MENU

Show more

தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி?

தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி? வருமான வரி விலக்கு உண்டு!


நடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அந்த இலக்கினை எப்படி அடைவது என்பது பலருக்கும் தெரியாது.

அதிலும் இந்தத் தீபாவளியின் போது எந்த ஒரு ரிஸ்க்கும் ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டினை தொடங்கி, வருமான வரி விலக்குடன் கோடீஸ்வரன் ஆவது எப்படி அல்லது முதலீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.



பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டுத் தொகையினை 15 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம் அல்லது கோடீஸ்வர்ன் ஆகலாம்.

வட்டி விகிதம் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போது 8.1 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

15 வருட முதலீடு ரூ. 1.5 லட்சம்/ஆண்டு: ரூ. 46,75,910 ரூ. 1 லட்சம்/ஆண்டு: ரூ. 31,17,278 ரூ. 50000/ஆண்டு: ரூ. 15,58,634 ரூ. 25,000/ஆண்டு: ரூ. 7,79,319 ரூ. 10,000/ஆண்டு: ரூ. 3,11,730

பிபிஎப் (PPF )திட்டத்தில் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டுத் தீபாவளியின் போது 1,15,000 ரூபாயினை முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு 25 ஆண்டுக்கு பிறகு 1,30,00,000 ரூபாய் திரும்பக் கிடைக்கும்.

Article courtesy : Tamil good returns

By Tamilarasu

Read more at: https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/how-invest-ppf-create-rs-1-crore-25-years/articlecontent-pf65928-012888.html

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026