MENU

Show more

ஜாக்டோ ஜியோ மூன்றாவது நாள் வேலைநிறுத்தம்

ஜாக்டோ ஜியோ மூன்றாவது நாள் (24.01.19) வேலைநிறுத்தம்...

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 9 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில ஈடுபட்டுள்ளது...

நேற்று நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்
படம் : தேனியில் நடந்த ஜாக்டோஜியோ மறியல் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் மாணவர் நலன் கருதி ஜனவரி 25 ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது... இதனைத் தொடர்ந்து ஜாக்டோஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது , இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

எனினும் திட்டமிட்டபடி இன்று (24.01.19) வேலைநிறுத்தமும் , மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இன்று தலைமை செயலக ஊழியர் சங்கம் , வனத்துறை அலுவலர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளது.

நேற்றை விட இன்று கூடுதலாக அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் வேலைநிறுத்தம போராட்டத்திலும் மறியலிலும் ஈடுபடுவார்கள் என தெரிகிறது...

அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்குமா ?
போராட்டம் முடிவுக்கு வருமா ?

பொறுத்திருந்து பார்ப்போம்....

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28