ப்ளஸ் 2 ரிசல்ட் 2015 விவரம்
பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை சென்னை : பிளஸ் -2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது வழக்கம் போல் மாணவிகளே முதலிடத்தை பிடித்துள்ளனர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இணையதளங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4 பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார் முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்: செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள், நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர் பிளஸ் 2 தேர்வு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாண...