TSP NEWS 11.5.18
இன்றைய செய்தித்தாள் செய்திகள் 11-5-2018 *ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. *வடமாநிலத்தவர் மீது தாக்குதல் : 'வதந்தி பரப்பினால் குண்டர் சட்டம் பாயும்' குழந்தை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி எச்சரித்துள்ளார் *பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 9 பேர் பலி பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். *உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமை நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமையை வனத் துறையினர் வியாழக்கிழமை விரட்டினர். *மக்களோடு இணைந்து பணியாற்றும் உணர்வை சா.கணேசனிடமிருந்தே பெற்றேன்: மு.க.ஸ்டாலின் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை மறைந...