Posts

MENU

ADVERTISEMENTS1 after +22 ALL DAY NEWS587 ALL IN ONE JUNE 20224 ALL IN ONE JUNE 20237 ALL IN ONE JUNE 20248 ALL IN ONE JUNE 20256 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ALL IN ONE TERM III 20255 ANNUAL FORMS PDF5 ANSWER KEY TERM III 20242 ANSWER KEY TERM III 20265 apps8 AUDIO BOOKS2 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM2 CBSE RESULTS 20241 Children's MOVIES12 CINEMA51 CLUB ACTIVITIES7 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion112 Diwali 20231 Diwali 20255 EASY SHOP2 Edu1 Education1001 Education PDF files107 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 ELECTIONS 20267 EMPLOYMENT304 English GRAMMER15 ENNUM EZHUTHUM248 ENNUM EZHUTHUM TAMIL2 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Entertainment1 Finance20 FUTURE READY4 Gadgets8 GAJA RECOVER9 General723 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING5 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE3 ICT- DCA COMPUTER COUSRE BASICS3 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20246 Income tax 20262 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Jolly phonics1 Kalai thiruvizha14 KALANJIYAM APP15 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide8 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Maths MLM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION9 News pic61 NMMS 20257 NMMS EXAM 20234 NOON MEAL APP TN4 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Pongal 20251 Pongal 20262 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN8 Republic day 20242 Results32 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT4 School calendar52 School prayer51 SEAS1 Short films1 SLAS EXAM QUESTION PAPER PDF8 smc9 SMC MEETING PARENTS APP1 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC RESULTS 20251 SSLC STUDY MATERIALS12 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 17 SUMMATIVE ASSESSMENT TERM 21 TAHDCO1 TAMIL AUDIO BOOKS1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 23 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRAN2 THIRD TERM QUESTIONS PDF4 THIRUKURAL1 Time pass2 TN CPS2 TN EMIS5 TN RESULTS 20242 TN RESULTS 20251 TNEMIS12 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV12 TNPTF425 TNSED38 TNSED MANARKENI APP2 TNSED SCHOOLS APP UPDATE45 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET 20258 TNTET 202615 TNTET ENGLISH2 TNTET STUDY MATERIAL3 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC26 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக - 3 தேர்வுகளின் முடிவுகள் ஒரே நாளில் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக - 3 தேர்வுகளின் முடிவுகள் ஒரே நாளில் வெளியீடு  டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்பட்ட மூன்று குரூப் பணியிடத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளது என்று பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பேட்டியில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் அடங்கிய செயல் அலுவலர் பணியில் காலியான 23 இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை 2013 நவம்பர் 16 ஆம் தேதி நடத்தியது. இத்தேர்வை 20,433 பேர் எழுதினர். இவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் 49 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 23ம் தேதி நடைபெறும். மேலும், கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியல் ஆய்வாளர் பணியில் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,623 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்ப...

தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்

தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம் தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை முறையாக சென்றடைகிறதா, பயன்பெறும் மாணவ, மாணவியர் யார் போன்ற விரிவான விவரங்கள் கல்வித்துறையால் கணக்கெடுக்கப்படுகிறன. இந்த பணி தமிழக அரசின் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு அடிப்படையில் நடந்துள்ளது. இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள் 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள், http:/emis.tnschools.gov.i...

வெள்ளி திரை விமர்சனம் - காக்கா முட்டை

காக்கா முட்டை  ஈரானிய திரைப்படங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் திரைப்படங்களைப் பற்றி வியந்து பேசி வந்த, தமிழ் திரையுலகினரும், ரசிகர்களுடம் இனி தமிழ் படங்களையும் வியப்பாக பேசும் விதத்தில் உள்ளது 'காக்கா முட்டை'. சென்னை குடிசைப் பகுதியில் வாழும் சகோதர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ். இவர்களுடைய அப்பா சிறையில் இருக்க, அம்மா மற்றும் பாட்டியுடன் வாழும், இவர்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக இவர்களுடைய முயற்சியும், இறுதியில் இவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா இல்லையா, என்பது தான் படத்தின் கதை. கதை, இரண்டு வரியாக இருந்தாலும், அதை இயக்குனர் மணிகண்டன் படமாக்கியிருக்கும் விதம், திருக்குறளைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இப்படி பட்ட இடங்களில் எப்படி படப்பிடிப்பை நடத்தினார்கள்! என்று வியக்கும் அளவுக்கு, ஒவ்வொரு காட்சிகளும், அதன் பின்புலமும் இயல்பை மீறாமல் உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரது இயல்பான நடிப்பும், எக்ஷ்பிரெஷனும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. தெரு நாயை ரூ.25 ஆயிரத்திற்கு விற்பது, புது துணி...

கண் தானத்துக்கு '104'

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 கண் தானத்துக்கு '104'ஐ அழைத்தால் போதும்:டாக்டர்கள் குழு வீடு தேடி வரும் 🍎🍎🍎🍎🍎🍎🍎 தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும் '104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதுபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம்பற்றி மறந்து விடுகின்றனர்.இது போன்றோருக்கு உதவுவதற்காக தமிழக சுகாதாரத் திட்ட செயல்பாட்டில் உள்ள தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை தரும் '104' எண்ணை அழைத்தால் போதும். கண் தானம் பெற மருத்துவர்கள் குழு வீடு தேடி வரும்; இந்த சேவை சோதனை ரீதியாகதுவக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சேவை மையத்தின் விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: ஒருவர் இறந்ததும் குடும்பத்தினர் கண் தானம் செய்ய விரும்பினாலும் உடனடியாக யாரை அணுகுவது என தெரிவதில்லை; அதற்காகவே '104'ல் இந்த சேவை துவக்கப்பட்டு உள்ளது.தகவல் கிடைத்ததும் அருகில் உ...

இனஜினியரிங் கவுன்சிலிங் 2015

தொழிற்கல்வி பிரிவினருக்கான இன்ஜி., கவுன்சிலிங்; ஜூன் 15 ல் அறிவிப்பு அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ”தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை. வரும், 15ம் தேதி, ’ரேண்டம்’ எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,” என்றார். அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில், 100 இடங்கள் ஒத...

Top 50 biograhpies -3- BILL GATES

Biography of Bill Gates Short bio of Bill Gates William Henry Gates was born on October 28, 1955 in Seattle, Washington) As founder of Microsoft, Bill Gates is one of the most influential and richest people on the planet. Recent estimates of his wealth put it at $56 billion, this is the equivalent of the combined GDP of several African economies. In recent years he has retired from working full time at Microsoft, instead he has concentrated on working with his charitable foundation “The Bill and Melinda Gates Foundation” Bill Gates foundation of Microsoft Bill GatesBill Gates founded Microsoft in 1976 when he formed a contract with MITTS (Micro Instrumentation and Telemetry Systems) to develop a basic operating system for their new microcomputers. In the early days Bill Gates would review every line of code. He was also involved in several aspects of Microsoft’s business such as packing and sending off orders. The big break for Microsoft came in 1980 when IBM approached th...

எச்சரிக்கை மெர்ஸ் கோ வைரஸ்

பதிவு செய்த நாள்: ஜூன் 10,2015 22:57 எழுத்தின் அளவு: புதுடில்லி : பன்றிக்காய்ச்சல், எபோலா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புக்களில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதுமாக வெளிவராத நிலையில், புதிதாக மெர்ஸ்-கோ வைரசும் (மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ்) இந்தியாவிற்குள் நுழைய தயாராக உள்ளது. இந்த வைரஸ் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மெர்ஸ்-கோ வைரஸ் 2012ம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுவது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் ஒட்டங்களிடம் இருந்து மனிதனுக்கு வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் ஏற்படும் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில், இதுவரை 36 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், வயிற்றுப் போக்கு ஆகியன இந்த வைரசால் ஏற்படும் அறிகுறிகள். மனிதனின் சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்கக் கூடிய மெர்ஸ் வைரஸ் எகிப்து, ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய ந...

தமிழகத்தின் முக்கிய எண்கள்

உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா தீர்வு கிடைக்கவில்லையா. கவலை வேண்டாம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்... அவசரதேவைகளுக்கு குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.... TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH Office : 044 2567 0099 Intercom : 5618 Residence : 044 2235 1313 CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA Telephone No : 044 2567 2345 Intercom : 5666 LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT Telephone No. : 044 2567 0821, 2567 0271/104 Residence: Telephone No. : 044 2376 4377 SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L., Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111 Residence Telephone No : 2615 6146 Kalaignar Karunanidhi FB ADMIN 9941127722 (admin) Kalaignar Arangam +(91)-44-24327261, +(91)-9444221426 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) +91 – 44 – 2813 07 87 +91 – 44 – 2813 22 66 +91 – 44 – 2813 3510 தமிழக செய்தி ஊடகங்கள் www.dailythanthi.com 044 2538 773...

கல்வி கடன்

🌻கல்வி கடன்🌻 🍇🍇🍇🍇🍇🍇🍇🍇 வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை... தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது. மாணவர் மைனராக இருந்தால், பெற்றோர் பெயரிலும், மேஜராக இருந்தால், மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் பெயரிலும், வங்கிக் கடன் அளிக்கப்படும். கடன் தொகை, 4 லட்சம் ரூபாய் வரை, எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. 4 லட்சம் முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாம் நபர் உத்தரவாதம் அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல், வாங்கும் கல்விக் கடனுக்கு, கடன் தொகை அளவுக்கான, சொத்தை உத்தரவாதமாக அளிக்க வேண்டும். கடன் கோரும் விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கா...

இட ஒதுக்கீடு 25%

?சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கே.ஜி.முதல் ஒன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது. ஒவ்வொரு சுயநிதி பள்ளியிலும் நுழைவு வகுப்புகளில் சேர்க்கலாம் என்ற உத்தரவின்படி கடந்த காலங்களில் கே.ஜி.,முதல், 6 ,9,11ம் வகுப்புகளிலும் மாணவர்களை சேர்த்தனர். 'நுழைவு வகுப்பு' என்பதை தவறாக புரிந்து கொண்ட சில பள்ளிகள் 6, 9, 11ம் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. இவர்களுக்கான கட்டண நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேர்ந்தது. இது குறித்து சமீபத்தில் வெளியான மற்றொரு உத்தரவில், “தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பு என்பது கே.ஜி.,முதல் ஒன்றாம் வகுப்பு வர...

TNPL JOBS 2015

🌹🍎🍎🍎🍎🌹🌹🍎🌹🌹🌹 தமிழ்நாடு செய்தித்தாள் & காகித நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி 📘📘📘📘📘📘📘📘 அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுனத்தில் (TNPL) நிரப்பப்பட உள்ள 42 செமி ஸ்கில்டு மற்றும் ஸ்கில்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42 பணி: Semi-Skilled, Skilled பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: துறை: Production, Energy Electrical, Electrical Workshop, Telephones & Automobile - 25 Semi Skilled (C) (Electrician) சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.32,800 Semi Skilled (B) (Electrician) சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.33,800 Semi Skilled (A) (Electrician) சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.34,900 Skilled (B) (Electrician) - 25 சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.36,100 துறை: Production & Energy - 17 Semi Skilled (C) (Instrument Mechanic) சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.32,800 Semi Skilled (B) (Instrument Mechanic) சம்பளம்: தோ...

B.ED RESULT 2015

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670 பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மே 25ம் தேதி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 இடங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிகிறது. எனவே பிஎட் தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 கோடியில் பாகுபலி

350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாகுபலி: தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி சில வருடங்களுக்கு முன் இயக்கிய நான் ஈ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்தப்படத்துக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலிக்கு இந்திய அளவில் கவனஈர்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த பேரும் புகழையும் தக்க வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செலவு பண்ணாத மிகப்பெரிய பட்ஜெட்டில் பாகுபலி என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். வரலாற்றுப் பின்னணியில் நிகழும் கதை அம்சம் கொண்ட படமாக ஆரம்பிக்கப்பட்ட பாகுபலி படத்துக்கு பிரம்மாண்ட செட்களும், கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் தேவைப்பட்டன. அதற்கான செலவுத் தொகையை கணக்குப்போட்டபோது பாகுபலி படத்தை இரண்டு படமாக... அதாவது இரண்டு பாகங்களாக எடுத்தால்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தனர். அதன்படி தற்போது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது பாகுபலி படம்.இதுவரை 350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது முதல் பாகத்துக்கான முழுப்படமும் தயார். அதோடு இரண்டாம்பாகத்துக்கான 40 சதவிகித படமும் தயாராகிவிட்டதாம். இன்னும் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் இரண்...

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: செயலர் விளக்கம்

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: செயலர் விளக்கம் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக விண்ணப்பித்தோர் 'புரவிஷனல்' சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம்; கலந்தாய்வுக்கு வரும் போது கொண்டு வந்தால் போதும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., மற்றும் பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் மே 13ல் துவங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 9- கடைசி நாள். ஜூன் 20க்கு மேல் கலந்தாய்வு துவங்கும்.டிப்ளமோவை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் கடைசி இரண்டு பருவத் தேர்வுகளின்படி 'கட்- ஆப்' மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு, ஆறு பருவத் தேர்வு முடிவுகளின்படி 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.மே 30ல் டிப்ளமோ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் மதிப்பெண் பட்டியல் 'ஆன்லைன்' ல் வெளியிடப்பட்டது. 'மாணவர்கள் பி.இ., படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 'புரவிஷனல்' சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலிடெக்...

LAB ASST EXAM CUT OFF

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது. அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அரசு தேர்வுத்துறை நடத்திய இந்தத் தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆரம்பநிலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட விகிதாச்சார முறை மாவட்ட அளவில் இருக்குமா? அல்லது மாநில அளவில் இருக்குமா? என்ற சந்தேகம் தேர்வெழுதியவர்கள் இடையே நிலவுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் மாவட்ட அளவில் தான் நிரப்பப்படும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியை...

jobs in india post

✉📩📨✉📩📨✉📩📨 அஞ்சல் துறையில் 105 பணிகள் .         இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 105 தபால் உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.             மொத்த காலியிடங்கள்: 105 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Postal Assistant/Sorting Assistant 57 2. Postman - 38 3. Multi Tasking Staff - 10 தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 21.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800/2400 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.appost.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தே...

வெள்ளி திரை விமர்சனம்- மாசு

வெள்ளி திரை விமர்சனம்- மாசு கதாநாயகன்-கதாநாயகி: சூர்யா-நயன்தாரா. டைரக்ஷன்: வெங்கட் பிரபு. கதையின் கரு: பேய் உதவியுடன் வில்லன்களை பழிவாங்கும் இளைஞன். சிரிப்பு பேய்களை பார்த்து இருக்கிறோம். ‘சீரியஸ்’ ஆன பேய்களையும் பார்த்து இருக்கிறோம். நெகிழ்ந்து உருக வைக்கும் பேயை பார்த்து இருக்கிறீர்களா? சூர்யா-வெங்கட் பிரபு கூட்டணி முதல்முறையாக இந்த புது பேயை அறிமுகம் செய்து இருக்கிறது. மாஸ் என்கிற மாசிலாமணி துணிச்சலான திருடன். நண்பன் ஜெட்டு துணையுடன் ஒயின்ஷாப்பில் பணத்தை கொள்ளை அடிக்கிறான். அடுத்து, கடற்படை அதிகாரி போல் நடித்து கப்பலில் கொள்ளை அடிக்கிறான். பணத்துடன் காரில் வரும்போது, விபத்தில் சிக்குகிறான். மரணத்தின் வாசலை தொட்டு மீண்ட அவன் கண்களுக்கு பேய்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. பேய்களின் உதவியுடன் பணம் சம்பாதிக்கிறான். இந்த சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய பங்களாவுக்குள் பேய் இருப்பதாகவும், அதை விரட்டினால் பணம் கொடுப்பதாகவும் போன் வருகிறது. மாஸ் அந்த பங்களாவுக்குள் நுழைய-அவனைப் போன்ற தோற்றத்துடன் மிரட்டலான ஒரு பேய் ஆஜராகிறது. இலங்கை தமிழ் பேசுகிறது. மாஸ்சிடம் மொத்தமாக பணம் சம்பாதிக்கும் ஆச...

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்று டவுண்லோட்

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்று டவுண்லோட் CLICK HERE

GROUP 4 கவுன்சிலிங் விவரம்

🌺🌺TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு 25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். JUNIOR ASSISTANT (V PHASE)- CERTIFICATE VERFICATION 10.06.2015 (8.30 AM) COUNSELLING- 11.06.2015(8.30 AM) TYPIST (IVPHASE)- CERTIFICATE VERFICATION 08.06.2015 (8.30 AM) COUNSELLING- 09.06.2015(8.30 AM) STENO-TYPIST GR.III (III PHASE)- CERTIFICATE VERFICATION 09.06.2015 (8.30 AM) COUNSELLING- 10.06.2015(8.30 AM) CLICK HERE FOR JOB SEATS COUNTING CAST WISE DETAILS CLICK HERE

ஜூன் 18ம் தேதி ஐ.ஐ.டி., தரவரிசைப் பட்டியல்

ஜூன் 18ம் தேதி ஐ.ஐ.டி., தரவரிசைப் பட்டியல் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் சேர, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதில், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐ.எஸ்.எம்., என்ற இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகியவற்றில் படிக்க, ’ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்’ என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கு முதலில், ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மே, 24ம் தேதி முடிந்தது. தேர்வு முடிவுகள் வரும், 18ம் தேதி வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள, 17 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் படிக்க முடியும். இதே போல், ஐ.ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மே...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM MOBILE APP DOWNLOAD LINK

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

JULY MONTH SCHOOL CALENDAR 2026

CENSUS DUTY TRAINING 2026

TNTET EXAM ANSWER KEY 2026 TRB RELEASED