அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு
💥💥அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு சென்னை, பிப். 17– அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்தது. வெள்ளிக்கிழமை முதல் அரசு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு துறையின் முக்கிய அலுவலகங்கள் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் எழிலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எவ்வித அறிவிப்பும் இடம் பெறாததால் ஏமாற்றம் அடைந்த அரசு ஊழியர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளதால் இன்ற...