MENU

Show more

இன்றைய முக்கிய செய்திகள் 20.9.17

இன்றைய செய்தி துளிகள்..

📡🌒2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


📡🌒குஜராத்தில் ‘வெறித்தனமான வளர்ச்சி’ சமூக வலைதள பிரசாரத்தால் பதறியடிக்கும் பா.ஜனதா
குஜராத் மாநிலத்தில் வளர்ச்சி என்ற கோஷத்தை விமர்சனம் செய்யும் விதமான சமூக வலைதள பிரசாரம் அதிகரித்து உள்ளது.


📡🌒முன்னாள் கவர்னர் என்.டி. திவாரி மருத்துவமனையில் அனுமதி, நிலைமை கவலைக்கிடம்
முன்னாள் கவர்னர் என்.டி. திவாரிக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல் நிலை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது.


📡🌒பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விரைவில் சிறப்பு அறிவிப்புக்கள் அருண் ஜெட்லிபொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக விரைவில் சிறப்பு அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.


📡🌒பலர் கற்பனையில் தானும் கெட்டு, பிறரையும் கெடுப்பதை நிறுத்த வேண்டும் முதல்-அமைச்சர் பழனிசாமி
பலர் கற்பனையில் தானும் கெட்டு, பிறரையும் கெடுப்பதை நிறுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.


📡🌒பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி: தி ஜப்பான் டைம்ஸ் கட்டுரை பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன என தி ஜப்பான் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அகமதாபாத்தில் கடந்த் 14 ந்தேதி  நடைபெற்றது .புல்லட் ரயில் திட்டப்பணிக்கு  அடிக்கல் நாட்டிய பிரதமர்  மோடி இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என புகழ்ந்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும் போது இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றினால் முடியாதது என எதுவும் இல்லை  என கூறி இருந்தார்.
இந்த நிலையில் தி ஜப்பான் டைம்சில்   ஒரு கட்டுரை வெளியிடபட்டு உள்ளது. அதில் மோடி செயல்பாடுகள் தோல்வி  அடைந்துள்ளதாக  சுட்டி காட்டி உள்ளது.



📡🌒மும்பையில் கனமழை எதிரொலி: 75 விமானங்கள் சேவை ரத்து பயணிகள் அவதிமும்பையில் கனமழை காரணமாக 75 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


📡🌒பாரிஸ் பருவகால மாற்ற ஒப்பந்தத்தைக் கடந்தும் செயல்பட இந்தியா தயார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...


📡🌒ஐதராபாத்தில் பணத்திற்காக அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை போலீஸ் பிடித்து உள்ளது.


📡🌒சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க விமானநிலையம் அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது.


📡🌒மின்சார கொள்முதலில் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது


📡🌒சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கணேஷ் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை


📡🌒ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குநர் ராமன், சென்டாக் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு



📡🌒நிவாரணம் வழங்கக்கோரி சேலம் அரசு மருத்துவமனையில் மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டம்


📡🌒அரசு விழாவில் அரசியல் பேசுவதாக கூறுவது தவறு; ஆட்சியை குறை கூறியதால் பேச வேண்டிய கட்டாயம்: முதல்வர்

📡🌒"மும்மதத்தினர் வாழும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மாவட்டம் நாகை மாவட்டம்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி


📡🌒வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி தொடங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி


📡🌒"கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்" - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு


📡🌒சிவகங்கை: திருப்புவனம் அருகே ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக்கூறி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்


📡🌒அக்டோபர் 25 அன்று தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அன்றிலிருந்து 2 அல்லது 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்



📡🌒சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சத்தியலெட்சுமி என்ற பெண்ணிடம் 15 சவரன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பட்டப்பகலில் துணிகராச் செயலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


📡🌒மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுவன் - சிவகங்கையில் பரிதாபம்
சிவகங்கை அருகே வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026