MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 09.09.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  23 ♝ &   9•9•2019*

🔥
🛡ஒத்திவைக்கப்பட்ட 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடித் தேர்வுக்கான புதிய விண்ணப்பத் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB) இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளது.

🔥
🛡புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்- பள்ளிக்கல்வி  அமைச்சர் 

🔥
🛡தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

🔥
🛡தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகள் வரும் அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡அக்டோபர் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாளை (இளைஞர் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாட பள்ளிக்கல்வி துறை உத்தரவு

🔥
🛡தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

🔥
🛡பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

🔥
🛡தேசிய வருவாய் வழி திறன் தேர்வு கல்வி உதவித்தொகை: ஆர்வம் காட்டாத பள்ளிகள்: தகுதி பெற்றது 6695, ஆனால்  விண்ணப்பிக்கப்பட்டது 357. விரைந்து முடிக்க உத்தரவு - நாளிதழ் செய்தி

🔥
🛡ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை

🔥
🛡வாகன RC (பதிவு சான்று), இன்ஸயூரன்ஸ், பர்மிட், லைசென்ஸ ஆகிய ஆவணங்களின் அசலை தெளிவாக போட்டோ அல்லது cam scanner image ஆக மொபைல் போனில் வைத்திருந்து, போலீஸாரிடம் காண்பித்தாலே போதுமானது. அதற்கான மத்திய அரசின் அறிவிப்பு கடந்த  நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.

🔥
🛡திருநெல்வேலி, கடையநல்லூர் அருகே மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் கலந்துரையாடிய பிறகு
இன்னும் 10 ஆண்டுகளில் உங்களை பற்றி விசாரிப்பேன்" மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார் - நாளிதழ் செய்தி

🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றிய கோழியாளம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்  விக்னேஷ்வரன்  அவர்களின்  திருமண  நிகழ்வில் பள்ளிக்கு வர்ணம் பூசி, நுழைவாயில் அமைத்துக்கொடுத்து, கிராம் இளைஞர்களுக்கு  25000  விதைபந்துகள் வழங்கி உள்ளார் - ஊடகச் செய்தி

🔥
🛡அங்கீகாரமற்ற பள்ளிகளில் படித்துவரும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026