MENU

Show more

செய்தித் துளிகள் 22.6.17

*🌻தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் உள்ள செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி.*

 *🌻கர்நாடகத்தில் ரூ.8,167 கோடி விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.*

_ரூ.8,167 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டுறவு  வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன._
 *🌻சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை சார்பில் 66 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வேலுமணி வெளியிட்டார்.*

*🌻நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம், சேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டம் நவம்பருக்குள் முடிக்கப்படும் - பேரவையில் அமைச்சர் வேலுமணி தகவல்.*

*🌻நெம்மேலியில் 150 மில்லியன் லி. கடல்நீரை குடிநீராக்கி விநியோகம் செய்ய 1,258 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் வேலுமணி.*

*🌻ரூ.1,326 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டிக்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் வேலுமணி.*

*🌻உள்ளாட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமை படுத்தப்படும் - அமைச்சர் வேலுமணி.*

*🌻கட்டட வரைபட அனுமதி கோரும் மனுக்கள் இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - வேலுமணி.*

*🌻30 நாட்களுக்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுக்களுக்கு அனுமதி கிடைத்ததாக கருதி உரிமையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை தொடரலாம் - வேலுமணி.*

*🌻தியாகராயநகர் தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ.36 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் - வேலுமணி.*

*🌻சென்னை மாநகராட்சி கட்டட மேற்கூரையில் ரூ.39 கோடியில் சூரிய மின்உற்பத்தி தகடுகள் பொருத்தப்படும் - வேலுமணி.*

*🌻சென்னையில் போக்குவரத்து, மின்சாரம், கழிவுநீர், சொத்து வரி விரைவாக செலுத்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் - வேலுமணி.*

*🌻சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.226 கோடி செலவில் புனரமைக்கப்படும் - வேலுமணி.*

*🌻பாண்டிபஜார் - தியாகராயநகர் ரூ.20 கோடியில் பாதசாரிகள் வளாகம் அமைக்கப்படும் - வேலுமணி.*

*🌻ஆம்பூர் நகராட்சியில் ரூ.205 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் வேலுமணி.*

*🌻ராஜபாளையம் நகராட்சியில் ரூ.258 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் வேலுமணி.*

 *🌻தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேசவில்லை: மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி.*

_ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எங்களை அழைத்துப் பேசி குறைகளை தீர்த்தனர் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பேட்டி அளித்துள்ளனர். முதல்வராக இருக்கும் பழனிசாமி எங்களை அழைத்துப் பேசவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ரூ.13 ஆயிரமாக இருந்த ஒரு லோடு மணல் தற்போது ரூ.26 ஆயிரமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்._

 *🌻சைரனுக்கு பதில் பித்தலை பெயர் பலகை புதுச்சேரி அமைச்சர்களுக்கு புது அங்கிகாரம்.*

_மத்திய அரசு உத்தரவுபடி மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கார்களில் இருந்த சைரன் விளக்கு அகற்றப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் சுழல் விளக்கு கழற்றப்பட்ட அதிகாரிகள் வாகனங்களுக்கு புதிய பித்தளை பெயர் பலகை வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் எந்த துறை அதிகாரிகள் எந்த துறை என பெயர் பொறுத்தப்பட்டு உள்ளது

🌻குடியரசுத்தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் ராம்நாத்துக்கு அதிமுக ஆதரவு- எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026