MENU

Show more

கணிணி ஆசிரியர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆறாவது பாடமாக நடைமுறைபடுத்த வேண்டி-கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம்

*மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் ..*

இடம்: சேப்பாக்கம் , சென்னை                                        நாள்:07/05/2017 காலை:9மணி

நமது  கோரிக்கை வெற்றி பெற ஆதரவு தாரீர்:

      அனைத்து ஆசிரியர் தாய் சங்கங்களும், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கங்களும்  மற்றும் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் ,  தங்களின் மேலான ஆதரவை நல்கி வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களான எங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்களாக துணை செய்வதோடு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் கணினி கல்வி பெற மாபெரும் துணை புரிய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்..

    அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000  மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 39019க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் கோரிக்கை .

1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).
2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல்  பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்டப்பட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
3.) 2006 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை  கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
  4) அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்
6).மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:புதிய கல்விக் கொள்கை ,டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்பயன்பெறுவார்கள்".

வெ.குமரேசன் 9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,

ச.கார்திதிக் 9789180422 ,
மாநில பொருளாளர்  .
தமிழ்நாடு பி.எட் க கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026