வெள்ளி திரை விமர்சனம் - பாகுபலி நான் ஈ, மகாதீரா என்று பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின், பிரம்மாண்ட படம் 'மகாபலி'. தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் இல்லாத பிரபாஸும், ராணாவும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பும், காட்சிகளின் பிரம்மாண்டமும் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பதவிக்காக ராஜ குடும்பத்தில் ஏற்படும் பங்காளி சண்டை தான் கதை. அந்த கதைக்கான திரைக்கதையும், கதாபாத்திர அமைப்பு மூலமும் இயக்குனர் ராஜமவுலி மிரட்டியிருக்கிறார். ராஜ பதவிக்காக ஆசைப்பட்டு, ராஜா பாகுபலியை, அவருடைய பெரியப்பாவின் மகனும், படைத்தலைவனுமான ராணா கொலை செய்து விடுகிறார். பிறகு பாகுபலியின் குழந்தையை கொலை செய்ய முயற்சிக்க, அவர்களிடம் இருந்து அந்த குழந்தையை ராணாவின் அம்மாவும், மகராணியுமான ரம்யா கிருஷ்ணன் காப்பாற்றி விட்டு இறந்து போகிறார். தான் ஒரு ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமல் ஆதிவாசி சமூகத்தில் வளரும் அந்த குழந்தை வளர்ந்தவுடன், தன்னை அறியாமலேயே, தனது நாட்டிற்கு செல்லும் சுழ்நிலை எற்பட, பிறகு அங்கு நடக்கும் சம்பவங்கள் ...