MENU

Show more

HSC RESULTS ANNOUNCEMENT

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது.

நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7ம் தேதிக்கு பின், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

Source  : 

• THE SEITHIKATHIR 

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK