பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2023 திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை குறள் :294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். விளக்கம்: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். பழமொழி : Beauty is a short-lived reign. அழகின் ஆட்சி அற்ப காலமே. இரண்டொழுக்க பண்புகள் : 1) நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன். 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பொன்மொழி : 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!. 3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும். 4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும். - சீனப் பழமொழி பொது அறிவு : 1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர் விடை: திருநாவுக்கரசர் 2. தமிழ்நாட்...