MENU

Show more

POSITIVE ENERGY - PART 9 -" மனம் தான் "

POSITIVE ENERGY
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
            *‘’மனம்தான்.’’*
✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼
புத்தர் பெரிய அரச வம்சமத்தை சேர்ந்தவர். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிறார்.



ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும், கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள். அவர் மீது கல் வீசுகிறார்கள்.

‘அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள்.

புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று.

புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து,

“சன்னியாசியே! நாங்க இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர்!” அமைதியாக மட்டுமா! ஆனந்தமாக அதெப்படி?

அதற்கு புத்தர் சொன்னார்.,

“நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன்.அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர்.

நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன.

அதனால் அவற்றை ஏற்கவில்லை.அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்று வினவினார்.

"யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம்” என்றனர் மக்கள்.

“இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார் புத்தர்.

“எங்களுக்குத்தான்”  என்றார்கள் மக்கள்.

“சரி, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் புத்தர்.

ஆம்..
 நண்பர்களே...

நீங்கள்  உடந்தை ஆகாமல்,  உங்களை யாரும் தாழ்த்திவிட முடியாது.

நீங்கள் தாழ்வாக இருப்பதாக உணர்ந்தால் அதை செய்தவர் நீங்களே.

ஆக இது போன்ற சூழ்நிலையிலே உங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் உங்க மனம்தான்.

மற்றவர்கள் அவமானப்படுத்தும் போதும், கோபப்படுத்தும் போதும்,

• அவசரப்படாதீர்கள்

• ஆத்திரப்படாதீர்கள்

• கொஞ்சம்    நிதானத்தை கையிலெடுங்கள்.

• உங்கள் மனதை தயார் படுத்துவதில்தான்

உங்கள் வெற்றியே அமையும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28