MENU

Show more

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் 2018

இன்ஜி : துணை கவுன்சிலிங்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு சேர, பல்கலை சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங் அறிமுகம் செய்யப்பட்டு, நான்கு சுற்றுகளுக்கு இட ஒதுக்கீடு முடிந்து விட்டது. ஐந்தாம் சுற்றுக்கு, ஆக., 14ல், விருப்ப பதிவு துவங்கியது. நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிகிறது.இதுவரை, 51 ஆயிரத்து, 990 பேர், கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றுள்ளனர். இறுதி சுற்றில், 15 முதல், 17 ஆயிரம் பேர் ஒதுக்கீடு பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு இடங்கள் ஒதுக்கப்படும்; நாளை  மாலை, 5:00 மணிக்குள், இடங்களுக்கு மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். அத்துடன், பொது கவுன்சிலிங் முடிகிறது.துணை கவுன்சிலிங்இந்நிலையில், பிளஸ் 2வில் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க தவறியவர்களுக்கு, துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் கவுன்சிலிங், நேற்று துவங்கியது. வரும், 20 வரை, https://www.tnea.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதேபோல, பி.ஆர்க்., படிக்கவும் துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

நன்றி : தினமலர் 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28