Posts

MENU

Show more

மருத்துவ மாணவர் சேர்க்கை 2017-18

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி? சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.* 'நீட்' தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம். * அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம்சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, 'கட் - ஆப்' விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.* அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு...

நீட் தேர்வு முடிவு வெளியீடு

நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு முதல் 25 பேரில் ஒரு தமிழக மாணவர்கூட இல்லை நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்க மத்திய உள்துறைக்கு அனுப்பியது. குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்லை. இந்நிலையில், மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஜூன் 8ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. தேர்வில் குளறுபடி உள்ளதாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதில் ஜூன் 26ம் தேதிக்குள் சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை நேற்று காலை ...

CPS மாநில அரசுக்கு கட்டாயம் அல்ல..

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை. இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் ...

JOBS AT SHIPPING CORP MUMBAI

ஷிப்பிங் கார்ப்பரேஷனில் வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 எலக்ட்ரிக்கல் அதிகாரி டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 50 பணியிடம்: மும்பை பணி: Electrical Officer (Trainee) சம்பளம்: மாதம் ரூ.15,000 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ராணிக்ஸ் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: http://www.shipindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்க...

அரசுபள்ளியின் முக்கிய தேவை கணிணி ஆசிரியர்கள்

ஆறாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு.. கணினி அறிவியல் பாடத்திற்க்கு   மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 748 புதிய கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் கொண்டுவந்தமைக்கும்  மாண்புமிகு தமிழக முதல்வர் ,மாண்புமிகு பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஐயா" அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம்.  *6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் கணினி அறிவியல் பாடத்தில் ஓர் புதிய புரட்சி செய்யதிடவும், அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும்  கல்வித்தரத்தை தனியார் பள்ளிக்கு மேலாக உயரத்தவும், அரசுப்பள்ளியில் மாணவர் சேர்ககை உயரவும், தமிழகத்தின் கல்வித் தரத்தை மேலை நாட்டுக் கல்வித் தரத்திறக்கு நிகராக கொண்டு செல்ல கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் ஆறாம் வக...

சூப்பர் சிங்கர் பிரித்திகா

‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ - பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர் “எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் இறைவணக்கப் பாடலைப் பாடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் அவளும் பாடினாள். 'நீராருங் கடலுடுத்த' பாடலை அந்தக் குரலில் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அன்னிக்கு முழுக்க என் செவிகளில் அந்தக் குரல் மட்டுமே ஒலிச்சுட்டு இருந்துச்சு. அப்பவே பள்ளியின் சக ஆசிரியர்களிடம், 'நீங்க வேணும்ன்னா பாருங்க, இந்தக் குரல் நம் பள்ளி வளாகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் கேட்கும் காலம் வரும்'னு சொன்னேன். என் வார்த்தை நிஜமாகிடுச்சு” - கண்கள் விரிய நெகிழ்ச்சியான குரலில் சொல்கிறார் மாலதி. 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 5' பட்டத்தை வென்ற ப்ரித்திகாவின் தலைமையாசிரியர். ப்ரித்திகா குடும்பத்தினரோடு திருவாரூர் மாவட்டம், தியானபுரம்தான் ப்ரித்திகாவின் சொந்த ஊர். வீட்டின் அருகிலிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ப்ரித்திகாவின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ப்ரித்திகாவுக்குத்...

X STD SUPPLYMENTARY EXAMS 2017

*2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!* *நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.* *தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.* 10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள் ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள் ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள் ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள் ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம் ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல் ஜூலை 5ந்...

செய்தித் துளிகள் 22.6.17

*🌻தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் உள்ள செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி.*  *🌻கர்நாடகத்தில் ரூ.8,167 கோடி விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.* _ரூ.8,167 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டுறவு  வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன._  *🌻சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை சார்பில் 66 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வேலுமணி வெளியிட்டார்.* *🌻நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம், சேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டம் நவம்பருக்குள் முடிக்கப்படும் - பேரவையில் அமைச்சர் வேலுமணி தகவல்.* *🌻நெம்மேலியில் 150 மில்லியன் லி. கடல்நீரை குடிநீராக்கி விநியோகம் செய்ய 1,258 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் வேலுமணி.* *🌻ரூ.1,326 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டிக்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட...

ஊர்க்காவல் படையில் வேலை

*👮👮👮ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!* சென்னையில் ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  10ஆம் வகுப்பில் தேர்ச்சி/ தவறிய மற்றும் 18 வயது முதல் 50வயதிற்குள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

JOBS AT BENGALURU 2017

urgent requerments for Sales Executive Sales / Business Development Search Pointer 12th 1 yr experience Male Only ₹12,000 - ₹50,000/- Banashankari, Bengaluru 5 openings Telesales Telesales / Telemarketing Kasse Fincorp 10th 1 yr experience ₹12,000 - ₹15,000/- HBR Layout, Bengaluru Corporate Sales Executive-Bangalore Sales / Business Development Tikona Infinet Ltd Graduate 6 months experience Male Only ₹15,000 - ₹25,000/- Marathahalli, Bengaluru+29 more 100 openings Tele Marketing Executive Telesales / Telemarketing Search Pointer 12th 1 yr experience ₹15,000 - ₹25,000/- Banashankari, Bengaluru 5 openings Direct Sales - Bengaluru Sales / Business Development Tikona Infinet Ltd 12th Fresher ₹10,000 - ₹15,000/- Bommanahalli, Bengaluru 40 openings Delivery Boy Freshmenu 10th Fresher Male Only ₹12,200 - ₹18,000/- RT Nagar, Bengaluru 51 openings Counter Sales Executive - Bangalore Counter Sales Chumbak 12th Fresher Female Only ₹...

ஜி எஸ் டி வரி முழு விவரம்...

GST பற்றிய முழு விவரம்- தமிழில் click here to download PDF

தாட்கோ கடனுதவி

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது. எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம். இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி என்று ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அரசு நமக்கென்று ஒதுக்கும் பணத்தை எல்லோருக்குமான பொது திட்டங்களுக்கு திருப்பி விடுவதாக நிறைய புகார்கள் வருவதை நினைவில் கொண்டு தாட்கோவுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சிசெய்து பயனடையுங்கள். எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. கீழுள்ள தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். http://application.tahdco.com/ தேவையான ஆவணங்கள்: 1...

பாக் வீழ்த்தியது இந்தியா

*உலக ஹாக்கி லீக்; இந்தியா வெற்றி* லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. *லண்டனில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.* பாராட்டுவோம் நம் ஹாக்கி வீரர்களை.... 🏑🏑🏑🏑🏑🏑🏑🏑 💐💐💐💐💐💐💐💐 😜கிரிக்கெட்டில் வீழ்ந்தாலும் எங்க மீசையில மண்ணு ஒட்லயே...😜 For more http://tnsocialpedia.blogspot.com

B.ED ADMISSION 2017-18

(B.Ed) பி.எட். மாணவர் சேர்க்கை: 21 -இல் விண்ணப்ப விநியோகம் தொடக்கம் தமிழகத்தில் 2017-18 -ஆம் கல்வியாண்டில் பி.எட்., இரண்டாண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 21 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட 13 இடங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-18 -ஆம் கல்வியாண்டில், இரு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டும் விற்பனை செய்யப்படும். விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்: கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்...

SCHOOLS LIST OF HOLIDAY 2017-18

தொடக்க/ நடுநிலை / உயர்நிலை-மேல்நிலை பள்ளிகளுக்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் click here for PDF download

கல்வித்துறை அறிவிப்புகள் 2017

இன்றைய கல்வி மானிய கோரிக்கையின் அறிவிப்புகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும் 3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும். 4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும். ஆசிரியர் நலன் 7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ். 9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியி...

'தல' அஜித் - விவேகம் பாடல் டீசர் வெளியீடு

அஜித் விவேகம் - EXCLUSIVE click here for new vivegam song teaser 

இன்று அறிவிக்கப்படுமா - பயோமெட்ரிக் முறை

பள்ளிகளில், ’பயோமெட்ரிக்’ திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது. சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் நன்றி செய்தி : தினமலர்-  ... ...

சாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதி இந்தியா vs பங்களாதேஷ்

இன்று நடைபெறும் அரையிறுதி - வெல்லுமா இந்திய அணி  கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இரு அணிகளும் 'பி' பிரிவில் இடம்பெற்றிருந்தது. இந்திய அணி முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது. இதில் கங்குலி (66), யுவராஜ் சிங் (47) ஓரளவு கைகொடுக்க, இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.  இதை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் (51), சாகிப் (53) முஷ்பிகுர் (56*) அரை சதம் கடக்க, 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால், முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.  இந்தியாவுக்கு வெற்றி  இங்கிலாந்தில் 2009ல் 'டுவென்டி-20' உலக கோப்பை நடந்தது. இதன் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை சந்தித்தது. காம்பிர் (50), யுவராஜ் (41) விளாச, இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த வங்கதேச அணிக்கு பிரக்யான் ஓஜா 'சுழலில்' தொல்லை தர, 20 ஓவரில் 155 ரன்கள் மட்டும் எடுக்க, 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.  பழிதீர்த்தது இந்தியா  2011ல் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அரங்கேறியது. இதன் 'பி' பிர...

சட்டப்பேரவை நிகழ்வுகள் 14.6.17

இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் இந்த நேரத்தில் இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் முதல் அரைமணி நேரம் கேள்வி நேரம் நடந்தது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் 🎙விவாதங்கள் தொடங்கியது😯. 🔰திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான பண பேரம் 📹வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்😯. ஆனால் இந்த வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சபாநாயகர் இது குறித்து பேச மறுப்பு தெரிவித்தார். இதனால் சட்டமன்ற பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.   🔰எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யபட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இதனை தாக்கல் செய்தார். மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாநில ஜி.எஸ்.டி. மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 🔰சட்டசபையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடந்தது. 🔰கூட்டுறவுத்துறைக் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026