MENU

Show more

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு


பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தி, அவர்கள் தேர்ச்சி பெற, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு, இரண்டாவது முறையாக மறு தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026