MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 27.10.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 10~27.10.17🗓*


☀தொடக்கக் கல்வி இயக்குநர்
அனைத்துப்பள்ளிகளிலும்  தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு  31.10.2017 அன்று காலை 11 மணிக்கு  தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

☀பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்குள்ள மனமொத்த மாறுதல் கேட்டல் பரிசீலிக்கப்பட்டு அரசு ஆணை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு

☀புதியதாக பதவி உயர்வு பெற்ற தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் தலா ஒரு தலைமை ஆசிரியர் வீதம்  15 நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கொடைக்கானலில் தலைமைப்பண்பு பயிற்சி.

☀அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளை CEO/DEEO தலைமையில் ஆய்வு (TEAM VISIT) செய்ய உத்தரவிடப்பட்டு  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் திறனும், கணித திறனும் பார்வையிட உத்தரவு.

☀மாநில திட்ட இயக்குநர் SSA- UDISE- தகவல் மற்றும் புள்ளி விவரங்கள் பள்ளிகள் வாரியாக சேகரித்தல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

☀பத்தாம் வகுப்பு துணை தேர்வு - செப்-அக்டோபர் 2017ல் நடந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

☀பள்ளி கல்வி துறையில்
சிக்கனம் மற்றும் சேமிப்பு - பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்திட உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

☀மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை - அரசு கடித எண்:64435/FR-V/94-5

☀RMSA - அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

☀பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

☀சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்
குருபூஜையை முன்னிட்டு  காளையர்கோவில், திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

☀மாயவரம் மாயூரநாதசுவாமி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வருகின்ற 16.11.2017,வியாழக்கிழமை அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026