MENU

Show more

8th PAY COMMISSION UPDATES 2026

8-வது ஊதியக் குழு லேட்டஸ்ட் அப்டேட்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 65% சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதா.. முழு விவரம் இதோ!

Image : pintrest / app 

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil • Updated: 6 Jul 2026, 3:22 pm IST

​மத்திய அரசு ஊழியர்களே, ஒரு குட் நியூஸ்.. 8-வது ஊதியக் குழுவின் வரவு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட, சம்பளத்தை 65% வரை உயர்த்த சங்கங்கள் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளன. ஃபிட்மென்ட் காரணி உயர்வு, வீட்டு வாடகைப்படி மற்றும் பயணப்படி சீரமைப்பு என ஊழியர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இது வெறும் பரிந்துரை என்றாலும், இந்த ஊதிய மாற்றம் உங்கள் நிதி நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடும். அரசின் இறுதி அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருப்போம்! உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

​மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு செம அப்டேட் வந்திருக்கு.. 8-வது ஊதியக் குழு வரப்போகுதுன்னு எல்லா இடத்திலயும் பேச்சாக இருக்கு. ஊழியர் சங்கங்கள் எல்லாம் விலைவாசிக்கு ஏத்த மாதிரி சம்பளத்தை உயர்த்தி தரணும்னு பயங்கர கோரிக்கை வச்சிருக்காங்க. ஃபிட்மென்ட் காரணி, வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படினு எல்லாத்துலயும் பெரிய மாற்றத்தை எதிர்பாக்கறாங்க. இதெல்லாம் உண்மையா நடந்தா, ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 65% வரை சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்காம்.. ஆனா, இது எல்லாமே இன்னும் பரிந்துரைகள் தான். அரசு என்ன முடிவு எடுக்கப்போகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம்..

ஏன் இந்த கோரிக்கை?

​இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பெருநகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சம்பளம் போதவில்லை என்று ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன. எனவே, சம்பளத்தை கணிசமாக உயர்த்தக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

சம்பளம் எப்படி உயரக்கூடும்?

​ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் இவைதான்:

ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor):

தற்போதுள்ள ஊதியக் கட்டமைப்பை மாற்றி, குடும்பத்தின் தேவைகளைக் கணக்கில் கொண்டு (4.4 அலகுகள்), சம்பளத்தை நிர்ணயிக்கும் காரணியை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். இது அடிப்படைச் சம்பளத்தை கணிசமாக உயர்த்தும்.

வீட்டு வாடகைப்படி (HRA):

நகரத்தைப் பொறுத்து (X, Y, Z) வாடகைப்படியை 36%, 24% மற்றும் 12% என உயர்த்த வேண்டும் அல்லது இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

பயணப்படி (TA/TPTA):

போக்குவரத்து செலவுகள் கூடியுள்ளதால், நிலை 1 ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 9,000 பயணப்படியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அகவிலைப்படி (DA) இணைப்பு:

விலைவாசி உயரும்போது, அகவிலைப்படி 25%-ஐத் தாண்டும்போதெல்லாம், அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்துவிட வேண்டும். அப்போதுதான் ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் சரியாகக் கணக்கிடப்படும்.

இந்த 65% உயர்வு என்பது எப்படி?

​ஒரு உதாரணத்திற்கு, தற்போது ஒரு நிலை 1 ஊழியர் சுமார் ரூ. 37,080 சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மேலே சொன்ன மாற்றங்கள் (உயர்த்தப்பட்ட ஃபிட்மென்ட் காரணி, HRA மற்றும் போக்குவரத்துப்படி) அனைத்தும் அமல்படுத்தப்பட்டால், அந்தச் சம்பளம் சுமார் ரூ. 61,344 ஆக உயரும். இது தோராயமாக 65% உயர்வு ஆகும்.

​இவை அனைத்தும் பல்வேறு ஊழியர் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் (AINPSEF, JCM போன்றவை) அரசாங்கத்திடம் சமர்ப்பித்த பரிந்துரைகள் மட்டுமே. 8-வது ஊதியக் குழு தனது அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. அரசு எந்தெந்த பரிந்துரைகளை ஏற்கும், எதையெல்லாம் மாற்றும் என்பது அரசாங்கம் எடுக்கும் இறுதி முடிவில்தான் உள்ளது.

​சம்பள உயர்வுக்கான கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அரசு எதை இறுதி செய்கிறதோ அதுதான் நடைமுறைக்கு வரும்.

(Article courtesy : The Economic Times Tamil இணையதளத்தில் வெளியான கட்டுரையின் முழுமையான செய்திப் பகுதி இதுவாகும்).

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27