MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 29.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 15 ♝ 29•5•2019*

🔥
🛡2019-20 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டிய நிலையிலுள்ளதால் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 3 அன்று திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை
அறிவிப்பு.

🔥
🛡அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை : அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.

🔥
🛡என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன் : இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன.  சமீபத்தில்
உபரி இடைநிலை ஆசிரியர்களைப் புதிதாகத் தொடங்கவிருக்கும் மழலையர் பள்ளிகள் என்றழைக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் முன் மழலையர் வகுப்புகளுக்கான பயிற்றுநர்களாகப் பதவியிறக்கம் செய்ய முற்படும் அரசின் முயற்சிக்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியிருப்பது வேதனையான நிகழ்வாகும்.

🔥
🛡தமிழகத்தில் +2  பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு தவறிழைத்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - தேர்வுத்துறை அதிரடி.

🔥
🛡போலிச் சான்றிதழ்களை தடுக்கும் வகையில்  பட்டப்படிப்பு சான்றிதழ்களில் QR  குறியீடு, கல்லூரியின் முப்பரிமாண வடிவம் (Hollogram) ஆகியவற்றை அச்சிடுமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவு.

🔥
🛡MBBS , BDS  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்.

🔥
🛡சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை : அதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பு :  வழக்கம் போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை.

🔥
🛡மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 & 12 பொதுத்தேர்வு முடிவுகளில் 30% சதவிகித மாணவர்கள் தோல்வி அடைந்ததால் மாநிலத்தில் உள்ள 700 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3500 ஆசிரியர்களுக்கும் திறனாய்வு தேர்வு நடத்த மத்திய பிரதேச மாநில அரசு முடிவு.

🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்திடவும், உபரி ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டிடவும் மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை முன்பு இருந்ததுபோல் 20:1 ஆக மாற்றியமைத்து அறிவித்திடவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - நாளிதழ் செய்தி

🔥
🛡EMIS (கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் விவரங்கள் 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் - புதுக்கோட்டை CEO

🔥
🛡தனியார் பள்ளிகளின் மீதான மோகம் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களை சுண்டி இழுக்கச் செய்து, புதிதாக 600 மாணவர்களை சேர்த்துள்ளார் நாமக்கல் மாவட்ட  ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.ஆ.உதயகுமார் - நாளிதழ் செய்தி 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026