MENU

Show more

ஜாக்டோ ஜியோ இரண்டாம் நாள் வேலைநிறுத்தம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம்!

அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' துவங்கியுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால், அரசு பணிகள் முடங்கி உள்ளன.

இடைநிலை ஆசிரியர்களை LKG UKG வகுப்பிற்கு பணியமர்த்தியதை கைவிட வேண்டும் , CPS ரத்து செய்ய வேண்டும் , ஊதிய முரண் களைய வேண்டும் , 21 மாத நிலுவை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது...

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என 2016 பொதுத்தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை வைக்கின்றனர்...

நீதிமன்றமும் இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்க இயலாது என அரசின் மெத்தன போக்கை சுட்டிகாட்டியுள்ளது...

ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது , அரசு அலுவலகங்களில் அரசு பணிகள் முடங்கியுள்ளன...

அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது....

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026