Posts

Showing posts from August, 2017

TNPTF கல்விச் செய்திகள் 1.9.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 16~ 1.9.17🗓* 📮PGTRB ல் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதைப்போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு  ஒதுக்கப்படுமா? - என்ற கேள்விக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விளம்பரம் வெளியிடப்படும் போது தெரியவரும் என CM CELL-இலிருந்து  பதில் (15.08.2017) பெறப்பட்டுள்ளது. 📮உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 📮நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) தமிழ்நாட்டை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு  வழங்கப்படவுள்ளது. 📮தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல் அளித்துள்ளார். 📮எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய

TSP NEWS 1.9.17

TSP NEWS 01.9.17 இன்றைய முக்கிய செய்திகள்  📡📺ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதில் சிக்கல் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல் ISRO pslvc39 வெப்பத் தடுப்பு சரியாக பிரியாததால் ராக்கெட் தோல்வி அடைந்ததாக கிரண்குமார் விளக்கம் 📡📺கடலில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம் சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் தினேஷ் மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர். 📡📺மும்பையில் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் டெல்லி : மும்பையில் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார். 📡📺புளுவேல் விளையாட்டில் மூளையாக செயல்பட்ட சிறுமி ரஷ்

செப்டம்பர் மாத பள்ளி நாட்காட்டி

*செப்டம்பர் மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼>5/9/2017 ஆசிரியர் தின விழா (அனைவருக்கும் வாழ்த்துகள்) 👉🏼>வட்டார அளவிலான குறைதீர்க்கும் நாள் -9.9.17 👉🏼>ஜாக்டோ-ஜியோயின் தொடர் வேலைநிறுத்தம் & மறியல் 7.9.17 ஆம் தேதி முதல்... 👉🏼>வரையறுக்கப் பட்ட விடுப்புகள் 1)1.9.17 அராபத் 2)4.9.17ஓணம் 3)19.9.17மகாஹளய அமாவசை 4)22.9.17 ஹிஜ்ரி புத்தாண்டு 👉🏼>அரசு விடுமுறைகள் 2.9.17பக்ரீத் பண்டிகை 29.9.17சரஸ்வதி பூஜை 30.9.17 விஜயதசமி 👉🏼>முதல் பருவத்தேர்வு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக்களுக்கு 18.9.17 முதல் 23.9.17 வரை. 👉🏼>உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கு முதல் பருவத் தேர்வு 11.9.17 முதல் தொடக்கம் 👉🏼>முதல் பருவத்தேர்வு விடுமுறை - 24.9.17 முதல் அக்டோபர் 02.10.17 வரை 👉🏼>வட்டார வள மைய அளவில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு  இரண்டு நாள்  பயிற்சி இரண்டு கட்டமாக செப்டம்பர் 11 முதல் 22 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். 👉🏼>எதிர்பார்க்கப் படும் CRC  நாள்:16/9/2017 👉🏼 >23/09/2017 சனிக்கிழமை பள்ளி வேலைநாள் 👉🏼 >அக்டோ

வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை

🔴வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை 🔴 🔷அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a   மற்றும் 19(1)b வழி செய்கிறது. 🔻சட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar  வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும். 🔷அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின்  அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும். 🔥வேலை நிறுத்தம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதல்ல என்கிறது அரசியலமைப்பு 19(1) 616 சரத்து. 🔷அரசு ஊழியர் வன்முறையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டால் அவரை பணிநீக்கமோ பனி விலக்கலோ செய்ய கூடாது என்கிறது உச்சநீதிமன்ற பேராணை Air மட் 220/224. ❤இதற்கும் மேம்பட்ட சக்தியாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தன்னகத்தே கொண்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பு உள்ளது அதனால் பணி குறித்த பயம் சிறிதும் வேண்டாம். 💢மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை வழங்காது இருப்பது  தமிழக அரசின்  நம்மீதான சுரண்டல். 🚩கோரிக

ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வியையும், கிண்டலையும் தெரிவித்துள்ளார். தனது பதிவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பின் 99 சதவிகித நோட்டுகள் சட்டப்படி மாற்றப்பட்டது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரியவந்துள்ள நிலையில் அந்த திட்டம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவிய திட்டமா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 16 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை கண்டு பிடிப்பதற்கு 21 ஆயிரம் கோடி செலவழித்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆலோசனை கூறிய நிபுணருக்கு நிச்சயம் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேலி செய்துள்ளார்.

குரு பெயர்ச்சி ஸ்பெஷல்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள் . 💐💐💐💐💐💐💐 குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தையே, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள குரு பெயர்ச்சி அன்று வழிப்பட வேண்டிய குரு தலங்கள் சிலவற்றை காணலாம். திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது. தென்குடி திட்டை: கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார். பட்டமங்கலம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு

புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகிய செலவு...

🌶🌶🌶🌶🌶🌶🌶🌶🌶 *நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவானது???* 🌶🌶🌶🌶🌶🌶🌶🌶🌶 கடந்த 2016ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான ஒரு வருடத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ரூ.3,421 கோடி செலவிட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் 133 சதவிகிதம் செலவு அதிகரித்துள்ளது.  பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதால் செலவு அதிகரித்துள்ளது. இவை தவிர 200 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 8ஆம் தேதி நோட்டுகள் மீது விதிக்கப்பட்ட தடையால் புதிய நோட்டுகளை அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்றை அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. 1000 ரூபாய் நோட்டு ஒன்றை அச்சடிக்க அரசுக்கு ரூ.3.54 செலவானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.  *புதி

TSP NEWS 31.8.17

TSP NEWS 31.8.17 இன்றைய முக்கிய செய்திகள் 📡🌍பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது !! கைவிரித்த கவர்னர் !!! அதிமுகவில் தற்போது நடப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசல் என்றும், அதனால் எதிர்கட்சிகள் கோரியபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட முடியாது எனவும்  ஆளுநர் வித்யாசாகர் திடடவட்டமாக தெரிவித்துள்ளார். 📡🌍பண மதிப்பிழப்பு விவகாரம்..! மத்திய அரசை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி பண மதிப்பிழக்க நடவடிக்கையால் கறுப்பு பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். தற்போது ஒன்றும் வெளிவரவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 📡🌍டி.டி.வி. தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு எரித்தும் ஆர்ப்பாட்டம்... திண்டுக்கல்லில் ஒன்றிய அதிமுக செயலாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு எரித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 📡🌍இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.!! எத்தனை பேர் வருவார்கள் ? பதற்றத்தில் எடப்பாடி தரப்ப

TNPTF கல்விச் செய்திகள் 31.8.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 15~ 31.8.17🗓* 📮EMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📮பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. 📮தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது. 📮கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.  10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். 📮பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கெடு இன்றுடன்  முடிவடைய உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில்  டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் என மத

கமல் ஆவேசம்..

இன்றைய அரசியல்வாதிகள் கஜானா திருடர்கள்: கோவையில் நடிகர் கமல் ஆவேசம் ''மக்கள் கொடு, கொடு என கேட்ட தால், கஜானாவில் பெரும் பங்கை அரசியல் வாதிகள் திருடிவிட்டனர். இந்த அரசியல் சூழல் தொடர்வது அவமானம். இதை மாற்ற வேண்டி யது நமது கடமை,'' என, நடிகர் கமல்ஹாசன் பேசினார். கோவை ஈச்சனாரியில், தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்த திருமணம் சாதி, மொழி கடந்த திருமண மாகும். இவர்கள் (ரசிகர்கள்), 37 ஆண்டுகளாக ரசிகர்களாக உள்ளனர். இதில், 30 ஆண்டுகள் நற்பணிகளை செய்து வருகின்றனர். அன்று இதை கண்டு வியந்தவர்கள், இன்று, 'ரத்த தானம், கண் தானம் செய்தால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா' என கேள்வி கேட்கின்றனர். அவர்களை பார்த்து எனக்கு கோபம் வரவில்லை; சிரிப்புதான் வருகிறது.நாங்கள் யாரிட மும் அதை செய்தோம், இதை செய் வோம் என கூறி, எதையும் கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டோம். நற்பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனி, தனிதலைவர்களாவர். எங்கள் பணியை அமைதியாக தொடர்ந்து செய்வோம். 'உங்களை அரசியல்வ

மெட்ராஸ் யுனிவர்சிட்டி DDE ரிசல்ட்ஸ் 2017

சென்னை பல்கலையின் தேர்வு முடிவு, இன்று(ஆக.,31) வெளியிடப்படுகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு, இன்று இரவு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இரவு, 8 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு, நாளை முதல் வரும், 12ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

AADHAR - PAN LINKING: LAST DATE EXTENDED*

*♏🔵🔵AADHAR - PAN LINKING: LAST DATE EXTENDED* *🌕🌕ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு* பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல். ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்தது. முதலில், ஆதார் தொடர்பான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கிய பின்னர் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், “பல்வேறு சமூக நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது. ஏற்கெனவே, ஆதார் தொடர்பான வழக்கில் அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய அரச

🔰 *இந்திரா சௌந்தரராஜன் நாவல்*🔰

🔰 *இந்திரா சௌந்தரராஜன் நாவல்*🔰 📚 *மந்திர காடு பாகம்1* 💯13.2mb அளவு 📎https://userupload.net/mev1vsh2gc8x 📚 *மந்திர காடு பாகம்2* 💯13.7mb அளவு 📎https://userupload.net/2a85ercofbhz 📚 *இந்திரா சௌந்தரராஜன் சிறுகதைகள்* 💯37mb அளவு 📎https://userupload.net/xagksno7pdi5 📚 *மூன்று வழி நான்கு வாசல்* 💯14.6mb அளவு 📎https://userupload.net/b78ex8kxfmx5 📚 *கலைக்க முடியாத வேசங்கள்* 💯16.3mb அளவு 📎https://userupload.net/3zp2ft435zyn 📚 *திக் திக் திக்* 💯13.6mb அளவு 📎https://userupload.net/0mg9qvu74l3z 📚 *சக்தி* 💯61mb அளவு 📎https://userupload.net/v1zzr7v620yt 📚 *ஜெய் ஹனுமான்* 💯4.5mb அளவு 📎https://userupload.net/jpteqi7v5yfd 📚 *அங்கே நான் நலமா* 💯24.3mb அளவு 📎https://userupload.net/w7q5rzrpkevf 📚 *பதினெட்டாம் படி* 💯29.7mb அளவு 📎https://userupload.net/9a8qe2nri2ha 📚 *ராஜா மாதாங்கி* 💯51.7mb அளவு 📎https://userupload.net/og2n0ca4iijb 📚 *எங்கே என் கண்ணன்* 💯25.7mb அளவு 📎https://userupload.net/jw9fwtl3ggoe

TSP DAILY NEWS 30.8.17

TSP NEWS 30.8.17 இன்றைய முக்கிய செய்திகள் 📡📺சரியாகச் செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படையுங்கள்'..மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை சரியாகச் செயல்படாத அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைத்து நிர்வகிக்கலாம். அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாமே.. மத்திய அரசுக்கு நிதி ஆயோக் 'பகீர்' பரிந்துரை டெல்லி: நாடு முழுவதும் சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 📡📺சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதியுங்கள் - சிறைத்துறைக்கு நளினி மனு வேலூர் : சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள நளினி சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார். 📡📺ஒருவர் ஒரு இருப்பிடச் சான்று மட்டுமே வைத்திருக்க முடியும்: தமிழக அரசு விளக்கம் சென்னை: ஒருவர் ஒரு இருப்பிடச் சான்று மட்டுமே வைத்திருக்க முடியும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 📡📺பாடம் கற்று கொள்ளுங்கள்: இந்தியாவுக்கு

எளிமையாகிறது EMIS

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது. ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர். மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானத

TNPTF கல்விச் செய்திகள்..

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 14~ 30.8.17🗓* 📮ஜாக்டோ ஜியோ அறிவிப்பு: திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 7ஆம் தேதி வட்ட தலைநகரில் மறியல், 8ஆம் தேதி ஆட்சியர் அலுவலக எதிரில் மறியல் .10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம் கூட்டப்படும் என அறிவிப்பு. 📮SSA - தூய்மையான இந்தியா - தூய்மையான பள்ளி( Swachh Bharath Swachh vidyalaya) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📮DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📮PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி. 📮கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’EMIS’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணி

செப்டம்பர் 7 முதல் வேலைநிறுத்தம்..

*ஜேக்டோஜியோ முடிவுகள்* *பேரன்புமிக்க இயக்கப் போராளிகளே! வீரஞ்செறிந்த போராட்ட வாழ்த்துக்கள்* *இன்று (29 .8 . 17) சென்னை யில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ  உயர் மட்டக் குழு கூட்டத்தில் திட்டமிட்டபடி 07.09.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது*  *அதன்படி 7.9.17 அன்று பணிக்குச் செல்லாது வட்டத் தலைநகரங்களில் மறியல் போர் நடத்துவது.*  *8.9.17 அன்று பணிக்குச் செல்லாது மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போர் நடத்துவது*  *11.9.17  அன்று நடத்தப்படும் போராட்ட வடிவம் குறித்து 10.9.17 JACTTO - GEO மாநில உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்து அறிவிப்பது* *காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நூறு சதவீத வெற்றிபெற இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்றுக* *செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*                     பெ.இளங்கோவன் , ஜெ. கணேசன் ,    ஒருங்கிணைப்பாளர்கள்                       ஜாக்டோ - ஜியோ (JACT TO - GEO ). பத்திரிகை செய்திக்கான ஜாக்டோ ஜியோ போராட்ட அறிக்கை JACTO GEO PRESS RELEASE PDF

அவ்வளவு தான் கல்வி.....

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்! - நிதிஆயோக் பரிந்துரை சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. தனியார்-பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறது நிதிஆயோக். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’கடந்த 2010-2014-ம் ஆண்டு இடைவெளியில் 13,500 அரசுப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. ஆனால், இதே காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.3 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.85 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இது மொத்த அரசுப் பள்ளிகளில் 36 சதவிகிதம் ஆகும். ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செ

திட்டமிட்ட படி வேலை நிறுத்தம்..

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 https://tnptfvizhudhugal.blogspot.in/2017/08/jactto-geo_29.html?m=1 *ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு முடிவுகள்:* ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்தி , CPS-ஐ ரத்து செய்யும் வரையான *காலவரையற்ற  வேலைநிறுத்தத்தை வட்டாரத் தலைநகர் மறியலில் இருந்து தொடங்க முடிவு.* ☀செப்டம்பர் 7 வட்டாரத் தலைநகர் மறியல் ☀செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகர் மறியல் ☀செப்டம்பர் 9&10 சனி ஞாயிறு விடுமுறை ☀செப்டம்பர் 11 முதல் மேற்கொள்ளும் போராட்ட முறை குறித்து 9.9.17 அன்று அறிவிக்கப்படும். *ஒன்றுபட்ட சக்தியின் முன்னே,* *ஆணவங்கள் தூள். . .! தூள். . .!* *அடக்குமுறைகள் தூள். . .! தூள். . .!* என்ற பதாகையை ஏந்திப் பிடித்து, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டக் களம் புக அழைக்கிறது ஜேக்டோ-ஜியோ.

இன்றைய செய்தித்துளிகள் 29.8.18

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 29/08/17 ! >>ராஜிவ் கொலை வழக்கு : முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. >>ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரை இன்று சந்திக்க நேரம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு. >>ஆக.31-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க திமுக நேரம் கேட்பு. >>இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான வழக்கை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திரும்ப பெறுகின்றனர்.அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு. >>டெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் ஏகே.ஜோதியுடன் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சந்திப்பு. >>டிடிவி.தினகரனுக்கு கோவை எம்பி நாகராஜன் ஆதரவு. >>புதிய மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி.தினகரன் பெசண்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். >>திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சந்திப்பு மேற்கொண்டனர். >>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்எல்ஏ

கணிதமும் இனிக்கும்

ஒரு எண் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அந்த எண், 7 ஆல் வகுபடுமா என்று அறிய, ஓர் எளிய முறையை கண்டுபிடித்துள்ளார், கோவையை சேர்ந்த கணித வல்லுனர் உமாதாணு.கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். வயது 80ஐ நெருங்கும் நிலையிலும், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் நிறுவி, கணிதம் தொடர்பான பல்வேறு எளிய வழிமுறைகளை கண்டுபிடித்து, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். கணித வல்லுனர்கள் மத்தியில், இவரது எளிய வழிமுறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வரிசையில், 'ஒரு எண் ஏழால் வகுபடுமா' என்று அறியவும், ஒரு எளிய வழிமுறையை தற்போது கண்டுபிடித்துள்ளார் உமாதாணு.இது குறித்து அவர் கூறியதாவது: ஒரு எண், 2, 3, 4, 5, 6, 8, 9 ஆகிய எண்களால் வகுபடுகிறதா என்று கண்டுபிடிக்க, தகுந்த வழிமுறைகள் உள்ளன. ஆனால் 7 ஆல் வகுபடுகிறதா என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, இது எளிதாக சாத்தியமாகியுள்ளது. உதாரணத்துக்கு, 392 என்ற எண், 7 ஆல் வகுபடுமா என்று கண்டுபிடிக்க, அந்த எண்ணின் இறுதியில் உள்ள எண்ணை, 2 ஆல் பெருக்க வேண்டும். பெருக்கினால

தொடர் வேலை நிறுத்தம் ரத்தாகிறதா ?

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு. அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவுஎடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப் பினர், இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்; சங்க நிர்வாகிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதன்பின், தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என, ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் - சாணக்கியன் தான்...

*அதிர்ஷ்ட தேவதை அழைக்கும் போது இழுத்து மூடி தூங்குவதா?: ஸ்டாலினை குடையும் தி.மு.க.வின் மனசாட்சி* வாலியை மறைந்திருந்து வதம் செய்தது ராமர் பார்வையில் ‘போர் தந்திரம்’ என்று நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் வாலியின் கீழ் உழைத்த வானரங்களால் ‘இது போர் அதர்மம்’ என்று விமர்சிக்கப்படுகிறது. அது தர்மமோ அல்லது அதர்மமோ! ஆனால் வாலி வதத்தின் மூலம் சுக்ரீவனின் முழு ஆதரவும் ராமனுக்கு கிடைத்து ராவணன் அழிப்பு, சீதை மீட்பு எனும் நியாயங்கள் அரங்கேறின. இதன் வாயிலாக இலக்கு பொது நன்மை தருவதாக இருந்தால் அதை அடைய செல்லும் பாதையின் ஊடே சில அத்துமீறல்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை! எனும் உபதேசம் நிர்மாணிக்கப்படுகிறது. இதை! இதை! இதையேத்தான் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது உணர்வுகளை உசுப்பிவிட முனைகின்றனர் தி.மு.க.வின் சீனியர்கள். ’கொல்லைப்புறமாக ஆட்சியை தி.மு.க. பிடிக்காது. இந்த ஆட்சி தானாக கவிழும்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே…..இருக்கும் ஸ்டாலினை சற்று சாணக்கியத்தனத்தை நோக்கி திரும்பிப் பார்க்க முயற்சிக்கின்றனர் இவர்கள். இந்த முயற்சி குறித்து தி.மு.க. சீனியர்கள் மேலும் பகிர்

TSP DAILY NEWS 29.8.17

TSP NEWS 29.8.17 இன்றைய முக்கியசெய்திகள் 📡📺பன்றி காய்ச்சலால் எம்எல்ஏ பலி...! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு... பன்றி காய்ச்சலால் எம்எல்ஏ பலி தற்போதைய சூழலில் செங்கு, பன்றி காய்ச்சல் வைரல் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்  வெகுவாக  பரவி வருகிறது. நாடு முழுவதுமே  சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிகாய்ச்சலால் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 📡📺விழுப்புரம் அருகே ரூ.50 லட்சம் மோசடி : பெண்ணுக்கு போலீஸ் வலை செஞ்சி: செஞ்சியில் வங்கிக் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு வலை வீசி தேடிவருகின்றனர். சிறுதொழில் தொடங்க வங்கியில் கடன் பெற்று தருவதாக 100 இளைஞர்களிடம் மோசடி செய்துள்ளார். தலைமறைவான மீனாட்சி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 📡📺நாஞ்சில் சம்பத்தை அடக்கி வையுங்கள்... தமிழிசை எச்சரிக்கை: மதுரை: அரசியல் தலைவர்களை தரக் குரைவாக விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத்தை அவரது கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார். 📡📺மும

TSP NEWS 28.8.17

TSP NEWS 28.8.17 இன்றைய முக்கிய செய்திகள்.. 📡அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவருகிறது. 📡இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📡🌍வேதாரண்யத்தில் கடல்சீற்றம்: மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை நாகை: வேதாரண்யத்தில் கடல்சீற்றம் காரணமாக 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் பகுதி மீனவர்களின் 400 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. 📡🌍தினகரன் அணி புகழேந்தி டி.ஜி.பி.,க்கு எச்சரிக்கை திருச்சி: கர்நாடக மாநில, அ.தி.மு.க., செயலர் புகழேந்தி திருச்சியில், நேற்று கூறியதாவது:தமிழகம் முழுவதும், தினகரன் உருவ பொம்மையை எரிக்க, போலீசார் துணை போகின்றனர். தப்பான விவகாரத்துக்கு துணை போகாதீர்கள் என டி.ஜி.பி.,யை கேட்டுக் கொள்கிறேன்.பழனிசாமி பதவி விலக வேண்டும்; தனபால் முதல்வராக வேண்டும். அதேபோல், 30 தலித், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில் சிலரை, அமைச்சராக்க வேண்டும். தினகரன் மறுமுகத

மத்திய அரசு - வேலைவாய்ப்பு செய்தி

Image
மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 54 உதவிப்பேராசிரியர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந் 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 54 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Engineer (Electrical) - 01 பணி: Assistant Engineer (Mechanical) - 01 பணி: Specialist Grade-III Assistant Professor (Anatomy) - 08 பணி: Specialist Grade-III Assistant Professor (Obstetrics and Gynaecology) - 13 பணி: Specialist Grade-III Assistant Professor (Ophthalmology) - 03 பணி: Specialist Grade-III Assistant Professor (Orthopaedic) - 01 பணி: Specialist Grade-III Assistant Professor (Paediatric Cardiology) - 02 பணி: Specialist Grade-III Assistant Professor (Radio-Therapy) - 10 பணி: Assistant Executive Engineer - 06 பணி: Driller in Charge - 05 பணி: Lecturer (electrical) -01 பணி: Lecturer (Mechanical) - 01 விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.

IAS/IPS - இலவச பயிற்சி

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது-ஞா. சக்திவேல் முருகன் sponsored link click here `ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன?' என்பது, நம்மில் பலரிடம் எழும் கேள்வி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எந்தப் பயிற்சி மையமாவது தன்னை வழிநடத்தாதா என ஏங்குவோர் பலர். இவர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் துணைபுரிகிறது.  இங்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் ஆறு மாதம் இலவசப் பயிற்சி பெறலாம். அடுத்த ஆண்டு (2018-ம் ஆண்டில்) நடக்கவிருக்கும் குடிமைப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வுகான (Preliminary Examination - 2018)   இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. சென்னையில் தங்கி படிக்கும் வகையில், 225 பேரையும், பகுதி நேரமாக தினமும் மாலை நேர வகுப்பில் கலந்துக்கொள்ளும் வகையில் 100 பேரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்கள். பயிற்சிபெற விரும்புபவர்கள், இணையதளம் வழியாகவோ (www. civilservicecoaching.com) அல்லது நேரிலோ  விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்க
🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 12~ 28.8.17🗓* 📮SSA - SWACHH VIDYALAYA - PURASKAR - தூய்மை பள்ளி விருது - STATE LEVEL SELECTED SCHOOL LIST Published. 📮தூய்மை இந்தியா தூய்மைப் பள்ளிக்கான விருது தமிழ்நாடு முழுவதும் 25 பள்ளிகள் மற்றும் 5 அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 📮தூய்மை இந்தியா விருதிற்கு  நமது காஞ்சி மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பள்ளியான எடையார்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 📮SSA - SWACHH VIDYALAYA PURASKAR - தூய்மை பள்ளி விருது - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு DELHI - ல் விருது - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📮JACTTO GEO உயர்மட்டக்குழு நாளை   செவ்வாய்க்கிழமை 29.08.2017  சென்னையில் கூடுகிறது 📮மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடந்த  சனிக்கிழமை கணக்கு வகுப்பு எடுத்தார். 📮சேலம் மாவட்ட அரசுப்பள்ளி மாணவரின் அசத்தல் சிஸ்டம்: நிலநடுக்கம் ஏற்பட்டால் எஸ்எம்எஸ் வரு

யார் இந்த சாமியார்...

Image
யார் இந்த குர்மீத்? யார்   இந்த   குர்மீத் ?  குர்மீத் சண்டிகார் ,  ஆக .26-  கற்பழிப்பு வழக்கில்   குற்றவாளி   என அறிவிக்கப்பட்டுள்ள   குர்மீத்   யார் என்பது   குறித்த   ஒரு   தகவல் தொகுப்பு   வருமாறு :-  குர்மீத் , அரியானாவில்   உள்ள   சிர்சாவில் வசித்து   வந்தாலும் ,  இவர் ராஜஸ்தான்   மாநிலம் ,  சிறி   குருசார் மோதியா   என்ற   கிராமத்தில்  1967- ம் ஆண்டு   ஆகஸ்டு  15- ந்   தேதி பிறந்தவர் .  சர்ச்சைகளுக்கு   பெயர் பெற்றவர் .  தங்கள்   மத நம்பிக்கையை   இவர் அவமதித்ததாக   சீக்கிய   மதத் தலைவர்கள்   குற்றம்   சாட்டியது உண்டு .  இவருக்கு   உலகமெங்கும்  5 கோடி   ஆதரவாளர்கள்   உள்ளனர் . சிர்சாவில்   உள்ள   இவரது   ஆசிரம வளாகம் , 800  ஏக்கர் பரப்பளவிலானது . 2003- ம்   ஆண்டு இவர்   நடத்திய   ரத்த   தான   முகாம் , உலகிலேயே   மிகப்பெரியது   என்ற வகையில்   கின்னஸ்   சாதனை ஏட்டில்   இடம்   பிடித்தது . ஆன்மிகவாதியாக   வலம் வந்தாலும் ,  சினிமா ,  இசை   என பல்துறை   ஆர்வலர் .  இசை வீடியோக்களில்   தோன்றியுள்ளார் . இவரது  ' லவ்   சார்ஜர் '  என்ற   வீடியோ , சர்வதேச   அளவில்   பிரசித