MENU

Show more

வெட்கி தலை குனிய வேண்டிய அவமானம்

சாதனை புரிந்தது !!! அடத் த்தூதூ


பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை கருத்துக் கேட்பின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலின பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

இதே நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் தான் இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை தடுக்க இந்திய அரசு தவறிவிட்டது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

நன்றி : தினகரன்

உலகிற்கே கலாச்சாரம் , பண்பாட்டினை அகிம்சை அமைதியை போதித்த தேசம் இன்று ஆப்கன் , சிரியாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளது

இனியாவது திருந்துங்கடா ? 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28