Posts

MENU

Show more

மே தின வாழ்த்துக்கள்...

💪🏼வியர்வைகளால் முத்துக்கள் செய்பவனே.... 💪🏼நீ விதைத்த வியார்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து 💪🏼கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...! 💪🏼நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி இந்த உலகத்தை மிளிர செய்தவன்... நீ... அழுக்காகி அழுக்காகியே அர்த்தப்பட்டவன... 💪🏼நீ உயர்த்திய தோளில் உயர்ந்திருக்கிறது சமுதாயம்... நீ உயர்த்திய கரங்களில் பூத்திருக்கிறது மறுமலர்ச்சி.... 💪🏼உன் வியர்வை நாற்றம்... அது உன் நாட்டை மணக்கச்செய்யும் மகரந்தத்துகள்கள்... 💪🏼உன் கரங்களில் ஏற்படும் வடுக்கள் அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும் அடையாளங்கள்.... 💪🏼நீ ஏர்பிடித்திருக்காவிட்டால் என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது... நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால் இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள் ஆயுள் இழந்திருக்கும்...! 💪🏼தெரியுமா உனக்கு நீ ஓய்வெடுக்க ஒதுங்கினால் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும் இந்த உலகம்... 💪🏼என் பார்வையில் தாயும் நீயும் ஒன்று  தான் தாய் ரத்தத்தை பாலாக்குகிறாள்... நீ.. அதை வியர்வையாக்குகிறாய்... 💪🏼உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு விடியலை கண்...
🙏🏼வணக்கம்.. 💐TET தேர்வுக்காக நமது TNSOCIALPEDIA ,  பிரத்யேக வாட்ஸ் அப் குருப்பினை (TNSPDA-TET2017)  உருவாக்கியது. 💐இந்த குருப் வாயிலாக 100 க்கும்  அதிகமான STUDY MATERIALS & மாதிரி வினாத் தாள்கள் PDF வடிவில் பகிரப்பட்டது... 💐போட்டி தேர்வுக்கென தனி வாட்ஸ்அப் குருப்பினை உருவாக்கி மிக பயனுள்ள தகவல்களை பகிர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியது தமிழகத்திலேயே நமது TNSOCIALPEDIA வலைதளம்  மட்டுமே... 💐இன்றுடன் TNSPDA TET குழு கலைக்கப் படுகிறது ... 💐ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் பணிவான நன்றிகள்... நட்புடன் 🙏🏼R.R🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

BE அட்மிஷன் 2017-18

*📚BE Admission நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்📚�✍* ```இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு திங்கள்கிழமை (மே 1) முதல் தொடங்க உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்தக் கல்வியாண்டுக்கான (2017-18) கலந்தாய்வு அறிவிப்பைப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும். இதற்கான ஆன்-லைன் பதிவு மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆன்-லைன் பதிவுக்கு மே 31 கடைசித் தேதி. ஆன்-லைனில் பதிவு செய்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அல்லது நேரடியாக பல்கலைக்கழக மையத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும். விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் ...

இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்

Image
இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் சென்னை: தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறுகிறது. Courtesy : m.Dinamalar 

பாகுபலி 2 - சிறப்பு பார்வை

கடின உழைப்பை கௌரவியுங்கள்... பாகுபலி 2 பார்த்துவிட்டேன். முதல் பாகம் தந்த அதி உச்ச பிரமாண்டமும் பிரமிப்பும், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ... சொதப்பிவிடுமோ... என்ற லேசான சந்தேகத்துடன்தான் படம் பார்க்கப்போனேன். ஆனால்... அடேங்கப்பா... 'பாகுபலிக்கு இணையாக ஹாலிவுட்டில் மட்டுமில்லை... உலக அளவில், அதுவும் வரலாற்றுக் கதைப் படம் ஒன்றைச் சொல்லுங்க பார்க்கலாம்' என்று கேட்க வைத்துள்ளது. வெறும் பிரமாண்டம் மட்டுமில்லை. அந்த பிரமாண்டத்தை அத்தனை நுணுக்கமாக, நேர்த்தியாக இதுவரை எந்த இயக்குநரும் செய்து காட்டியதில்லை. உலக அளவில் ஜேம்ஸ் காமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குநர்கள்தான் தங்கள் படங்களுக்காக புதுப் புது கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இணையான ஒரு கண்டுபிடிப்பாளராக எஸ்எஸ் ராஜமௌலியைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில். இது வெறும் சரித்திக் கதைப் படம் மட்டுமல்ல... அந்த கதை நடந்த காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், தொழில் நுட்பங்கள், விஞ்ஞான சாதனங்கள் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து அதற்கு வடிவம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்... ஆஹா...

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்-133 ஆங்கிலம்-99 கணிதம்-80 இயற்பியல்-40 வேதியியல்-39 தாவரவியல்-60 விலங்கியல்-22 வரலாறு-213 புவியியல்-428 # பட்டியல் www.trb.tn.nic.in ல் உள்ளது # முன்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேராதோர் மே-10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மனித நேய மையம் - மாணவர் சேர்க்கை 2017

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேயம் பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய–மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில், 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018–ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30–ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. 7–ந்தேதி நுழைவுத்தேர்வு நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர். மாணவ–மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில...

TET - வாழ்த்துக்கள்...

💐வாழ்த்துக்கள்... *💐நீ எதுவாக நினைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்..*- சுவாமி விவேகானந்தர்.. 💐TET தேர்வு எழுதவுள்ள அனைத்து ஆசிரிய தோழர்களுக்கும் , தேர்வில் வெற்றி  பெற வாழ்த்துக்கள்... 💐வாய்ப்புகள் வானளவு.. வானமே எல்லை... 💐என்றும் கல்வி செய்திச் சேவையில் *TNSOCIALPEDIA* & நட்புடன் 🙏🏼R.R 🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!! வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம். RTGS : Real Time Gross Settlement. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்). குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும். தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும். _____ NEFT : National Electronic Fund Transfer வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங...

1,114ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... TRB அறிவிப்பு

ஆசிரியர் பணிக்கு அவகாசம் அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு பள்ளிகளில், 1,114 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், ஏற்கனவே, 'டெட்' தகுதித் தேர்வு முடித்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேராதவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, மே, 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்கள் மற்றும் சுயவிபரங்கள் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அவர்கள், மீண்டும் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருமா லோக்பால் சட்டம் ?

லோக்பால் சட்ட தாமதத்துக்கு என்ன காரணம்? லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான தேர்வு கமிட்டியை அமைப்பதில் மோடி அரசு தாமதம் செய்து வருகிறது. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை... எதிர்கட்சித் தலைவர் இல்லை ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே உள்ளிட்டவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013-ல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். அதன்படி இப்போது லோக்பால் அமைப்பை உருவாக்கவேண்டும். லோக்பால் அமைப்பில் இடம்பெறுபவர்களைத் தேர்வு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட வேண்டும். தேர்வு கமிட்டியில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட நிபுணர், எதிர்க்கட்சித் த...

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 2017 சிறப்பு பார்வை

🍏 *ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு* 🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 🥀 மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 🥀 பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும். 🥀 சிறப்பு முன்னுரிமை கோருபவர்கள் உரிய சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அசல் சான்றிதழை உ.தொ.க.அலுவலரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும். 🥀 ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தளத்தில 06.05.17 முதல் 10.05.17 வரை பதிவு செய்யப்படும். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்கள் 11.05.17 முதல் 13.05.17 வரை அலுவலகத்திற்கு நேரில் வந்து...

மே 17 இயக்கம் - கீழடி மீட்க போராட்டம்

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது. தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள் ஆதாரம் கொண்டும் எழுதி வருகிறோம். அது சிந்துசமவெளியின் தொடர்ச்சியாக இருப்பது தெள்ளத்தெளிவானது. தமிழர்களின் வரலாற்று ஆய்வின் தொடர்ச்சியாக கீழடி தொல்லியல் ஆய்வு அமைந்திருப்பதும் அங்கிருந்து கிடைக்கிற புதிய தரவுகள் தமிழுக்கு செழுமை தரக்கூடியதாகவும் இருக்கிறது. கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப் பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை ஏற்று மிக சிறப்பாக நடத்தி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த குறிப்பாக சங்ககால மக்கள் வாழ்ந்த, வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48 ...

GROUP 2 TNPSC 2017

குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், "தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953 தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி – (i) உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ii) நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும்...

அரசு ஊழியர் வேலைநிறுத்தம் - பேச்சுவார்த்தை தோல்வி

⭕ *_6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி_* 🔵     _அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது._ 🔵   _புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள எழிலக வளாகத்தில் ஒரு சில துறைகளை தவிர மற்ற துறை அலுவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் எழிலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்._ 🔵  _பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன், கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன்,_ _தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் நாளை முதல் த...

TNPTF செயற்குழு முடிவுகள் 23.4.17

_*🔷🔹TNPTF விழுதுகள்🔹🔷*_ .                   *தமிழ் நாடு*      *ஆரம்பப்பள்ளி ஆசிரியர்*                      *கூட்டணி* *23.4.2017 மதுரை மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானச் செயற்துளிகள்* 🔸🔹 பிப்ரவரி-03 இயக்குநரக முற்றுகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்தாததை அடுத்து *10.5.17-ற்குப்பின்* 6 பெண் நிர்வாகிகள் உட்பட 19 மாநில நிர்வாகிகள் *இயக்குநரக வாயிலில் காத்திருப்புப் போராட்டம்.* 🔹🔸 அதே நாளில் அனைத்து *மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலக*த்தில் மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் *காத்திருப்புப் போராட்டம்.* 🔸🔹 *தமிழக விவசாயி*கள் நலனை முன்னிட்டு *25.4.17*-ல் நடைபெறும் *முழு அடைப்பிற்கு ஆதரவு* தெரிவிப்பதோடு அன்று நடைபெறும் *போராட்டங்களில்* இயக்க உறுப்பினர்களும் திரளாகக் *கலந்து கொள்ளுதல்.* 🔹🔸 *25.4.17 முதலான TNGEA*-யின் *காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட*த்திற்கு முழு *ஆதரவு* தெரிவிப்பதோடு, அதற்காக *STFI 27.4.17-ல்* அறிவித்துள்ள *மாவட்டத் தலை...

TET NEWS

டெட்' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்! 'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார். அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்: ● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும் ● யாரு...

III TERM QUESTIONS VI to VIII PDF

click here PDF download

III TERM VI to VIII QUESTIONS 2017

click here PDF

III TERM QUESTIONS 2017

Primary 1 to 5 questions Tamil medium - printable version click here for PDF

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK