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிகட்டு அனுமதி அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்... 💪🏼குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்படுகிறது.. 💪🏼குறிப்பு : 6மாதத்திற்கு மட்டுமே அவசர சட்டம் செல்லும் என மத்திய அரசு திருத்தம் செய்து ஒப்புதல்... For more http://tnsocialpedia.blogspot.com

முதல் வெற்றி

ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் : முதல்வர் அறிவிப்பு புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும். ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். டில்லியில் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார். இதன் அடிப்படையில், நேற்று டில்லியிலேயே தங்கி இருந்து, மிருக வதை தடை சட்டத்தின் கீழ் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மிருக வதை தடை சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, அவசர சட்டத்தை தமிழக அரசே பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அவசர சட்டவரைவு கொண்டு வந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பின்னர் கவர்னரி

Why we want jallikattu ?

Why we want jallikattu ? Guys, I have had doubts related to how Jallikattu can help with preservation of native breeds and why can't breeders raise these even without events like Jallikattu. I was curious and enquired many people who were supporting Jallikattu. The answers that I got like it helps with financing the bull were not convincing. The only convincing answer in favor of Jallikattu was that it must be held for cultural reasons which most of the people parroted. But none of them were able to point me out to the actual reasons why this was beneficial. The videos that I was pointed out to described in great detail the advantages of A2 milk and how the preservation of native breeds which have the gene for producing A2 milk is important but none of them addressed the important question - How does Jallikattu help in their preservation and what is in it for native breeders. After seeing Senapathy's replies in an interview and after talking to Raja Manickam, I have finally

இனி ஜல்லிகட்டு செய்தி மட்டும்....

இனி தமிழன் குரல் தான்... 👊🏼நமது TNSOCIALPEDIA 2ஆண்டுகளாக பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு , செய்திகள், இலக்கியம் , ஆன்மிகம் என பல்துறை தகவல்களை வெளியிட்டு வந்துள்ளது... 👊🏼சமீபத்தில் ஜல்லிகட்டு பற்றி வாக்கெடுப்பினை முதலில் பதிவு செய்தது.. 👊🏼தமிழகமே தன் பாரம்பரிய அடையாளத்தை மீட்க களம் காணும் இவ்வேளையில் ஜல்லிகட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை ஜல்லிகட்டு செய்திகளை மட்டுமே இனி tnsocialpedia  வெளியிடும்... 👊🏼வெல்வது தமிழாக தமிழனாக, நாமாக இருக்கட்டும் ... 👊🏼போராட்டகளத்தில் சட்ட உதவி, உணவு , தண்ணீர் தேவை என எல்லாவற்றையும் tnsocialpedia@gmail.com -க்கு மெயில் அனுப்புங்கள், உங்களுக்கு உதவும் உள்ளங்கள் தொடர்பு கிடைக்க tnsocialpedia வழி அமைக்கும்... நன்றி For more Jallikattu http://tnsocialpedia.blogspot.com

வாட்ஸ் அப் பார்வேட் - ஜல்லிகட்டு போராளிக்கு சட்ட உதவி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு யார்மீதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டாள் அவர்களுக்காக  உதிரத்துளிகள் வழக்கறிஞர்  அணி வழக்கு விவகாரங்களில்  ஆதரவாக செயல்படும் உதிரத்துளிகள்* மாநில,மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல்............ மாநில தலைவர் :- *திரு.கோவை.எஸ்.ஏ.தீன்* 9840506072 மாநில பொதுச் செயலாளர்:- *திரு.ஜெய் நாயுடு* 9500903090 மாநில பொருளாளர் :- *திரு.மில்ட்டன் ராபர்ட்* 9677692127 மாநில துணைத்தலைவர் :- *திரு.கண்ணன்* (ஈரோடு) 8870810985 மாநில துணை பொதுச் செயலாளர் :- *தியாக ராஜன்* (திருச்சி) 9659565616 மாநில மாணவரணி தலைவர் :- *திரு.விமல்* (சென்னை) 8144440407 *உயர்மட்ட ஆலோசனைகுழு*💥 *திரு.T.C.K.S.மகேந்திரன்*  (தலைவர்) *திரு.ஷாஜஹான்* (கோவை) 9047499000 *திரு.T.ஏ.ஆர்.பிரபு* (காட்பாடி) 9445502783. *திரு.முபாரக்* (புதுக்கோட்டை) 9976161857 *திரு.பிரேம் நசீர்* (காரைக்குடி) 8098179625 *மாநில ஒருக்கினைப்பு குழு💥* *திரு.சேக் அப்துல்லா* (கடலூர்) தலைவர் 8680868643 *திரு.வினு* 9965465305 *மாநில செயலாளர்கள்*💥 1) *திரு.சூர்ய பிரகஷ்* (நாமக்கல்) 7373

இது தான் தமிழன் கலாச்சாரம்

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண்  இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம்.  அங்கிருந்த சி.சி.டி.வியில்  பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர்.  பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான். ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி,இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு  ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப்

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

சீறும் ‛இளங்காளைகள்': ஸ்தம்பிக்கும் தமிழகம்- தினமலர்  சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்தம்பித்த தமிழகம் : சென்னை மெரீனாவில் சாலையின் இருபுறமும் மாணவர்கள் பெருமளவில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சோழிங்கநல்லூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள், மெரீனா பகுதியில் திரண்டதால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம் பகுதி, கோவை வ.உ.சி., மைதானம், திருச்சி விமான நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அப்பகுதிகள் முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது. போலீசார் தொடர் பேச்சுவார்த்தை : சென்னையில் 2வது நாளாக மா

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

*🔴🔵தற்போதைய செய்தி* *☦🅾மதுரை அலங்காநல்லுர்,அவனியாபுரம்,பாலமேட்டில் பதற்றம்.ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு.* மதுரை அலங்காநல்லுர்,அவனியாபுரம்,பாலமேட்டில் பதற்றம்.ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் அன்றும், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஜல்லிக்கட்டு நடத்த வழியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. அதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய தீர வேண்டும் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை போன்ற எதுவும் நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள் ஜனவரி 12

ஜனவரி 12: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள் மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா. ‘ எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 49 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம்

புதிய தலமுறை இன்று 151.17

புதிய தலைமுறை செய்தித்தாள் 15.1.17 click here PDF

பொங்கல் சிறப்பு கவிதை - கல்விசிறகுகள் ஆர்.கே

எண்ணாமல் இருந்த பேரும், ஓய்வையே மறந்த பேரும், உண்ணாமல் இருந்த பேரும், உறங்காமல் உழைத்த பேரும், கண்ணான கல்விதனை கற்றுத்தந்து காலத்தை வென்ற பேருமான ஆசிரிய நண்பர்களுக்கு, வணக்கம். வண்டெனப் பறந்து,      வாலிபர் உலகில் தொண்டு புரிந்திட்ட       தூயவனாம் தமிழ்மகனின் தலைநன்னாளாம், திங்கள் பன்னிரண்டு திகழும் ஆண்டில் ஓரெழுத்தால் உயர்ந்து நிற்கும்  தை முதல்நாள். இன்னனாளிலே . ....... புதுப்பானை புதியகோலம் புது மஞ்சள் புது காய்கள் புத்தரிசி இவைகொண்டு, தித்திக்கும் தீங்கரும்பின் துணையுடன்,புத்தாடை கட்டி, நன்னெறி வளர்த்து நற்பயன் செய்து உள்ளத்தால் பொய்யாது, உயர்நிலை நின்று, ஒழுக்கத்தால் பிறர்போற்றும் உயர்வாழ்க்கை வாழ்ந்து, சீர்பெற உழைத்து சிறப்புடன் வளர்ந்து, மலரினும் மென்மையாய், வானினும் தூய்மையாய், நிலையினிற் செம்மையாய், நினைவினிற் பசுமையாய், தொலைவழி போயினும் தோன்றிடும்  இன்பமாய்   கொண்டாடுவோம் இத்தைத் திருநாளை. கவலைகள் கழிந்து புன்னகைகள் புகுகின்ற, உழவர்களால் ஆன திருநாளாம், உழவர்களுக்கான திருநாளாம் இன்னன்னாளிலே அனைவருக்கும்  இனிய பொங்கல் திருநாள் வ

பொங்கல் சிறப்பு கவிதை - கவிஞர் பஞ்சா

🌷🌷💐💐🌻🌻 தமிழுக்கு திருக்குறளாம்.. தமிழினத்திற்கு பொங்கல் திருநாளாம்.. தைத்திங்கள் பிறந்தவுடன் மகிழ்ச்சி கொண்டோமே.. தரணி முழுதும் தமிழர்களாகிய நாம் யாவருக்கும் வழி பிறக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஆனந்தம் கொள்வோமே.. வாசலிலே வண்ணக் கோலங்கள்.. வீடுதோறும் பொங்கல் செய்ய மண்பாண்டங்கள்.. பால் பொங்கும் பச்சை அரிசி பொங்கலை மஞ்சள் கிழங்குடனும் பன்னீர் கரும்புடனும் பல்வகை காய்கறிகளுடனும் புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து வணங்குவோமே... நன்மைகள் பல நடக்கட்டும் என வேண்டி மகிழ்வோமே..🌷🌷💐💐🌻🌻..அனைவருக்கும் உங்கள் கு.பஞ்சாவின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்..💐💐💐 கு.பஞ்சாட்சரம் ஆசிரியர் பெரும்பாக்கம் அச்சரப்பாக்கம் ஒன்றியம்

பொங்கல் சிறப்பு கவிதை- தோழர் மணிகண்ட பிரபு

கடுப்பு பொங்கல்-மணி ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்தது மலையேறியாச்சு டி.வி பார்த்து முகநூலில் லைக்கிட்டு வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லி பட்டி மன்றம் பார்த்தவுடன் பாதிப் பொங்கல் முடிந்தது தேங்கி வழிந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் க்ளியர் சார்ட் செய்தவுடன் அன்ரூல்ட் நோட்டில் எழுதிப் பழகிய நிம்மதி ரிமூவ் டேக் செய்தபின்பும் கேன்டி கிரஷ்க்கு தவிர்த்து பொங்கல் தின்று படுத்தால் நாள் முழுதும் தூக்க தண்டனை தான் ரேசன் கடை கரும்பு தின்னுட்டு வீதியை பார்த்தால் பணமில்லாத ஏடிஎம் மாதிரி வெறிச்சோடி கிடக்குது கட்டிடமும் கட்டிடமும் சார்ந்த இடத்தில் இருந்துகொண்டு வயலும் வயல்சார்ந்த இடம் பார்த்து வருத்தமடையுது மனம் வார விடுமுறையில் தான் வாழ்க்கை கொஞ்சம் மிஞ்சுகிறது வலிகளை நினைத்தால் துக்கம் மட்டுமே எஞ்சுகிறது"! தோழமையுடன் மணிகண்டபிரபு, திருப்பூர் ,TNPTF

பொங்கல் சிறப்பு கவிதை - தோழர் செல்வ.ரஞ்சித்

🌞🐮🌾🌞🐮🌾🌞🐮🌾 பெயரீற்றில் பால் விகுதியற்று ஸ்ரீயும் ஜீயும் உயர்வென்றும் ஷ்சும் ஸ்சும் அழகென்றும் பிறப்பிலே இரக்கத் தொடங்கி பொருளற்ற பெயர் சூட்டி கனியிருக்கக் காய்கவர்ந்தோம்! பெற்றோர் உற்றாரை அழைத்திட பேசிப் பழகி மகிழ்ந்திட அயல்மொழியே சிறப்பு என்றும் ஆங்கிலமே அறிவு என்றும் தாய்மொழியை மொழிய மறுத்து செவிலியிடம் சிறையானோம்! ஏர்முனை பலம் கூட்டாது ஏறுகளின் நலம் பேணாது இயற்கை உழவ(வி)னை மதியாது செயற்கை உரத்தைச் சேற்றாக்கி செர்சியின் மடிநீரைப் பாணமாக்கி நோயுற்று நோவானோம்! தானிய உணவைத் தரமறுத்து விந்தில்லா விதை விதைத்து விளையும் நிலத்தையும் பாழாக்கி தரணியின் கழிவினைத் தரமென்று பீசா-லேசே பெருமை என்று பிஞ்சுவெம்ப மலடானோம்! மொழியொழித்து இனமழிக்க இந்தியமும் நடிக்கிறது . . .! செயற்கையளித்து அடிமையாக்க இன்னலுலகம் துடிக்கிறது . . .! *இயற்கையோடே மொழியுயர்த்தி* *இனந்தழைக்க முடிவெடு!* இனத்தின் மொழியும் இந்நாளில் மொழிகிறது. . . ., இனமும் மொழியும் *தமிழே என்று!* இனத்தின் புதுநாள் *தைமுதலே என்று!* இயற்கை உழவாலும் சர்க்கரை

பொங்கல் சிறப்பு கவிதை- கவிஞர் வாலிதாசன்

அன்போடு வளர்ந்த இனம் அடக்க நினைத்தால் அத்துமீறி அழிக்கும் குணம் யாவரையும் சொந்தமாக நினைத்தோமே யாவராலும் ஒடுக்கப்பட்டு நிக்கோமே தமிழா - ஒரு நொடி தமிழா தமிழா - உன் குடி தமிழா தமிழனுக்கெதிரா எச்சரிக்கை- நாள்தோறும் போலி சுற்றறிக்கை; வந்தபடி இருக்குதே - வசதியா தந்தபடி இருக்குதே- எம் மனக்கழுத்தை நெருக்குதே- நெஞ்சழுத்தத்தில் சுருக்குதே; வரைமுறை யறிந்தவனே- பரம்பரை குணம் தெரிஞ்சவனே; ஐம்பெரும் நிலத்தில் வாழ்ந்த இனம்- அறத்தை மூச்சாய் நினைத்த இனம்; சோறு கொடுக்கற சாமியடா- பேரு எடுக்கற காளையடா; மாட்ட அடக்குற கூட்டமடா- காட்ட  செழிக்குற வாட்டமா? பிள்ளையப்போல் வளர்க்குறம் காளை- அது எங்க உசுருக்கும் மேல; நடுவீட்டிற்குள் நுழைஞ்ச நாயைப் போல- நாட்டுக்குள் பீட்டா வேல; வஞ்சகனும் இருக்கிறான் கொஞ்சமேனும் சூடு சுரணை இருக்குதா? பக்கத்து மாநிலத்தான் வக்கத்து போனதால வாலாட்டறான்- கேரளம் மாநிலத்தான் சோரம் ஆனதால காலாட்டறான்; தமிழா - இது உன் மொழி தமிழா தமிழா - ஒரு நொடி தமிழா எங்கள் நிலத்தில் வந்து நரிகளின் சத்தமா?- எங்கள் நிலத்தில் எருதுவிடல் என்ன குத்தமா? தவற

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

🌾🌞பொங்கலோ🌞🌾 🌾🌞பொங்கல்🌞🌾 🌿🌱🌴🐂🐃🐄🐿🍃 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 🌴🌱🐿🌿🐄🍃🌿🍂 உலகிற்கே உணவளிக்கும் உழவர்களை போற்றுவோம்... 🌾🌾🌾🙏🏼🌾🌾🌾 தித்திக்கும் செங்கரும்போடு இன்பம் வெண்பாலாய் பொங்கி வரும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. 🌾🌾🌾🙏🏼🌾🌾🌾 நட்புடன் அர.ரமேஷ் 🌾🙏🏼🌞🌾🙏🏼🌞🌾🙏🏼 http://tnsocialpedia.blogspot.com 🌾🙏🏼🌞🌾🙏🏼🌞🌾🙏🏼

பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017)

பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017) ஒட்டு  மொத்த தமிழர்களின் திருநாள்  என்றாலே அது  பொங்கல் திருநாள்  தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகளும்,  உழவர்களும்,  தமிழ்  உணர்வாளர்களும்  மனமுவந்து   கொண்டாடும்,  தமிழர்  திருநாள்  “ பொங்கல் திருநாள் “.  பொங்கல்  திருநாள் தமிழர் வாழ்வு மலர்ச்சிக்கு உகந்த நாள். பொங்கல்  திருநாளை   கொண்டாடும் நன்நாளில், எந்த  நேரத்தில் பூஜை  செய்தால்  நல்லது என  பார்க்கலாம். பொங்கல் திருநாளில் பூஜைக்கு  உகந்த நேரம் : 14.1.2017 காலை 11மணி முதல் 12மணி வரை நல்ல நேரமாகும் ... பொங்கல் வாழ்த்துக்கள்...

ENGLISH EASY PDF

HOW TO SPEAK ENGLISH FLUENTLY  click here for PDF file

தலையங்கம் - ஜல்லிகட்டு 12.1.17

தலையங்கம் - ஜல்லிகட்டு போர் ... 👊🏻நமது tnsocialpedia ஜல்லிகட்டு பற்றி நடத்திய கருத்துகணிப்பில் 99% ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து உள்ளனர்... 👉🏼நம்மில் பலர் ஜல்லிகட்டு விளையாட்டை நேரில் பார்த்தது கூட இல்லை , நான் உட்பட.. பிறகெப்படி இவ்வளவு மக்களின் ஆதரவு என ஆராய்ந்து பார்த்தால் தமிழன் , தமிழர் பாரம்பரியம் என உணர்வு பூர்வமாக சிந்திப்பதே... 👉🏼ஆங்கில , மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டாலும் இன்னமும் நாம் தமிழன்னையை போற்றுதலுக்கு உரியதாகவே கருதுகிறோம்... 👉🏼உலகில் மூத்த குடி எங்கள் தமிழ்க் கொடி.. 👉🏼எத்தனை அதிசயங்கள் இந்த தமிழ் மண்ணில் இருந்தாலும் தேசியம் எனும் பாரபட்சத்தால் தமிழர் பெருமை, தமிழின் அருமை மறுக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது... 👉🏼எங்கோ மலேசியா , கனடா என உலகெங்கும் தமிழ் போற்றப்பட்டாலும் இந்திய மண்ணில் தமிழன் நிலைமை சுண்ணாம்பு தடவிய கண் தான்... 👉🏼அதே வழியில் இன்று ஜல்லிகட்டும் மறுக்கப்பட்டு உலக வரலாற்றில் மறைக்கப்பட உள்ளது.. 👉🏼உச்சநீதிமன்ற கருத்தை விமர்சிப்பதாக அல்ல, உணர்வுகளை மதிக்காத தலைமை என்பது வருத்தமளிக்கவே செய்கிறது..

ஜல்லிகட்டு - கருத்துகணிப்பு முடிவுகள் 12.1.17

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு "ஜல்லிகட்டு"  பற்றி தமிழ் மக்களின் உணர்வுகளை அறிய   tnsocialpedia நடத்திய  கருத்துக்கணிப்பு முடிவுகள்... 👉🏼பதிவான மொத்த வாக்குகள் - 604 👉🏼ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என பதிவான வாக்குகள் - 598- 99% 👉🏼 ஜல்லிகட்டு நடத்த வேண்டாம் - 2-0.33% 👉🏼 கருத்து இல்லை-2- 0.33% 👉🏼கோர்ட் முடிவு - 2-0.33% 👉🏼வாக்குப்பதிவில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி🙏🏼🙏🏼🙏🏼 For more http://tnsocialpedia.blogspot.com

வாட்ஸ் அப் பார்வேட் -

*🔵🔴இரவு செய்திகள்@10/1/17🔴🔵* 🔴தொழில் உற்பத்தித் துறையில் உலக நாடுகள் வரிசையில் 6-ம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம் : பிரதமர் மோடி 🔴ஜனநாயகம் நம்முடைய முக்கிய பலம் எனவும் நம்முடைய இளைய சமுதாயமே முக்கிய மூலதனம் என குஜராத்தில் நடைபெற்று வரும் 8-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். 🔴இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது-- பிரதமர் மோடி 🔴கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 🔴தமிழகத்தில் பொங்கல் திருநாளின் போது ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அதிமுக எம்பிக்கள் நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். 🔴51 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை அரசு.அனைவரும் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த மீனவர்கள்.இவர்கள் பத்திரமாக காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தன

மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!

மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !! 🔴ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!🔴 தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் வரை திருவண்ணாமலையில் நடக்கிறது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,  வணிகவரித்துறை சங்கத

தலையங்கம் : அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி

தலையங்கம் : அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி 👉🏼ஒரு வருட பள்ளிவேலை நாட்கள் 220 👉🏼 காலை 9மணி முதல் மாலை 4.30வரை கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்... 👉🏼விடுமுறை நாட்களில் voter list சேர்த்தல், நீக்கல் திருத்தம் பணி வருடத்திற்கு 15 to 30 நாட்கள், ஞாயிறு சிறப்பு முகாம் 👉🏼இது தவிர Aadhar சரிபார்த்தல், Ration card சரிபார்த்தல் பணி 👉🏼அரசு தரும் நலத்திட்டங்களை பள்ளியில் கொண்டு சேர்த்தல் 👉🏼நாடாளுமன்ற , சட்டமன்ற , ஊராட்சி , இடைத்தேர்தல் பயிற்சி (5நாட்கள்)& தேர்தல் பணி (4நாட்கள் 24×7) குறிப்பு : வெகு தொலைவில் பணி வழங்கப்படும் 👉🏼தேர்வுத்தாள் திருத்தம், மதிப்பெண்பட்டியல் தயாரித்தல் , தேர்வு முடிவு வெளியீடு 👉🏼பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்துதல்... 👉🏼பாடத்திட்டம் தயாரித்தல் , கற்பித்தல் பதிவேடுகள் (50க்கும் மேலாக) பராமரித்தல்... 👉🏼ஒவ்வொரு மாதம்  1அல்லது 2 சனிக்கிழமைகளில் பயிற்சி (விடுமுறைக்கு அனுமதி இல்லை) 👉🏼ஒவ்வொரு வருடமும் பள்ளி சார்ந்த பஞ்சாயத்து அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , பத்து வருடத்திற்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு... 👉

TET CERTIFICATE APPLY2017

ஆசிரியர் தகுதி தேர்வின் மறு பிரதி சான்றிதழ் பெறலாம் ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. 2012 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்கள் வழியே, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், 2013, 2014 தேர்வுகளில் பங்கேற்றோருக்கு, டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. அவ்வாறு, பதிவிறக்கம் செய்யாதோருக்கு, சான்றிதழ் மறு பிரதி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி சான்றிதழின் மறு பிரதி தேவைப்படுவோர், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., பரிந்துரைப்படி, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மறு பிரதி சான்றிதழ், பதிவு தபாலில் அனுப்பப்படும் என, டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலர், உமா தெரிவித்துள்ளார்.

HRA TABLE PDF

TN GOVT STAFFS HRA TABLE PDF click here

வாட்ஸ் அப் ஃபார்வேட்- செய்தித்துளிகள் 3.1.17

📡📻இரவு 📰 செய்திகள் 📻📡             📡📻03\01\17📻📡 📡பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் பரிசுத்தொகுப்பை அறிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி ஏலக்காய், 2அடி நீள கரும்பு துண்டு, உலர்திராட்சை அடங்கும் பரிசுத்தொகுப்பு 80 லட்சம் பயனாளிகளுக்கு கிடைக்கும் என அறிவிப்பு 📻புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி(42) உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 📡பணமில்லா பரிவர்த்தனை: எய்ம்ஸ் மருத்துவமனை மொபிவிக் வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் டெல்லி: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மொபிவிக் வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை அறிவித்து வருகிறது. இந்நிலயில் புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் அந்த திட்டத்தில் இணைந்துள்ளது குறிப

வாட்ஸ் அப் வரவு - 2.7.17

📡📺இரவு📺செய்திகள் 📺தம்பித்துரை லெட்டர் பேடில் அறிக்கை விட்டதைத் தவிர்த்திருக்கலாம்: வெங்கையா நாயுடு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் . சசிகலா முதல்வராக வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை லெட்டர் பேடில் அறிக்கை விட்டதைத் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு கூறினார். 📡இனி பழைய போன்களில் வாட்ஸ் - அப் கிடையாது" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு பழைய ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்ட்ராய்ட் 2.2 பிரோயோ, பழைய ஆன்ட்ராய்ட் போன்கள், ஐபோன் 3 ஜிஎஸ், குறைந்த வெர்சன் கொண்ட 7 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல விண்டோஸ் 7 வெர்சன் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " ஆன்ட்ராய்ட் 2.2 மற்றும் அதற்கு குறைவான வெர்சன்கள், ஆப்பிள் 3ஜிஎஸ், 2.6 வெர்சன், வின்டோஸ்7 ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர