MENU

Show more

தலையங்கம் - வாரிவழங்கி விடவில்லை ?

*தலையங்கம்*

------------------------------
*வாரி வழங்கிவிட வில்லை...*
-------------------------------

👉🏼மொத்த மாநிலத்தின் வருவாயில் 71 % அரசு ஊழியர் , ஆசிரியர் சம்பளமாக வழங்கப் படுகிறது என தவறான கண்ணோட்டம் மக்களிடையே பரப்ப படுகிறது...

👉🏼இதிலுள்ள முழு விவரம் & முழு விளக்கம் எனக்கு தெரிந்தவரை பதிவிடுகிறேன் , நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்....

👉🏼 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958) தற்போது 2018 ல் இந்த மக்கள் தொகை எவ்வளவு உயர்ந்து இருக்கும் அல்லவா ?

👉🏼தமிழ்நாட்டில் மொத்த அரசு ஊழியர் , ஆசிரியர்கள் எண்ணிக்கை சற்றே ஏறக்குறைய 12 லட்சம் பேர்...

👉🏼8 கோடி மக்களுக்கு பணியாற்ற 12 லட்சம் பேர்...

👉🏼மொத்த மக்கள் தொகையில் அரசு ஊழியர் ஆசிரியர் எண்ணிக்கை 2 அல்லது 3 சதவீதம் , அதாவது 97% மக்களுக்கு பணியாற்ற 3% ஊழியர்கள் - இதன் மூலம் ஏற்படும் பணிச்சுமையை உணரமுடியும் ...

👉🏼அரசு என்பது லாப நோக்கம் கருதாது மக்களுக்கு சேவையாற்றும் அமைப்பு , அத்தகு அரசின் நலத்திட்டங்களை இந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வழியாகத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்...

👉🏼சம்பள உயர்வு என்பது தற்போதுள்ள விலைவாசி , வளர்ச்சி , தனிமனித வாங்கும் சக்தி இவற்றை வைத்தே அளவிடப் படுகிறது...

👉🏼போராட்டம் நடத்துவதால் வாரி வழங்கவிட யார் அப்பன் வீட்டு பணமும் இல்லை, சாதாரண கூலி தொழிலாளி வருமானம் கூட உயர்ந்து வரும் நிலையில் 8 கோடி மக்களுக்கு பணியாற்றும் ஊழியரின் சம்பளம் தற்போது மத்திய அரசு வழங்கும் ஊதியத்தின்படி மாநில பணியானர்களுக்கும் வழங்க கோருவதில் என்ன தவறு...?

👉🏼உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற 5 வருடத்தில் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துவிடுவர் , அவர்கள் ஊதியம் எவ்வளவு , எப்படி 5 வருடத்தில் கோடி கணக்கில் சொத்து வந்தது என யாரும் கேட்பதில்லையே ஏன் ?

👉🏼MLA க்கள் ஊதியம் மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்.
234 பேருக்கு 5கோடியே 85 ஆயிரம் , இது தவிர ஒரு நாள் MLA வாக இருந்தால் கூட கடைசி வரை பென்சன் , இதர சலுகைகள் எக்கசக்கம் , இவர்களுக்கு செலவாகும் தொகை அரசு ஊழியர்கள் சம்பளமாக வழங்கப்படும் 71% ஊதியத்திலிருந்து கழித்து விடுங்கள் மக்களே , மீதி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த படி 41%

👉🏼நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் , 10 லட்சம் மதிப்பு என்று வைத்துக் கொள்வோம் , இதில் கொத்தனார் கூலி சற்றே ஏறக்குறைய 50% ஆக இருக்குமா? இல்லையா ?   அதேபோலத்தான் அரசு நடத்த இந்த அரசு ஊழியர்கள் தேவை , அரசு அலுவலகங்களில்  மின்விசிறி , நாற்காலி , கழிவறை கூட இருக்காது, டப்பா கம்பயூட்டர்ஸ் , ஒன்றும் வேண்டாம் அரசு பேருந்து ஓட்டுநரை கேட்டுபாருங்கள் அந்த பேருந்தை வைத்து கொண்டு அவர் படும் சிரமத்தை .....


👉🏼சரி இறுதியாக MLA க்களின் சொத்து மதிப்பு , நீங்கள் வாரி வழங்கிவிட்ட 30 ஆண்டுகள் பணிசெய்த அரசு ஊழியர்கள் சொத்து மதிப்பு , இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாங்கியுள்ள கடன் எவ்வளவு , அதற்கு அவர்கள் செலுத்து தவணை எவ்வளவு , இதேபோல MLA உட்பட இதர அரசியல் உழைப்பாளிகள் யாராவது கடன் வாங்கி உள்ளனரா என்பதை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா ?


👉🏼மாநிலத்தின் வருவாய் உயராமல் அதே நிலையில் இருந்தால் ஆட்சியாளர்கள் PERFORMANCE MATRIX என்ன என்பதை மக்களே உணர்வார்கள்....

*http://tnsocialpedia.blogspot.in*

Comments

  1. In TN people work very hard to earn rs.5000 a month. Govt servents become Bill gates but common man (tax payers) on road as beggers. A phd prof in private earns hardly rs 20000 a month. If Salary in govt is not good go to private or become a politician

    ReplyDelete
  2. அரசு ஊழியர்கள் நினைத்தால் அரசியல்வாதிகள் ஊழல் செய்யமுடியுமா? முதலில் லஞ்சம் வாங்குவதை நிறுத்துங்கள் பிறகு காலிப்பனியிடங்களை நிறப்ப வேன்டி போராட்டம் மட்டும் அல்ல வேலைநிறுத்தம்கூட செய்யுங்கள் மக்கள் துனையிருப்பர் அரசுஊழியரும் மக்களில் ஒருவர்தானே நா சொன்னது சரியா இருந்தா எடுத்துகங்க இல்லைஎன்றால் விட்டுறுங்க.

    ReplyDelete

Post a Comment

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026