அயல் நாட்டு பேய் - பகுதி 3
அயல் நாட்டுப் பேய்
பகுதி .3
முன்கதை சுருக்கம்
பகுதி 1Click here
பகுதி 2 Click here
அவன் அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்தது. "யார் நீ? " என்றான் சாரா. 'நானா ? என்றது பேய் .ஆமாம் என்றான் .பேய் என்றது. சாரா சிறிதும் பயப்படவில்லை ஏன் என்றால் அவன் ஒரு தைரியமான இளைஞன் . பேயா?
ஆம் ,அயல்நாட்டுப்பேய்.
அயல் நாட்டுப் பேயா? இங்கு என்ன பண்ணுற ? எனக் கேட்டான் . நான் கடந்த சில நாட்களாக இந்த பகுதியிலதான் இருக்கேன் . அவ்வப்போது இந்த பூமியை சுற்றி வருவேன். எதேச்சையாக இந்த பக்கம் வரும் போது உன்னை பார்த்தேன். கொஞ்ச காலமா தொடர்ந்து பார்க்கிறேன் நீ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்ச .அதனால உன்னைப் பார்க்க வந்திருக்கேன் . என்றது பேய் .
அப்படியா ? அப்படி என்ன வித்தியாசத்தை நீ என்னிடம் கண்டே? எனக் கேட்டான் சாரா . "இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் இரவில கையில் ஒரு ஒளி - ஒலி டப்பியை (phone)வைத்துக் கொண்டு தலைக்கவிழ்ந்த படி அதைத் தடவி தடவி பார்த்துக் கொள்கிறார்கள். தனியே சிரிக்கவும் பேசிக்கவும் செய்கிறாங்க . ஆனா நீ மட்டும் தினம் தினம் இந்த இரவின் அழகை ரசித்தபடி இருக்க . இந்த உலகில் மனித இனம் மட்டுமே கண்டு ரசிக்கக் கூடிய இரவின்அழகை இரண்டொரு நிமிடங் கூட பார்க்கத் தயாராக இல்லை இந்த இளைய சமூகம் . நீ மட்டும் மாறுபட்டு இருக்கிற . ஆகையாலதான் இங்கு வந்திருக்கேன். உன்னோடு தங்கி இந்த மக்களிடமும் உன்னிடமும் கற்றுக் கொள்ளப் போகிறேன் " என்றது பேய்.
புன்முறுவல் பூத்தபடியே 'நான் ஒன்றும் அவ்வளவு பெரிய அறிவாளி இல்லை ' என்றான் சாரா தன்னடக்கத்தோடு . இது பேய் என்பதில் கூட பயமில்லை, ஆனால் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்பது தான் அவனுக்கு பயம் . சரி என்னைத் தேடி வந்த உன்னை வரவேற்கிறேன். அதுதான் எங்கள் மரபு என்றான். நான் உன்கூடவே தங்கலாமா? என்றது பேய். சிறிது யோசித்தபடியே கேட்டான் "நீ ஆணா?பெண்ணா?"
பேய்கிட்ட கூடவா இந்த கேள்வி கேட்ப என்றது சிரித்தபடியே . பேய் என்றால் பெண்ணாகவும் கடவுள் என்றால் ஆணாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன | ஆண் பெண் பேதமற்ற ஒரு பெயராக இருக்கக் கூடாதா உன் பெயரைப் போல I. என்றது பேய். 'இல்லை சும்மாதான் கேட்டேன் ,எங்க நாட்டுல அப்படியில்லை ' என்றான் . பேய் அவனிடம் பேசிய முறையை வியந்து கொண்டே பதில்கள் சொன்னான் . 'சரி பேய்னு சொல்ற அதுவும் அயல்நாட்டுப் பேய்னு சொல்ற ஆனா இவ்வளவு அழகா தமிழ் பேசுற எனக்கேட்டான் . தமிழ் ஒரு எளிய மொழியாக இருக்கு, வந்த கொஞ்சம் நாட்களிலேயே கற்றுக் கொண்டேன் .அதோட 'நான் உங்க நாட்டு கடவுள் இல்லையே தமிழை கேட்கவும் பேசவும் மறுப்பதற்கு " என்றவுடன் சாரா அதிர்ச்சியடைந்தான் . இந்த இயல்பான உண்மையை நான் ஏற்கத்தான் வேண்டும் .இந்த அறிவு நூற்றாண்டைக்கடந்தும் நம் கடவுளுடைய காதில் தமிழ் ஒலிக்கவில்லையே . நமக்குத்தான் இன்னும் உணர்வு வரவில்லை என மனதிற்குள் நினத்துக் கொண்டே 'நீ என்ன நாத்திக பேயா?' என்றான் .
உண்மையைச் சொன்னால் நாத்திக சாயலா ? என்றது பேய் . சரி சரி இதோடு நம்ம வாதத்தமுடிச்சிப்போம் . தூங்க போகலாம் வா மணி 12 என்றான். 'சாப்பிட்டிங்களா ' என்றது பேய். வெட்டுப் பட்ட இடத்திலிடுந்து பீறிட்டுக் கிளம்பும் உதிரம் போல அவன் உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு தாக்கம் ஏற்பட்டு அவன் தொண்டையை அடைத்தது . என்னைப் போன்ற ஆதரவற்ற ஆண்களிடம் யாராவது கேட்பார்களா என தினம் தினம் ஏங்க வைக்கும் கேள்வி .அம்மா மட்டுமே இதுவரை கேட்ட கேள்வி அது .இவ்வளவு ஆழமான உணர்வோடு பேய் கேட்டது அவனை கலங்கச் செய்துவிட்டது .' ம் ' என்ற படியே அவனுக்கு நினைவு வந்தது வழக்கம் போல் இன்றும் பட்டினியாகத்தான் படுக்கப் போகிறோம் என்று . அந்த அறையினுள்ளே இருவரும் சென்றார்கள் . படுக்கையைப்பகிர்ந்து கொண்டான் . கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு ஆறையின் வட மேற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த மூடியில்லாத மிட்டாய் டப்பாவை கையில் எடுத்து இருந்து விட்டு பின் அதை அங்கேயே வைத்து விட்டு வெளியே சென்று கை கழுவி வந்து படுத்துக் கொண்டான் . இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பேய் அடப்பாவி இதற்குத்தான் என்னை ஆணா?பெண்ணா? என்று கேட்டானா , என்றபடி முனுமுனுத்தது பேய் . எதிர்காலத்தில் சிறைச் செல்ல வேண்டியிருந்தால் இது போன்ற பயிற்சி அவசியம் என்றான் சிரித்தபடியே . இருவரும் உறங்கிவிட்டார்கள் .
(இதோடுஅடுத்த திங்கள் தான் இவர்களின் கதை விழிக்கும் அதுவரை காத்திருங்கள்)
பகுதி .3
முன்கதை சுருக்கம்
பகுதி 1Click here
பகுதி 2 Click here
அவன் அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்தது. "யார் நீ? " என்றான் சாரா. 'நானா ? என்றது பேய் .ஆமாம் என்றான் .பேய் என்றது. சாரா சிறிதும் பயப்படவில்லை ஏன் என்றால் அவன் ஒரு தைரியமான இளைஞன் . பேயா?
ஆம் ,அயல்நாட்டுப்பேய்.
அயல் நாட்டுப் பேயா? இங்கு என்ன பண்ணுற ? எனக் கேட்டான் . நான் கடந்த சில நாட்களாக இந்த பகுதியிலதான் இருக்கேன் . அவ்வப்போது இந்த பூமியை சுற்றி வருவேன். எதேச்சையாக இந்த பக்கம் வரும் போது உன்னை பார்த்தேன். கொஞ்ச காலமா தொடர்ந்து பார்க்கிறேன் நீ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்ச .அதனால உன்னைப் பார்க்க வந்திருக்கேன் . என்றது பேய் .
அப்படியா ? அப்படி என்ன வித்தியாசத்தை நீ என்னிடம் கண்டே? எனக் கேட்டான் சாரா . "இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் இரவில கையில் ஒரு ஒளி - ஒலி டப்பியை (phone)வைத்துக் கொண்டு தலைக்கவிழ்ந்த படி அதைத் தடவி தடவி பார்த்துக் கொள்கிறார்கள். தனியே சிரிக்கவும் பேசிக்கவும் செய்கிறாங்க . ஆனா நீ மட்டும் தினம் தினம் இந்த இரவின் அழகை ரசித்தபடி இருக்க . இந்த உலகில் மனித இனம் மட்டுமே கண்டு ரசிக்கக் கூடிய இரவின்அழகை இரண்டொரு நிமிடங் கூட பார்க்கத் தயாராக இல்லை இந்த இளைய சமூகம் . நீ மட்டும் மாறுபட்டு இருக்கிற . ஆகையாலதான் இங்கு வந்திருக்கேன். உன்னோடு தங்கி இந்த மக்களிடமும் உன்னிடமும் கற்றுக் கொள்ளப் போகிறேன் " என்றது பேய்.
புன்முறுவல் பூத்தபடியே 'நான் ஒன்றும் அவ்வளவு பெரிய அறிவாளி இல்லை ' என்றான் சாரா தன்னடக்கத்தோடு . இது பேய் என்பதில் கூட பயமில்லை, ஆனால் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்பது தான் அவனுக்கு பயம் . சரி என்னைத் தேடி வந்த உன்னை வரவேற்கிறேன். அதுதான் எங்கள் மரபு என்றான். நான் உன்கூடவே தங்கலாமா? என்றது பேய். சிறிது யோசித்தபடியே கேட்டான் "நீ ஆணா?பெண்ணா?"
பேய்கிட்ட கூடவா இந்த கேள்வி கேட்ப என்றது சிரித்தபடியே . பேய் என்றால் பெண்ணாகவும் கடவுள் என்றால் ஆணாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன | ஆண் பெண் பேதமற்ற ஒரு பெயராக இருக்கக் கூடாதா உன் பெயரைப் போல I. என்றது பேய். 'இல்லை சும்மாதான் கேட்டேன் ,எங்க நாட்டுல அப்படியில்லை ' என்றான் . பேய் அவனிடம் பேசிய முறையை வியந்து கொண்டே பதில்கள் சொன்னான் . 'சரி பேய்னு சொல்ற அதுவும் அயல்நாட்டுப் பேய்னு சொல்ற ஆனா இவ்வளவு அழகா தமிழ் பேசுற எனக்கேட்டான் . தமிழ் ஒரு எளிய மொழியாக இருக்கு, வந்த கொஞ்சம் நாட்களிலேயே கற்றுக் கொண்டேன் .அதோட 'நான் உங்க நாட்டு கடவுள் இல்லையே தமிழை கேட்கவும் பேசவும் மறுப்பதற்கு " என்றவுடன் சாரா அதிர்ச்சியடைந்தான் . இந்த இயல்பான உண்மையை நான் ஏற்கத்தான் வேண்டும் .இந்த அறிவு நூற்றாண்டைக்கடந்தும் நம் கடவுளுடைய காதில் தமிழ் ஒலிக்கவில்லையே . நமக்குத்தான் இன்னும் உணர்வு வரவில்லை என மனதிற்குள் நினத்துக் கொண்டே 'நீ என்ன நாத்திக பேயா?' என்றான் .
உண்மையைச் சொன்னால் நாத்திக சாயலா ? என்றது பேய் . சரி சரி இதோடு நம்ம வாதத்தமுடிச்சிப்போம் . தூங்க போகலாம் வா மணி 12 என்றான். 'சாப்பிட்டிங்களா ' என்றது பேய். வெட்டுப் பட்ட இடத்திலிடுந்து பீறிட்டுக் கிளம்பும் உதிரம் போல அவன் உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு தாக்கம் ஏற்பட்டு அவன் தொண்டையை அடைத்தது . என்னைப் போன்ற ஆதரவற்ற ஆண்களிடம் யாராவது கேட்பார்களா என தினம் தினம் ஏங்க வைக்கும் கேள்வி .அம்மா மட்டுமே இதுவரை கேட்ட கேள்வி அது .இவ்வளவு ஆழமான உணர்வோடு பேய் கேட்டது அவனை கலங்கச் செய்துவிட்டது .' ம் ' என்ற படியே அவனுக்கு நினைவு வந்தது வழக்கம் போல் இன்றும் பட்டினியாகத்தான் படுக்கப் போகிறோம் என்று . அந்த அறையினுள்ளே இருவரும் சென்றார்கள் . படுக்கையைப்பகிர்ந்து கொண்டான் . கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு ஆறையின் வட மேற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த மூடியில்லாத மிட்டாய் டப்பாவை கையில் எடுத்து இருந்து விட்டு பின் அதை அங்கேயே வைத்து விட்டு வெளியே சென்று கை கழுவி வந்து படுத்துக் கொண்டான் . இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பேய் அடப்பாவி இதற்குத்தான் என்னை ஆணா?பெண்ணா? என்று கேட்டானா , என்றபடி முனுமுனுத்தது பேய் . எதிர்காலத்தில் சிறைச் செல்ல வேண்டியிருந்தால் இது போன்ற பயிற்சி அவசியம் என்றான் சிரித்தபடியே . இருவரும் உறங்கிவிட்டார்கள் .
(இதோடுஅடுத்த திங்கள் தான் இவர்களின் கதை விழிக்கும் அதுவரை காத்திருங்கள்)
Comments
Post a Comment