Skip to main content

MENU

Show more

JACTTO போராட்டம் - முதல் நாள்

மாநிலம் முழுவதும் ஆசிரியர் போராட்டம்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வலியுறுத்தல், 6வது ஊதிய குழு பரிந்துரைத்த படிகள் வழங்க வேண்டும் , புதிய பென்சன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல், தாய்வழி தமிழ் பாடத்தை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை மற்றும் தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல், தமிழ் வழிக்கல்வி திட்டத்தை செயல்படுத்துதல் , மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஜேக்டோ சார்பில் இன்று முதல் 3 நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் .
இதனால் இன்று மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் .போரட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய ஆசிரியைகளை போலீசார் கைது செய்து பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர் .

திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மதுரையில் 500 பேர் , நீலகிரியில் 324 பேர், கோவையில் 950 பேர் , இது போல் நெல்லை கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் , தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டனர் .
வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படுவதால் பயிற்றுனர்களை வைத்து பள்ளிகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் 1ம் தேதி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது . போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகளின் பெயர் விவரத்தை மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாவும் கூறப்படுகிறது . ஆனால் போராட்டத்தை வலுப்பெற செய்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் ஆசிரியர் கூட்டமைப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27