MENU

Show more

இன்றைய செய்தித்துளிகள் 29.8.18

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 29/08/17 !

>>ராஜிவ் கொலை வழக்கு : முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

>>ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரை இன்று சந்திக்க நேரம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு.

>>ஆக.31-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க திமுக நேரம் கேட்பு.

>>இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான வழக்கை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திரும்ப பெறுகின்றனர்.அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு.

>>டெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் ஏகே.ஜோதியுடன் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சந்திப்பு.

>>டிடிவி.தினகரனுக்கு கோவை எம்பி நாகராஜன் ஆதரவு.

>>புதிய மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி.தினகரன் பெசண்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

>>திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சந்திப்பு மேற்கொண்டனர்.

>>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்எல்ஏ சந்திப்பு.

>>அதிமுக அமைப்பு செயலாளராக பரிதி இளம்வழுதிக்கு பதவி அளித்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

>>ஆளுங்கட்சி பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பாக வலியுறுத்திய போது, அதில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக ஆளுநர் கூறினார் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.

>>தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற்றால் , நீதிமன்றம் செல்வோம்.ஆளுநர் எங்களை அழைத்து பேசவில்லையென்றால், ஓரிரு நாளில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் - டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன்.

>>தமிழிசை சௌந்தரராஜனை இழிவாக பேசியதாக புகார் - நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு.

>>டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , சண்முகம் , மைத்ரேயன் எம்பி , மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்திப்பு.

>>பேரறிவாளனுக்கு பரோல் அளித்த முதல்வருக்கு நன்றி. அதிமுகவை பிளவுபடுத்தும் பாஜக சூழ்ச்சிக்கு எடப்பாடி.பழனிச்சாமி இரையாகிவிட கூடாது.சசி நீக்கினால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் - தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் கூட்டாக பேட்டி.

>>ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் தினகரன் அணியினரை  அழைத்து பேசி ஆட்சியில் பங்கு பெற செய்ய வேண்டும்.சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது யாருக்கு ஆதரவு என்ற எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம் - தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் கூட்டாக பேட்டி.

>>மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிட்டால் ஜெயலலிதாவை அவமானம் செய்வது போலாகும் என சசிகலா நினைத்தார் : எம்பி நாகராஜன்.

>>தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்-உடன் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு.

>>வரும் சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் நடைபெறும் பக்ரீத் பண்டிகை குர்பானி வழங்கும் நிகழ்ச்சிக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகிறார்.

>>திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நாளை விநாயகர்  ஊர்வலத்தை முன்னிட்டு  முத்துப்பேட்டை வட்டார டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தகவல்.

>>உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரும் வழக்கில் செப்.18 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என திருச்சி 2வது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

>>திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 2,780 கிலோ தங்கம் எஸ்பிஐ வங்கியில் முதலீடு.

>>நாகை : கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு.

வேளாங்கண்ணி  புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று  மாலை  கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் செப்.24-ம்  தேதியை பணி நாளாக ஆட்சியர் ஹரிகரன் அறிவித்துள்ளார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28