MENU

Show more

வாட்ஸ் அப் பதிவு

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் - அதற்கான நெத்தியடி பதில்கள்...

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

= ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள் MLA மற்றும் MP அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் கனவு!
பல மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக தன்பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் இந்நிலையில் இவ்வளவு அக்கரை கொண்ட தாங்கள் ஏன் தன் பிள்ளைகளை சேர்த்து அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துக்கொள்ளகூடாது???


2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

= ஏன் தமிழ்நாட்டில் தமிழ்வழி பள்ளிகளை விட ஆங்கில வழி பள்ளிகள் மீது தங்களுக்கு இத்தனை அக்கரை ஆங்கிலம் அறிவல்ல மொழி தான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தமிழை நாம் காப்பாற்ற இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒரே வாய்ப்பு தமிழ் வழி பள்ளிகள் தான் - தாய் மொழியில் சிந்திப்பவனே புதியதை படைக்க இயலும் ஆங்கில அறிவு அடிமை பணிக்கே உதவும் ஐயா...

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

= ஆம், ஜெர்மன் நாட்டில் உள்ளவர்களை வேலைக்கு அழைத்தால் (5200+2800) 8,000 கூலிக்கு அவங்க வரமாட்டங்க...

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

= தமிழ்நாட்டில் ஆங்கில வழி வகுப்பை நடத்த தேவையான பயிற்சி அளிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உண்டா? அதில் பயிற்சி பெற தமிழ்வழி கல்வி கற்ற மாணவனுக்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்விகளையும் கேட்டுவிட்டு இந்த கேள்வியை கேட்டால் நன்று...

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

= அரசுப்பள்ளிகளின் மீது அரசிற்கு உள்ள அக்கரை... தனியார் பள்ளிகளின் வியாபார விளம்பரத்திற்கிடையில் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற உங்களை போன்றோரின் விமர்சனம் பெற்றோர் மனநிலையை மாற்றுகிறது...

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

= சட்டம் படித்த தங்களுக்கு தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லஞ்சம் வாங்கி கொண்டு தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் மீது என்ன நடவடிக்கை என்றும் தெரியாதா என்ன?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

= தனியார் பள்ளிகளை ஊக்குவித்து வியாபார வேட்டையில் பணம் பார்க்கும் கார்ப்ரேட்கள் தூவிய விதைகளின் வளர்ச்சி இந்த கேள்வி !!! அரசு பள்ளிகள் மற்றும் தமிழ்வழி பள்ளிகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்க சங்கங்களே காரணம்... நாளை அரசுப்பள்ளிகளால் அரசிற்கு பொருட்செலவு எனவே அரசு பள்ளிகளை மூடலாம் என தாங்கள் தீர்ப்பு வழங்கினால் அதை எதிர்க்க யாரும் இருக்க கூடாது...

சாதி, மதம், குலத்தொழில் போன்றவற்றை ஊக்குவிக்கும் மோடி அரசின் புதியக்கல்விக்கொள்கையை எதிர்த்து பிரச்சாரத்தை மக்களிடம் சங்கங்கள் எடுத்து செல்வதால் மேல் இருந்து எதாவது உத்தரவுங்களா ஐயா!!!



8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

= நீதிபதி கல்வித்துறை அமைச்சரின் வேண்டுகோளை செய்தித்தாளில் படிக்கவில்லை போல....

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

= அரசு இதற்கு தடைவித்து ஆண்டுகள் ஆகிறது நீதிபதி அறியாதது  வியப்பாக உள்ளது!!!

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

= எத்தனை அரசு ஆங்கிலவழி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தமிழகத்தில் உள்ளது??

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

= ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி மற்றும் TET-ல் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் நியமிக்கிறது அரசு!
ஆங்கில வழியில் அதாவது தனியார் பள்ளியில் பயின்றவர்களை நியமிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா அல்லது தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டும் அறிந்த வேற்று மாநிலத்தில் இருந்து ஆசிரியர்களை நியமிக்க ஏதேனும் திட்டமா?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

= AEEO, AAEEO, BRT, DEEO, DEO, CEO, ADPC, JD's இவர்களின் பணிகள் என்ன என்பதை ஒரு நீதிபதி அறியவில்லையா? அவர்களின் பணி விதிகளை ஒரு முறை படித்துவிடுங்கள் அப்புறம் இதுபோன்ற கேள்விகள் கேட்க தோன்றாது...

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

= நாட்டில் என்ன நடக்குது என்பதே தெரியாமல் பேசுவது போல் இருக்கிறது அரசு இதற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. பல்வேறு செய்தித்தாள்களில் தொலைக்காட்சிகளில் வந்தும் தாங்கள் அறியாதது வியப்பே!!! இத்திட்டத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு கண்டிப்பாக தடையில்லா மின்சாரம், கணிணி வசதி மற்றும் இணையதள இணைப்பு கிடைக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்...

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

= உடைந்த குடிநீர் குழாயின் இணைப்பை கூட மாற்ற அரசிடம் நிதியில்லையாங்க எஜமான்....

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

= நல்ல கேள்வி புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது சேர்த்து 10 ஆண்டு விவரம் தருவாங்க குமாரசாமி மாதிரி கணக்கிடாமல் நல்ல பாருங்க ஐயா...

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?
= கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு இந்த சமூகம் என்ன வாய்புகளை அவர்களுக்கு உருவாக்கிகொடுத்துள்ளது அவர்களின் இன்றைய நிலை என்ன என்றும் ஒரு புள்ளி விவரம் தயார் பண்ண சொல்லுங்கள்...

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

= இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது...

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

= கிராமப்புற அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் என்ன?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

= பயிற்சியில் பாதி ஆண்டு கழிகின்றது!!!

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ?

= பள்ளி ஆசிரியர்கள் பள்ளி அருகிலேயே தங்க வேண்டும் அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் வீடு அமைத்து தர வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை பல்வேறு குழுக்கள் அரசிற்கு அளித்துள்ளது...

குமாரசாமி எழுதிய கணக்கு புத்தகத்தை தூக்கி வீசிவிட்டு கல்வியாளர்கள் கல்வி வளர்ச்சிக்காக எழுதிய பரிந்துரைகளையும் கொஞ்சம் படிங்க ஐயா.
TNPTF

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026