Posts

MENU

Show more

அயல் நாட்டுப் பேய் பகுதி-4

அயல் நாட்டுப் பேய் பகுதி-4   குறுந்தொடர்- ஆசிரியர் மு.வெ.ரா                                  விடியல் வெளியே வரத்தொடங்கியது .   நேற்றிரவு சற்று தூங்குவதற்கு நேரம் ஆனதால் வழக்கம் போல் இல்லாமல் தாமதமாகவே எழுந்தான் சாரா . அன்று ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்  . இரவில் பசியோடு படுத்ததால் வயிறு வறண்டு இருந்தது . சோறு கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று மாடியிலேயே இருந்த செங்கல்லையும் கொஞ்சம் விறகுகளையும் வைத்து அடுப்பு மூட்டினான் . அரிசி வேகும் முன்னாடியே குளித்து  முடித்துவிட்டான் . பெரிய தட்டு ஒன்றை எடுத்து அதுல கொஞ்சம் நெருப்பு அள்ளிப் போட்டு சுருங்கியிருந்த தன் சட்டையை அயன் பண்ணிக்கொண்டான் .இந்த காலத்திலயும் இப்படிச் செய்வதற்கு காரணம் அந்த அவுஸ் ஓனர் தான். கரன்ட் பில் பிரச்சனை. 5 ரூ      பான்ட்ஸ்  எடுத்து முகத்திலும் சட்டையிலும் பூசிக்கொண்டான் . ஆக்கி வைத்த கஞ்சியை உப்பு போட்டு குடிச்சிட்டு வேக வேகமா புறப்பட்டான் .  மார்க்சிம் கார்கி எழுதிய 'தாய்...

தலையங்கம் - யார் பொறுப்பு...

*தலையங்கம்* *யார் பொறுப்பு...* இந்த நாட்டில்.... 👉🏼நோயாளி இறந்தாலோ- தற்கொலை செய்து கொண்டாலோ மருத்துவர் தண்டிக்கப் படுவதில்லை... 👉🏼விபத்தை ஏற்படுத்திய டிரைவர் உயிரோடு தப்பினாலும் அவருடைய லைசென்ஸ் கேன்சல் செய்யபடுவதில்லை... 👉🏼குற்றவாளி தற்கொலை செய்து கொண்டால் போலீஸோ வக்கீலோ நீதிபதியோ பணிநீக்கம் செய்யபடுவதில்லை... 👉🏼கடன் வாங்கிய வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டால் வங்கி ஊழியரோ , மேனேஜரோ பணிநீக்கம், கைது செய்யபடுவதில்லை.... 👉🏼உதாரணம் ஏராளம்...சினிமா படம் ஒன்றில்  ஊருக்கு இளைச்சவன் மூன்று பேர்.. என கீழே உள்ளவர்களை சொல்வார்கள்... 1.பிள்ளையார் கோவில் பூசாரி 2.பழைய துணிக்கு பக்கெட் விக்கறவ 3.ஸ்கூல் வாத்தியாரு... 👉🏼அதற்காக இறந்த குழந்தைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என சொல்லுமளவுக்கு நாங்கள் பொறுப்பற்றவர்கள் கிடையாது... புள்ளிவிவர கல்விமுறையில் ஆசிரியர்களுக்கு தரப்படும் நெருக்கடி , ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமை காட்ட வேண்டிய  சூழலை உருவாக்குகிறது... 👉🏼இந்த காரணத்தையாவது இந்த சமூகம் உணர்ந்து கொண்டால் அதுவே ..... ? அதுமட்டும் போதாது... வரு...

கம்ப்யூட்டரே இல்ல; இணையதள சேவையாம்! தலைமை ஆசிரியர்கள் ஆதங்கம்

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கடந்த மாதத்தில் இணையதள சேவை வழங்குவதாக, தெரிவித்த அமைச்சரின் அறிவிப்பு, தண்ணீரில் எழுதிய வார்த்தைகள் போல் ஆனதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தலா மூன்று கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு முன், இவை வழங்கப்பட்டதோடு, பராமரிப்பு நிதி ஒதுக்காததால், பழுதடைந்த நிலையில், ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளன.இதை, இ-வேஸ்ட்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இருந்தால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, ஐந்து முதல், ஏழு கம்ப்யூட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவலக பணிகளுக்கு கூட, பல பள்ளிகளில், போதுமான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், கடந்த அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தருவதாக அறிவித்தார். ’கம்ப்யூட்டரே இல்லாத நிலையில், இணையதள வசதியை அமைத்து தருவத...

BRTE பணிகள் - RTI பதில்

Image
ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிகள் RTI விளக்கம்...

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்...

டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை திருத்தம் செய்யக் கோரி அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. இரு சங்கங்களின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ஐடிபிஐ வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து, கடந்த 1.11.2012 இல் இருந்து ஐடிபிஐ நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் வங்கியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்து 25 சதவீதமாக இருக்கிறது. அதேபோல வா...

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

TET பணி - அமைச்சர் அறிவிப்பு

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

SABL LESSON PLAN - RTI விளக்கம்..

Image
தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத வேண்டுமா RTI விளக்கம் - DATE : 06/07/2015 நன்றி : பாடசாலை.நெட்

TNPTF கல்விச் செய்திகள் 20.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 கார்த்திகை 4~20.11.17🗓* ☀அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா? RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஈடுப்படுத்த கூடாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. ☀பாடத்திட்ட மாற்றம் - இன்று முதல் துவக்கம்!: TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது: மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  அறிவிப்பு ☀அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு கல்விக்(சிறப்பு/தேர்வு/இதர) கட்டணங்கள் செலுத்த வேண்டும்: வகுப்பு மற்றும் பாடம் வாரியான முழு விவரங்கள்: RTI மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ☀ SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள் ☀நிகர்நிலை பல்கலைகழகங்கள் 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பண்படுத்தக்கூடாது என்ற UGCன் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்...

SABL WORKDONE - RTI விளக்கம்

Image
1 முதல் 4 ம் வகுப்பும் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் WORK DONE REGISTER பராமரிக்க வேண்டுமா RTI விளக்கம்...

ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு

Image
கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு - அ.க.இ மாநிலத் திட்ட இயக்குநர். ☀ஆரம்ப மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, ☀நவம்பர் 20 முதல் 30 வரை நடக்க இருந்த, *☀கற்றல் விளைவுகள் பயிற்சிகள்* அனைத்தும், ☀பயிற்சிக் கட்டகங்கள் அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் *ஒத்திவைக்கப்படுவதாக,* அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.

மொபைல் - ஆதார் இணைப்பு

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் த...

TNPSC CCSE JOBS 2017-18

*தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அறிவிக்கை எண் : 23/2017 நாள்:14.11.2017* ☀ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 (தொகுதி-IV), 2015-2016. 2016-2017 மற்றும் 2017-2018 ஆம்.ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி. தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், ☀நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 13.12.2017 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ☀விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ☀இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும், அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். *☀தமிழ்நாடு அமைச்சுப் பணி (குறியீட்டு எண் 050) :* ⚡494 - கிராம நிர்வாக அலுவலர்கள் (பதவிக் குறியீட்டு எண் 2025) *☀தமிழ்...

TNPTF கல்விச் செய்திகள் 15.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி29~15.11.17🗓* ☀அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்! -"அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது" என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ☀அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பிற்கு சுவரோவியம்! வண்ணமயமாகிறது 70 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் - நாளிதழ் செய்தி ☀சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ☀ தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். ☀புதுச்சேரி அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டவர் குறித்து தணிக்கை செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். பணி நியமனத்துக்கு தனி ...

இன்றைய செய்தி துளிகள் 14.11.17

இன்றைய செய்தி துளிகள்... சென்னையில் கன மழை பெய்யுமா? மழை படிபடியாக குறைய வாய்ப்பு , வானிலை மைய இயக்குனர்    பாலச்சந்திரன் விளக்கம் 👉🏼உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-இல் தீர்ப்பு! 👉🏼முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'! 👉🏼மேம்பட்ட வசதிகளுடன் சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை திறப்பு 👉🏼நூலிழையில் உயிர் தப்பிய சிறுமிகள்: இதனை அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது 👉🏼சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அறிவிப்பு! 👉🏼அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை 👉🏼பாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்! 👉🏼ஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு: 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி 👉🏼அன்னபூர்ணா ஸ்டூயோவில் தீ விபத்து! 👉🏼கோயில் தரிசனத்திற்கு பாகுபாடு காட்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ‘👉🏼சங்க தலைவன்’ படத்தில் ...

பாரத் நெட் சேவை

மத்­திய அரசு, ‘பாரத் நெட்’ திட்­டத்­தில், 2019 மார்ச்­சுக்­குள், அனைத்து கிரா­மங்­க­ளி­லும், அதி­வேக அகண்ட அலை­வ­ரிசை சேவையை வழங்க திட்­ட­மிட்டு உள்­ளது. இத்­திட்­டத்­தின், இரண்­டாம் கட்ட பணிக்­கான அறி­விப்பை, மத்­திய அரசு நேற்று வெளி­யிட்­டது. இதை­ய­டுத்து, 30 ஆயி­ரம் கிராம பஞ்­சா­யத்­து­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை­களை வழங்க, ஆர்­ஜியோ நிறு­வ­னம், 13 கோடி ரூபாய் முன்­ப­ணம் அளித்­துள்­ளது. ஏர்­டெல் நிறு­வ­னம், 30,500 கிராம பஞ்­சா­யத்­து­க­ளுக்கு, அகண்ட அலை­வ­ரிசை சேவை வழங்க, முன்­ப­ண­மாக, 5 கோடி ரூபாய் வழங்கி உள்­ளது. இது குறித்து, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர், ஜெயந்த் சின்கா கூறி­ய­தா­வது: பாரத் நெட் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டப் பணி, 31 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில் மேற்­கொள்­ளப்­பட உள்­ளது. அகண்ட அலை­வ­ரிசை சேவைக்­காக, 1.50 லட்­சம் கிராம பஞ்­சா­யத்­து­களில், கண்­ணாடி நாரிழை கேபிள்­கள் பதிக்­கப்­பட உள்ளன. ஏற்­க­னவே, 48 ஆயி­ரம் கிரா­மங்­களில், அகண்ட அலை­வ­ரிசை சேவை துவங்கி விட்­டது. மேலும், 75 ஆயி­ரம் கிரா­மங்­கள், சேவையை துவக்க தயா­ராக உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்...

TNPTF கல்வி செய்திகள் 14.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி28~14.11.17🗓* ☀பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் முறைகேடு சர்ச்சை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பிள்ளார். ☀G.O Ms.No. 333 Dt: November 09, 2017  PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders Published. ☀TNPSC-CCSE-IV (Group 4 & VAO Combined) Notification will be released today.(14.11.2017) Date of Examination: 11.02.2018 Last Date for Apply: 13.12.2017 ☀பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிடவேண்டும் என பல்க...

அறம்’ அடையாளம்

*என் கருவி 8 குழந்தைகளை போர்வெல்லிலிருந்து மீட்டிருக்கிறது..!” - ‘அறம்’ அடையாளம் காட்டிய மணிகண்டன்*  *#VikatanExclusive* மூடப்படாத போர்வெல் குழிகளில் ஏதும் அறியாக் குழந்தைகள் விழுந்து, அதை மீட்க முடியாமல் பலியான சம்பவங்கள், நம் நாட்டில் தொடர்ந்து நடந்துவந்தன. 2015-க்கு பிறகு அந்தக் கொடுமையான சம்பவங்கள் குறைந்துள்ளன. அதற்குக் காரணம், மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் கண்டுபிடிப்பு. ஐ.டி.ஐ ஆசிரியரான மணிகண்டனின் இந்தக் கருவியை தேசப் பாதுகாப்பு அமைப்புகளும் பல்வேறு மாநில நிர்வாகங்களும் பயன்படுத்திவரும் நிலையில், தமிழக அரசோ அவருடைய கண்டுபிடிப்பைப் பயன்படுத்த சுணக்கம்காட்டிவருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'அறம்' திரைப்படத்தில் அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பையும் அவருடைய பங்களிப்பையும் அங்கீகரித்து வெளிப்படுத்தியுள்ளதன்மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார், ஐ.டி.ஐ. ஆசிரியர் மணிகண்டன். மதுரை முத்துப்பட்டியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டனை அவருடைய ஆய்வுக்கூடத்தில் சந்தித்தோம். “என்னுடைய சொந்த ஊர் கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புதூர். திருநெல்வேலி அரசு ஐ.டி.ஐ-யில் ஃ...

குருப் 4 தேர்வு அறிவிப்பு 2017

Image
2018-பிப்.11 ல் குரூப்-4,வி.ஏ.ஓ., தேர்வு :டி.என்.பி.எஸ்.சி சென்னை: அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர்-13 ம்தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளையும் தனித்தனியே நடத்த ரூ.15 கோடி செலவாகும். காலதாமதம், பணவிரயத்தை தவிர்க்கவே ஒன்றிணைத்து நடத்துவதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(நவ.14) வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : தினமலர்

அயல் நாட்டு பேய் - பகுதி 3

                அயல் நாட்டுப் பேய்                         பகுதி .3 முன்கதை சுருக்கம் பகுதி 1 Click here பகுதி 2  Click here                        அவன் அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்தது. "யார் நீ? " என்றான் சாரா. 'நானா ? என்றது பேய் .ஆமாம் என்றான் .பேய் என்றது. சாரா சிறிதும் பயப்படவில்லை ஏன் என்றால் அவன் ஒரு தைரியமான இளைஞன் .          பேயா?             ஆம் ,அயல்நாட்டுப்பேய். அயல் நாட்டுப் பேயா? இங்கு என்ன பண்ணுற ?   எனக் கேட்டான் .        நான் கடந்த சில நாட்களாக இந்த பகுதியிலதான் இருக்கேன் . அவ்வப்போது இந்த பூமியை சுற்றி வருவேன். எதேச்சையாக இந்த பக்கம் வரும் போது உன்னை பார்த்தேன். கொஞ்ச காலமா தொடர்ந்து பார்க்கிறேன் நீ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்ச .அதனால  உன்னைப் பார்க்க வந்திருக்கேன் . என்றது பேய்     .     ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28