MENU

Show more

ஓவியா தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!'

சென்னை: 'நடிகை ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக தங்கி இருந்த போது, தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

தனியார், 'டிவி'யில், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, சென்னை, நசரத்பேட்டை பகுதியில், வீடு போன்ற பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு உள்ளது. அதில், பாடலாசிரியர் சிநேகன், நடிகையர் ஓவியா, காயத்ரி ரகுராம், நடிகர்கள், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், மாடலிங் வாலிபர் ஆரவ் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சில தினங்களுக்கு முன், ஓவியாவை மையமாக வைத்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இவர், ஆரவ் மீது, தன் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவர், 'ஓவியாவின் மீது இருப்பது நட்பே; காதல் அல்ல' என, தெரிவித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக, தகவல் வெளியானது.

பின், 'ஓவியா, 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்' எனவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். இருவரும், நிகழ்ச்சி குறித்தும், ஓவியா - ஆரவ் காதல் குறித்தும் பேசினர். இந்த காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கறிஞர், எஸ்.எஸ்.பாலாஜி என்பவர், ஓவியா மீதும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, 'பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தற்கொலைக்கு முயன்றது உண்மையா' என்பது குறித்து, நேரில் விளக்கம் அளிக்கும்படி, ஓவியாவுக்கு, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28