MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.9.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 புரட்டாசி 3 ♝ &   20•9•2019*

🔥
🛡பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு மாறுதல் அளித்து அரசாணை வெளியீடு.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

🔥
🛡அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்கு சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ், அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த வேண்டும் மற்றும் இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள  புறம்போக்கு இடங்களை அறிந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🔥
🛡இடைநிலை ஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை விதித்துள்ளது. - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா ? என்ற முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு தொலைதூர வழியில் பயின்று இருந்தால் அனுமதி தேவையில்லை.ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி தொடர்ந்து பயின்று முடிக்க வேண்டிய சூழலில் தகுந்த அலுவலரிடம் தொடர்ந்து பயில அனுமதி பெற வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது - நாளிதழ் செய்தி

🔥
🛡2019-2020 ம் நிதியாண்டிற்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பகிர்ந்தளித்தல் சார்பான அறிவுரைகள் மாநில திட்ட இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளது.

🔥
🛡மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து, பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல்

🔥
🛡தேர்வுகளின் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

🔥
🛡ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு (பிளாஸ்டிக்) வரும் 2-ஆம் தேதி முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தீவிரப்படுத்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

🔥
🛡அக்டோபர் முதல் நடுநிலைப் பள்ளிகளில் மின்னணு கைரேகை பதிவு நடைமுறை - நாளிதழ் செய்தி

🔥
🛡25.09.2019 முதல் 02.09.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி - ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களை காலாண்டு விடுமுறையில் சேர்க்க ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உத்தரவு!!

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026