தலையங்கம் - அரசுபள்ளி ஆசிரியர்களின் பணிகளும், பழிச்சொல்லும்...
*தலையங்கம்- அரசுப் பள்ளி வாத்தியார்கள் வேலை* பொதுபுத்தியின் பார்வையாளர்கள் கவனத்திற்கு , ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுபவர்கள் கவனத்திற்கு ..... கடந்த ஒராண்டாக வீட்டிலிருந்தே சம்பளம் வாங்குகிறார்கள் , என போகிற போக்கில் மனசாட்சி இல்லாது பேசிவிட்டு போகும் கூட்டமே கொஞ்சம் இதனை முழுவதும் படியுங்கள்... *2020-21 ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிகள்* *கடந்த 2020 ஏப்ரல் , மே மாதங்களில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக கொரோனா நிவாரண பொருட்களை( தங்கள் சொந்த பணத்தில்) எளிய மக்களுக்கு வழங்கியுள்ளனர்..* *ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.* *D.A , சரண்டர் உள்ளிட்ட பணபலன்களை இழந்துள்ளனர்.* *பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ரேசன் கடை,போக்குவரத்து , கட்டுபாட்டு அறைகள் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளனர்* 1.) லாக்டவுன் முடிந்து தளர்வுகள் வழங்கிய முதலாக சுதந்திர தின விழா கொடியேற்றுதல் நிகழ்வும், எளிய விழாவும் ... ( 15.08.2020) 2.) மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி ( ஆகஸ்ட் 30 வரை ) 3.) மாணவர் சேர்க்கை ( கடந்த ஆண்டுகளை விட இந்தாண்ட...