MENU

Show more

jobs at airforce 2015

இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எஜூகேஷனல் இன்ஸட்ரக்டர், ஆட்டோ மொபைல் டெக்னீஷியன், கிரவுண்டு டிரெய்னிங் இன்ஸட்ரக்டர், இந்திய விமானப் படை (போலீஸ்) ஆகிய பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான ஆட்கள் தேர்வு இந்திய விமானப்படை நிலையம், தாம்பரம், சென்னையில் வரும் 20ம்தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 1988 ஆகஸ்ட் 1ம்தேதி மற்றும் 1999 மே 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். எழுத்துத்தேர்வு வரும் 20ம்தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. அன்று 10 மணிக்கு முகாமில் கலந்து கொள்வோர் மட்டுமே எழுத்துத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மைத்தை காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும், 044 - 2239 6565 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.indianairforce.nic.in என்ற இணையதள முகவரியில் பார்த்து பயன்பெறலாம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27