MENU

Show more

வருகிறது பிளஸ் 1 ல் மாற்றம்..



பிளஸ் 1 மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் : அரசு உத்தரவு வெளியீடு

பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவுக்கும் மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ச்சியான கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு அகமதிப்பீடு மதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் வழங்கலாம்.

அவற்றில் மாணவர்கள் வருகைப் பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள், 80 -85 சதவீதம் வரை வருகைப் புரிந்தவருக்கு 2 மதிப்பெண்களும், 75 - 80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத்தேர்வில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல் திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.

தொழிற்கல்வி செய்முறைப் பாடத்துக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அதிகபட்சம் 25 வழங்கலாம். அவற்றில் மாணவர்கள் வருகைப்பதிவுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகைப் புரிந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள், 80 - 85 சதவீதம் வரை வருகை புரிந்தவருக்கு 4 மதிப்பெண்களும், 75 -80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வில் அதிகப்பட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 15 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.

வினாத்தாள் வடிவமைப்பு: வினாத்தாள் வடிவமைப்பினைப் பொருத்தவரையில், உயிரியல் பாடத்தில் (தாவரவியல், விலங்கியல்) ஆகிய 2 பாடத்துக்கு தலா 35 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரு மதிப்பெண் வினாக்கள் 4, மூன்று மதிப்பெண் வினாக்கள் 3, ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2 என கேட்கப்பட வேண்டும். வினாத்தாள் வடிவமைப்பு தொழிற்கல்விக்கு ஒரு மதிப்பெண்ணில் 15-ம், மூன்று குறுவினாக்கள் மதிப்பெண்ணில் 10-ம், சிறுவினாக்கள் 5 மதிப்பெண்ணுக்கு 5-ம், பெருவினாக்கள் 10 மதிப்பெண்ணுக்கு 2-ம் என 90 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்வியும் என 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 15 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 5 கேள்விகளும் என 70 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம் பெறும். கற்றலின் நோக்களை மதிப்பெண்களாக அறிந்து கொள்வதற்கு 30 சதவீதமும், புரிந்து கொள்வதற்காக 40 சதவீதமும், பயன்படுத்துதல் 20 சதவீதமும், திறனடைதல், படைப்பாற்றல் 10 சதவீதமும் அளிக்கப்படும். ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் என ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் வடிவமைக்கப்படும்போது கற்றல் நோக்கங்களுக்காக ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28