MENU

Show more

LATEST NEWS UPDATES - 25.09.2020

அண்மைச் செய்திகள்
ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திய இசை மேதை





BIG BREAKING;

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபி ரசிகர்கள் அதிர்ச்சி.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது.




தற்போது எஸ்பிபி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார்.

வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.

இதனால் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் திடீரென்று நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இன்று அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டு உள்ளது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






----------------------------------------------------------------

அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும்; தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை மையம்.
----------------------------------------------------------------


பி.இ., பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதி வெளியீடு..!

----------------------------------------------------------------
*📕📰 இன்று மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்  இந்திய தலைமை தேர்தல் ஆணையர்*

*பீகார் சட்ட மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது*
----------------------------------------------------------------

*📕📰 சவுதியிலிருந்து வந்தேபாரத் திட்டத்தில் பயணிகளை அழைத்துவர அனுமதி..!*

*இந்தியா உள்பட்ட சில நாடுகளுக்கு விமானசேவை ரத்துசெய்யப்பட்டநிலையில் புதிய அறிவிப்பு.*




----------------------------------------------------------------

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது.
----------------------------------------------------------------
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு:

ஓரு கிராம் தங்கம் ரூ.4805-க்கு விற்பனை.

ஒரு சவரன் தங்கம் ரூ.38,440க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை


கிலோவுக்கு ரூ.2700 உயர்வு.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு.

----------------------------------------------------------------
பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்:

பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.




ஆலோசனைக்கு பிறகு மருத்துவர் குழு அறிக்கை வெளியிட உள்ளனர்.
----------------------------------------------------------------

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

கொரோனா பாதிப்பு நிலவரம், மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026