புத்தகம் புத்தாக்கம்
பகலோ இரவோ எந்நேரமும் கையடக்க கைபேசியில் (Smart Phone) வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல் தடவிக் கொண்டே இருக்கிறோம். வேறு எந்த தேவையும் இல்லை நமக்கு என்று எண்ணும் அளவிற்கு கைபேசியால் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆம்... நம்மையும் அறியாமல்... கைபேசி மின்கலம் திறன் குறைந்து போனால் செய்வதறியாது தினறுகிறோம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கணினி குரல் கூறினால் பதட்டம் கொள்கிறோம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, நமக்கு விருந்தாகவும்; சில நேரங்களில் நஞ்சாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை. "எப்போதும் குறைகளை மட்டுமே கூறிக் கொண்டு இருக்காதே" - என என் பெற்றோர் கூறுவார்கள்.. ஆம்.. குறைகள் போதும்; இனி, நிறைகள் காண்போம்... அமெரிக்காவில் ஓர் ஏழைச்சிறுவன், ஒருபண்ணை முதலாளியிடம் புத்தகம் ஒன்றை இரவல் பெற்றான். படித்து முடித்தபின் அதை தனது வீட்டுக்கூரையில் வைக்க, மழையில் அது நனைந்துவிட்டது. அதனை உலர்த்தி பண்ணை முதலாளியிடம் கொடுக்க, அவர் அதனை வாங்க மறுத்து, அதற்குபதிலாக அவர் வயலில் வேலைசெய்யுமாறு பணித்தார். அந்த சிறுவனும் அவரின் வயலில் வேலை பார்த்துக்கொ...