MENU

Show more

பிப் 15முதல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

தினகரன். மாவட்டத்தலைவர்.
TNPTFநீலகிரி மாவட்டம்.

ஆசிரியப்பேரினமே!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ள தொடர்வேலை நிறுத்த போராட்டம் அனைத்து சங்க ஆசிரியர்களும் மற்றட்ட மகிழ்ச்சியும், வரவேற்பும் பெற்றுள்ளது. இதுவரை
கடந்த கால போராட்ட வரலாற்றில் ஆசிரியபெருமக்களுக்காய் அயராது பாடுபட்டு வருகிற ஒரே சங்கம் TNPTF என்பதை பெருமையுடன் கூறுவேன். நீங்கள் நினைக்கலாம் நமது ஒன்றியத்தில் இருக்கின்ற சங்கங்கள் நமக்கு சில  தனிப்பட்ட முறையில் காரியங்களை செய்து கொடுத்துள்ளது என்று இது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று தான்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொழிளாலர் நலனுக்காக (ஆசிரியர்) தனது குரல்வளையை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நெறித்துக்கொண்டே இருந்தாலும் தொடர்ந்து போராடும் சங்கம் என்பது அனைத்து ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

இது போன்று 2002 ல்  தொடர் வேலை நிறுத்தத்தை TNPTF முன்னின்று நடத்தியது. பெரிய சங்கங்கள் எல்லாம் ஓடி ஒழிந்து கொண்டன.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் அந்த சங்களின் ஆசிரியர்களும் பள்ளியை இழுத்து மூடியதால், அந்த சங்கங்களின் மாநில நிர்வாகம் போராடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது என்பது வரலாறு சொல்லும் உண்மை.

2016 சட்டபை தேர்தலுக்கு முன்பே மிகப்பெரிய தொடர் வேலை நிறுத்தம் நடத்தவேண்டிய கட்டாயத்தை நம்மை ஆட்சிசெய்கின்றவர் களினால் நம்மீது திணிக்கப்பட்ட உள்ளது. 2011 தேர்தல் பரப்புரையில் தற்போதைய அரசு அறித்ததை குறைந்தபட்சம் கூட அறிக்காததால் தான் இந்த போராட்டம்.

ஏன் இப்போது எனக்கேட்கலாம்.
அரசு நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் எனப்பொறுமையாக காத்து இருந்தோம் இறுதில் ஏமாற்றமே மிஞ்சியது.  இந்த ஆசியர்கள் கூட்டம் ஏமாறும் கூட்டமில்லை என்பதை நிருபிக்கும் கூட்டம்.
ஜாக்டோ உயர்மட்டக் குழுவின் சில சங்கங்களின் பிரதிநிதிகள் ஆளும் அரசை எதிர்த்து போராட திராணி இல்லாததால் தான் பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போராட்டம் கண்துடைப்புக்காக நடத்திவந்தன. இப்பொழுது காலத்தின் கட்டாயத்தால் TNPTF தொடர் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் மற்ற சங்கப்பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் உங்களின் உறுப்பினர்களை இழக்க நேரிடும் என்பதை அந்த சங்க நிர்வாகிகளும் உணர்ந்துள்ளனர்.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளின் சுயநலத்தால் அந்த சங்க ஆசிரியப்பெருமக்கள்  உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கிறது என்பது உண்மை.
ஆசிரியர்களை உங்கள் உரிமைக்காக போராட தயாராக இல்லாத சங்கத்தில் நீங்கள் ஏன் உறுப்பினராக இருக்கவேண்டும் சிந்தியுங்கள்.
நீங்கள் சார்ந்துள்ள சங்கங்கள் இந்ததொடர்வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறதா என்பதை  பாருங்கள். இல்லையேல்?  உங்களுக்காக போராடும் சங்கங்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு தொடர்வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் தான் போராட வேண்டும்.

2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு CPS,
2009 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 12000 ரூபாய்க்கு மேல் இழப்பு.
Selection grade ல் இவர்கள் அடுத்த ஊதிய நிலைக்கு போக வேண்டியவர்களுக்கு மாதம் 15000 ரூபாய்க்கு மேல் இழப்பு. இன்னும் பல.

எனவே ஆசிரியபேரினமே,
இது நமக்கு
செய் அல்லது செத்துமடி என்ற தருணம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும். தொடர்வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள
உங்கள் மாநில நிர்வாகிகளை நிர்பந்தியுங்கள்.  இல்லையேல். நீங்கள் உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டகலத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் கைகோர்த்து போராட்டத்தில் இறங்குங்கள்.
நமது வெற்றியை வரலாறு சொல்லும்.
அதன் பலனை நமது குடும்பம் அனுபவிக்கட்டும்.

தோழர்களே!
 மீண்டும் ஒரு சரித்திரம் படைக்க புறப்படு.
என்றும் உங்கள் பணியில்
TNPTF. ...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28